T.R. & Bala - # 13 : மாலை எனை வாட்டுது
பூக்களைப் பறிக்காதீர்கள் படம் வெற்றிகரமாக ஓடியது. முக்கிய காரணம் இனிமையான பாடல்கள். சுரேஷ்-ம் நதியாவும் நடித்தது. நதியா நதியா என்று ஜுரத்தோடு தமிழ்கூறும் நல்லுலகு பிதற்றிய காலகட்டம். பாலுவும் ஜானகியும் இந்தப் பாடலை அட்டகாசமாகப் பாடியிருக்கிறார்கள்.
பிறையே பிறையே மூன்றாம் பிறையே
வானவில் படத்தில் வரும் இந்த சிறிய சோகப்பாடல் தினமும் அலை பாயும் நம் மனதில்
அமைதியை ஏற்படுத்தும். இந்த பாடலிலும் வரிகள் அருமையாக எழுதப்பட்டிருக்கும். அதே போல் இசையமைப்பில் துவக்கத்திலும், முடிவிலும் அமைதியான இசை எல்லோரையும் கவரும். இந்த பாடலையும் பாலு மிகவும் அனுபவித்து பாடியிருப்பார்.
ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி
மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைப்பில் ரயிலின் சீரான ஒட்டத்தின் இசையோட வரும் இந்த பாடலின் துவக்கத்தில் உற்சாகமாக ஆரம்பிக்கும் இந்தப்பாடல் மீண்டும், "மீண்டும் ஒரு காதல் கதை" என்ற படத்தில் வரும் பாடல் இந்த பாடல் நம் மனதை காத்தாடி போல் உயர தூக்கிச்செல்லும்..
3தாமிரபரணி ஆறு
நெல்லை மாவட்டத்தில் இருப்பவர்கள் தாமிரபரணி ஆற்றின் அழகை வெகுவாக ரசித்துருப்பார்கள். நான் ஒரு தடவை சுற்றுலா சென்றிருக்கிறேன். தாமிரபரணி என்ற அழகான பெயர் கொண்ட புதுப்படம் ஒன்று வந்திருக்கிறது. படம் எப்படி இருக்குமோ தெரியாது. நான் அந்த படத்தை பற்றி எதுவும் சொல்ல வரவில்லை.
அட என்னடா பொல்லாத வாழ்க்கை
போட்டோ: நன்றி ரஜினி ரசிகர் குழு
படங்களின் பெயர் வைப்பதிலேயே யோசிக்கவைத்தவர் இயக்குனர் திரு . கே. பாலசந்தர் அவர்கள். அவரின் படங்களுக்கு வித்தியாசமான பெயர் வைப்பதில் கில்லாடி. அவர் படத்தின் பெயரிலேயே அதிகபட்ச கதையையும் அடக்கிவிடுவார். அந்த வகையில் வந்த ஒரு படம் தப்புத்தாளங்கள் இதே போல் தற்போது திரு.
கூவுற குயிலு சேவலப்பார்த்து
திரு. தேவா இசையமைப்பில் பாலு, ஜானகி மேடம் பாடிய பாடல் சோலையம்மா படம் திரு.கஸ்தூரிராஜா டைரக்சனில் வெளிவந்தது. இந்த படத்தில் எல்லாப்பாடல்களூம் அழகான பாடல்கள். துவக்கத்தில் பாலு வசனத்துடன் பேசி குழல் ஓசையுடன் எஸ்.ஜானகியுடன் சேர்ந்து பாடும் இந்த பாடல் மனசுக்கு இதமாக இருக்கும்.
அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன்
பொல்லாதவன் படத்தில் இந்தப் பாடலை பாலுவும் வாணிஜெயராமும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை மெல்லிசை மன்னர்.
4ஹே நவிலே
ரவிச்சந்திரன், ரஜினி, ஜுஹி சாவ்லா நடித்த (டப்பா) படமொன்றைப் பார்த்திருக்கிறேன். ரவியின் கன்னடப் படங்களெதையும் பார்த்ததில்லை - பார்க்கும்படியான கன்னடப்படங்கள் எதுவென்று தெரியாததாலும் எதையம் பார்க்கவில்லை.
