இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாலு அண்ணா!

Friday, November 06, 2009

854 தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே



//உயிரே நம் உறவு என்னும் அகராதியில்.. பிரிவு என்னும் ஒரு வார்த்தை கிடையா..தம்மா
ஆஆஆஆ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்.. ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடிவிடக்கூடும் வாசமலர் தான்.. வாடுவது ஏது பாசமலர் தான்.. மாறாது மறையாது மனம் வீசுமே// இந்த வரிகளை என் மனதை கவர்ந்தவை, ரொம்ப நாள் கழித்து தங்கச்சி செண்டிமென்ட் பாடல் பாலுஜி குரலில் கேட்கிறேன் பொதுவாகவே பாலுஜி தங்கச்சி பாசப்பாடல் என்றால் மெழுகாக உருகுவார் இதோ மாநகர காவல் படத்தில் வரும் தங்கைப்பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்ற் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

படம்: மாநகர காவல்
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:விஜயகாந்த்
இசை:சந்திரபோஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக் கனவே வஞ்சி நிலவே
நாம் இங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
கொடி மின்னலே.....

மணமாலை மாங்கல்யம் நாளை வரும்
மணவாளன் துணை சேர வேலை வரும்
ஆஆஆஆ எல்லோரும் உன்னை வாழ்த்த காலம் வரும்
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும்
தங்கையொரு தாயாய் பிள்ளை பெறலாம்
பிள்ளைக்கு இந்த ஹஹமாமன் சீர்வரிசை தரலாம்
நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன்

தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக் கனவே வஞ்சி நிலவே
நாம் இங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
தலைவாரி பூச்சூடும் இளம் தெ..ன்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
கொடி மின்னலே.....

உயிரே நம் உறவு என்னும் அகராதியில்
பிரிவு என்னும் ஒரு வார்த்தை கிடையா..தம்மா
ஆஆஆஆ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்
ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடிவிடக்கூடும் வாசமலர் தான்
வாடுவது ஏது பாசமலர் தான்
மாறாது மறையாது மனம் வீசுமே

தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக் கனவே வஞ்சி நிலவே
நாம் இங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..