1T.R. & Bala - #12 : பூ ஒன்று வளர்த்தேன் வாசமும் இல்ல
என் தங்கை கல்யாணியில் இன்னொரு தங்கச்சிப் பாடல் - ஆனால் பாலுவின் குரலுக்காகக் கேட்கலாம். சரணத்திற்கு முன்பு வரும் வயலின் இசையும் புல்லாங்குழல் இசையும் அருமை.
T.R. & Bala - # 11 : தோள் மீது தாலாட்ட
என் தங்கை கல்யாணி (1983) படத்தில் டிஆர் இசையில் பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் இந்த அழகான தாலாட்டுப் பாடலைக் கேட்போமா?
தோள் மீது தாலாட்ட
என் பச்சக் கிளி நீ தூங்கு
தாய் போலத் தாலாட்ட
என் தங்கமே நீ தூங்கு
நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்
தோள் மீ
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
S.A. ராஜ்குமார் இசையில் அந்த அருமையான மெல்லிசைப் பாடலை பாலு அழகாகப் பாடியிருக்கிறார். இதே பாடலைச் சித்ராவும் பாடியிருக்கிறார்.
1தேவதை இளம் தேவி
ஒரு பழைய நகைச்சுவை ஒரு புத்தகத்தில் படித்த நினவு ஒருவர் மற்றவரிடம் உங்க சம்பள பணத்தை வாங்கி என்ன செலவு செய்வீங்க என்று கேட்பார். அதற்கு பதில் மற்றொருவர் என் அலுவலகத்தில் வரும் பேயை (சம்பளம்) வாங்கி கொஞ்சம் செலவுக்கு எடுத்துக்கொண்டு என் வீட்டில் இருக்கும் பிசாசிடம் கொடுத்து விடுவேன் என்பார்.
தங்கபதக்கத்தின் மேலே..ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ
வெங்கலக்குரலின் ஒரே சொந்தக்காரர் திரு. டி.எம்.சவுந்திராஜன் அண்ணா அவர்களின் ஒர் அற்புதமான ஒரு பழைய பாடலின் ரீமிக்ஸ் ஒன்றை பாலு குரலில் கேட்போமா நண்பர்களே?.
ஒரு வித்தியாசத்துக்காக இந்த பதிவில் போடலாம் என்ற இந்த பாடலை தேர்வு செய்திருக்கிறேன். செவாலியே சிவாஜி அவர்களூக்கும் மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
1995 ஆம் வருடத்தில் வெளிவந்த ஜனரஞ்சக டைரக்டர் திரு.கே.ஏஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் வெளிவந்த படம் சேரன் பாண்டியன். இந்த படத்தில் திரு.சரத்குமார், திரு.ஆனந்த் பாபு நடித்த படம் கிராமத்து சூழ்நிலையில் எடுத்த படம். இந்தப்பாடல் சரணங்களில் ஒரு மெல்லிய சோகத்துடன் வரும் இந்த வரிகள்..
4கடவுள் அமைத்து வைத்த மேடை
என் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது விவரிக்கப்படும் சம்பவங்களுக்கேற்பக் கூர்ந்து கவனிக்கும் அவர்களின் முகபாவங்கள் மாறுவதைப் பார்த்து ரசித்து சிரிக்காமல் அடக்கிக்கொண்டு கதை சொல்வேன். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும்.
2வேல வேல வேல மேல வேல வேல
நண்பர்களே ஒரு பயங்கரமான சுறுப்சுறுப்பான பாடல் கேட்போமா? அதென்ன
பயங்கரமான சுறுப்சுறுப்பான பாடல் என்று தாங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது மொதல்ல
இத்த படிச்சிட்டு பாட்டை கேளூங்க ஏன் சொன்னேன்னு புரிந்துகொள்வீர்கள்.
ஓ ஓ தென்றலே.. என் தோளில் சாய வா..
என்றென்றும் காதல் வாழ்க என்ற படத்தில் வரும் இந்த அற்புதமான மெலோடி பாடல் இந்த ப்ளாகில் பதிய வேண்டும் என்று என் நீண்ட நாள் கனவாக இருந்தது. முன் பல பதிவுகளில் நான் மறுமொழி எழுதியிருக்கிறேன். எதற்கும் ஒரு காலம் வரவேண்டுமல்லவா? அந்த காலம் இதோ இப்போது வந்துவிட்டது.
2தோளின் மேலே பாரம் இல்லே
இந்தப் பாடலை பாலுதான் பாடியிருக்கிறார் என்று யாரும் சொன்னால்தான் தெரிந்துகொள்ள முடியும். குரலை மாற்றி வித்தியாசமாகப் பாடியிருக்கிறார். இந்தப் பாடலை நான் பார்த்ததில்லை என்பதால் எப்படிப் படமாக்கியிருப்பார்கள் என்று தெரியவில்லை.
2ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
இந்தப் பாடலின் ஆரம்ப இசையைக் கேட்டால் வேறு ஏதோ பாடல் வரப்போகிறது என்றுதான் தோன்றும். பிறகு இனிமையான ஆலாபனையுடன் ஜானகி அழகாக ரோஜாவைத் தாலாட்டும் தென்றலைத் துவக்க, பாலு பொன் மேகம் நம் கண்கள் என்று கொண்டு செல்வார். இருவரும் வழக்கம்போல அற்புதமாகப் பாடியிருக்கும் பாடல் இது.
1நீதானே எந்தன் பொன் வசந்தம்
நினைவெல்லாம் நித்யாவில் இன்னொரு அற்புதமான தனிப்பாடல் பாலு பாடிய இந்த "நீதானே எந்தன் பொன் வசந்தம்" பாடல். "நீதானே" என்று அவர் உணர்வுப் பூர்வமாக உச்சரிப்பதை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். பாடலை மிகமிக இனிமையுடன் பாடியிருக்கிறார் பாலு.
2SPB-40 "இறைவன் சபையில் கலைஞன் நான்"
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வண்ணங்கள்
நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தேன்.. இங்கு வந்தேன்..
Inking the Immortal
Foreword
Music is the vernacular of human the soul, I don’t know about the author of this quotation, but the quote is cent percentage true. You can’t figure out a single person who hates music.
SPB - 40 : A Saga of Love # 4
PRODIGY..
Rather than explaining PRODIGY, just visit http://www.prodigyhub.org/ and If I start to write about my Part-4, now, It’ll never end. And SPB launched this website.
Written By
- S.
SPB - 40 : A Saga of Love # 3
Shelter of Songs
-S.Balasubramanian
It was my critical time. No one can get success always, bad patches are applicable even to greats like Bradman and our own Sachin. If no bad time, then he is not at all a human-being, he is god. But the thing is we should remain as human-being.
SPB - 40 : A Saga of Love # 2
Preludes to part 2
1. Came to his name is SP Balasubramanium, same as my name, shortly called as SPB.
2.
SPB - 40 : A Saga of Love # 1
தமிழாக்கம் செய்ய நேரமில்லையாதலால் பாடும் நிலா பாலுவின் அதிதீவிர பக்தன், எனது நண்பர் எஸ்.பாலசுப்ரமணியன் எழுதிய கட்டுரையை ஆங்கிலத்திலேயே உள்ளிடுகிறேன். நன்றி.
******
For the first time, I disclose my secret love towards SPB.
பனி விழும் மலர் வனம்
நினைவெல்லாம் நித்யாவில் (1982) எத்தனை அருமையான பாடல்கள்! ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
இந்தப் பாடலைப் பற்றி நிறைய விளக்கவேண்டியதில்லை. பாலுவின் குரல் இனிதா, கூடவே வரும் கிடாரின் இசை இனிதா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்து வரும் அருமையான பாடல் இது.
ஒரு பூவனத்துல சுகம் குளுகுளுங்குது
படம் நன்றி: ரஜினிரசிகர்கள்.காம்
இதுவரை நான் பார்த்த தமிழ்ப் படங்களில் ஒரு பேருந்தும் முக்கிய பாத்திரமாக வந்திருப்பது இரண்டு படங்களில். ஒன்று கழுகு. இன்னொன்று காதலன்! கழுகின் சொகுசுப் பேருந்தை மறந்திருக்க மாட்டோம்.
ஒரு ஜீவன் தான் # 2
தமிழ்ப் படங்களில் குடித்துவிட்டுப் பாடுவதுபோல அமைக்கப்பட்டிருக்கும் பாடல்களில் சில பிரபலமானவை. அநேகமாக எல்லாப் பாடகர்களும் அப்படிப்பட்ட பாடல்களை விக்கலுடன் பாடியிருக்கிறார்கள். :-)
பாலுவும் எக்கச்சக்கமாக இந்த வகைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் - கிட்டத்தட்ட எல்லா நாயகர்களுக்கும்.
ஒரு ஜீவன்தான் # 1
நான் அடிமை இல்லை (1986) படத்தில் சூப்பர் ஸ்டாரும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள். த்வாரகேஷ் இயக்கியது. இசை விஜய் ஆனந்த். மற்றபடி விசேஷமாகப் படத்தில் எதுவும் இல்லை என்று சொல்லவேண்டும். கன்னடத்தில் வந்து தமிழில் டப் செய்தார்களா அல்லது தமிழில் வந்து கன்னடத்திற்குப் போனதா என்று நினைவில்லை.
1அதிகாலை நேரமே, புதிதான ராகமே
சுறுசுறுப்பான வயலின் இசையில் தொடங்கும் காலை இளம்தென்றலை போல இன்றைய பனிக்காலத்தின் சில்லென அற்புதமான மெலொடி பாடலாக வரும் இந்த அதிகாலை நேரமே பாடல் உங்களுக்கு நிச்சயமாக புத்தம் புதிய ராகமாக தான் இருக்கும். இதில் சந்தேகமே வேண்டாம்.
1கன்னிப்பெண்ணே..உன் உடலில்
கன்னிப்பெண் இந்த படத்தில் பாலு அற்புதமான பாடல்கள் பாடியுள்ளார் மற்றும் கன்னிப்பெண்ணே என்ற பெயரில் பல படங்களில் பல ஸ்டைலில் பாடல்களூம் மெலோடியாக பாடியுள்ளார் இது யாவருக்கும் தெரிந்ததே. பாலு ரசிகர்க்ளுக்கும், இணையதள பதிவாளர்களுக்கும் என் அன்பு வேண்டுகோள்.
2தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
அமராவதி படத்தில் இருக்கும் இன்னொரு அருமையான பாடல் இது. ஆரம்ப இசை அப்படியே நம்மை சொக்கவைக்கும். ஹஸ்கி குரலில் பாலு பாடலை ஆரம்பிப்பது மிகவும் இனிமை. பாலுவும் ஜானகியும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். சரணங்களுக்கிடையில் வயலின்கள் புகுந்து விளையாடுகின்றன.
3ஏ உன்னைத் தானே
மதுரை பழங்காநத்தத்தில் பேருந்து நிலையம் வருவதற்கு முன்பான காலகட்டம். ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதியாக இருக்கும் இடம். தினமலர் அலுவலகம் அப்போது அங்கே இருந்தது. அதைத் தாண்டி நூறடி போனால் ஒரு மாரியம்மன் கோவில் கிட்டத்தட்ட நடுச் சாலையில் இருக்கும். நான் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்ட பகுதி அது.
பூவே உன்னை நேசித்தேன்
இது ஒரு எளிமையான காதல் பாடல். ஊடல் கொள்ளும் காதலியிடம் காதலன் கெஞ்சுவது போல எத்தனையோ பாடல்கள் திரைப்படங்களில் வந்திருக்கின்றன. அவற்றில் இப்பாடலும் ஒன்று. ஆனாலும் பாலு, ஜானகியின் குரல் இனிமையினால் பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது.
8இதழே இதழே தேன் வேண்டும்
நடிகர் திலகம் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இருவருக்கும் சில பாடல்களே பாலு பாடினாலும் எல்லாப்பாடல்களும் அற்புதமானவை. 1975 ஆம் வருடம் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த இதயக்கனி படத்தில் இந்தப்பாடலை கேட்பதற்கு முன்..
3சாமிகிட்ட சொல்லிவச்சி
ஆவாரம்பூவில் இன்னொரு அற்புதமான பாடல் இருக்கிறது. பாலுவும் ஜானகியும் பாடியிருக்கிறார்கள். சரணத்தில் பாலு "கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே" என்று பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலத் தோன்றும். ஜானகி பற்றிச் சொல்லவே வேண்டாம்.
இனிமையான பாடல்.
அவக்கண்ணப்பார்த்தா
பெண்ணைப்பத்தி வர்ணிக்கும் பாடல்கள் நிறைய கேட்டிருப்பீர்கள் இது ஒரு வித்தியாசமான பாடல். 2002 ஆண்டு திரு.பரணி இசையமைப்பில், திரு சக்தி சிதம்பரம் டைரக்சனில் வெளிவந்த சார்லி சாப்ளின் படத்தில் பாலுவுடன் சேர்ந்து ஹரிஷ் ராகவேந்திரா பாடியிருக்கும் இந்த அற்புதமான பாடலை கேளுங்கள்.
3எடுத்து நான் விடவா என் பாட்டை
அற்புதமான ஒரு இசை ஜோடியின் அழகான பாடல் ஒன்றை இங்கே பதிய வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை. அதுமட்டுமல்லாமல் யாரும் இந்த பாடலை அதிகம் கேட்க வாய்ப்பில்லை என்று நினக்கிறேன் அந்த மாதிரி அதிகம் கேட்க வாய்ப்பில்லாத பாடல்கள் பதிவில் போட வேண்டுமென்று தான் என் ஆசையும்கூட.
2துள்ளித் துள்ளி
சிப்பிக்குள் முத்துவில் கமல் வியக்க வைக்கும்படியான உடலசைவுகளுடன் சில அற்புதமான காட்சிகளில் நடித்திருக்கிறார். சலங்கை ஒலிக்குப் பேசியது போல சிப்பிக்குள் முத்துவில் தமிழில் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை என்பது அவருக்குத்தான் வெளிச்சம். என்ன வியாபார ரீதியான பிரச்சினை என்று தெரியவில்லை.
6அடுக்கு மல்லி
மலையாள திரையுலகில் முக்கியமான இடத்தைத் தக்கவைத்திருந்தவர் இயக்குநர் பரதன். "தேவர் மகன்" படத்தை இயக்கிய பரதன் என்றால் சட்டென்று நமக்கு நினைவுக்கு வரும். தமிழில் அவர் இயக்கிய படங்களில் முக்கியமான இன்னொரு படம் ஆவாரம் பூ.
4புத்தம் புது மலரே என் ஆசை
அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் பாலு பாடிய சத்தம் இல்லாத தனிமை வேண்டும் என்ற ஒரு சுறுசுறுப்பான பாடல் விரைவான தாளத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் அற்புதமான வரிகளில் இந்த பதிவில் முன்னமேயே கேட்டிருக்கோம் அல்லவா.
5ராமன் கதை கேளுங்கள்
இந்தப் பாடல், படமாக்கம், இசை, நடிகர்களின் நடிப்பு, பாலுவின் குரல் எல்லாம் சேர்ந்து மொத்தமாக ஒரு அழகிய கவிதை.
5அழகிய விழிகளில் அறுபது கலைகளும்
1982 ஆம் வருடம் வெளிவந்த டைரக்டர் திரு. கே.பாக்யராஜ் அவர்கள் நடித்து வெளிவந்த
டார்லிங்.. டார்லிங்.. டார்லிங் படத்தில் ஏற்கெனவே இந்த பதிவில் ஓ நெஞ்சே என்ற பாடலை
வழங்கியிருக்கிறோம். இதே படத்தில் ஒரு ஜாலியான பாட்டு அழகிய விழிகளில் என்ற பாடலை
திரு சங்கர் கனேஷ் இசையமைத்து திரு.