516 சின்ன கண்ணன் தோட்டத்தில்
செந்தூரப்பூவே என்ற படத்தில் ஏற்கெனவே செந்தூரப்பூவே தேன் சிந்தவா என்ற ஒரு டூயட் பாடலை இதே தளத்தில் திரு.யாழ் சுதாகர் சார் தொகுப்பில் கேட்டுள்ளோம். அதே படத்தில் இதோ ஒரு சுறுசுறுப்பான தாளத்தில் ஒரு பாடல் கேட்பதற்கு மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும் திரு.
2517. நீ ஆண்டவனா
வானமே எல்லை படத்திற்கு மரகதமணி இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய ஹிட். வித்தியாசமான மெட்டு, இசை என்று ஒவ்வொரு பாடலும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருக்கும்.
பாலுவும் சித்ராவும் பாடியிருக்கும் இந்தப் பாடலில் மெலிதாக விரவியிருக்கும் சோகம் மனதை என்னவோ செய்யும்.
518. "500- Soul Soothing Success"
"Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful" once a famous Musician and Philosopher Albert Schweitzer quoted. Writing a blog is not at all an innovative idea, nor writing a musical blog.
1515. எனைத் தேடும் மேகம்
கண்ணோடு கண் படத்தில் வரும் இந்தப் பாடலை வாணிஜெயராமும் பாலுவும் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். ரதியே என்று பாலு முடித்ததும் வாணிஜெயராம் 'ஆஆஆஆஆ' என்று செய்யும் ஆலாபனை நம்மைப் பரவசப்படுத்துகிறது என்றால் வாணி அழகே என்று முடித்ததும் பாலு செய்யும் ஆலாபனை நம்மை மேகங்களில் சஞ்சரிக்க வைக்கிறது.
1514. T.R. & Bala - # 15: தங்க நிலவே உன்னை உருக்கி
தே.ராஜேந்தரின் பாசமலர் தங்கைக்கோர் கீதம் படம். நல்ல பாடல்கள் பல இப்படத்தில் இருக்கின்றன. ஆனாலும் 'தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி' பாடலை மட்டும் குறிப்பிட்டு கேலி செய்வது சிலருக்கு வழக்கம். அதை விடுங்கள்.
எளிய இசையில் புல்லாங்குழல் கூட வர பாலு அருமையாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் இனிய பாடல்.
513சின்னப்பூவே மெல்லத் தூங்கு
இசையமைப்பாளர் திரு. தாணு இசையமைப்பில் அழகு மயில் தோகை பாடல் ஒன்றை புதுப்பாடகன் படத்தில் கேட்டோம். இதே படத்தில் ஒரு தாலாட்டு பாடல் கேட்க மனதிற்கு இதமாக இருக்கும். இந்த படத்தில் நடித்த நடிக நடிகையர் யாரென்று தெரியவில்லை. பாடல்கள் எல்லாவற்றையும் பாடியிருப்பார் பாலு.
2512சம்சாரம் என்பது வீணை
1975 ஆம் ஆண்டு வெளிவந்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தில் வரும் இந்த பாடல் சம்சாரம் என்பது வீணை அந்த காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான பாடல். இத்தனை நாள் இந்த தளத்தில் பதியாதது ஆச்சரியம் தான்.
13511. ஆலோலம் கிளி தோப்பிலே
சிறைச்சாலை படத்தில் இன்னொரு இனிமையான பாடல் பாலு சித்ரா ஆகிய ஆலோலங்கிளிகள் ரெண்டும் பாடிய இந்தப் பாடல். வழக்கமான மெட்டுகளிலும் தாளக்கட்டுகளிலும் அடங்காத இன்னொரு வித்தியாசமான மெட்டு இசைஞானியிடமிருந்து. அழகான பாடல். தபுவுக்காகத் தபதபவென்று ஓடிவந்து பார்த்த கூட்டம் அதிகம் என்ற நினைக்கிறேன்.
1510தேவி நீயே..ஏஏ..ஏஏ
ஆசைகள் படத்தை யார் பார்த்தார்கள்? யாருக்காகவது படத்தின் தகவல்கள் தெரிந்தால் தரலாம். இந்த படத்தில் வரும் சோகப்பாடலை பாலு அவர்கள் மிகவும் உருக்கமாக பாடியிருப்பார். பாடலுக்கு அமைந்த மெட்டும் ரசிக்கும்படியாக இருக்கும்.
படம்: ஆசைகள்
பாடியவர்: பாலு
இசை: சங்கர் கனேஷ்
தேவி நீயே...
509 அழகு மயில் தோகை விரித்தாடுது
ஓர் பரதப்பாடல் கேட்போம். புதுப்பாடகன் என்ற படத்தில் வரும் இந்த பாடலுக்கு வரிகள் எழுதி இசையமைத்தது இசையமைபாளர் தாணு. இந்த படத்தை யார் பார்த்தார்கள் பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த பாடலின் சிறப்பம்சமே பாடல் இடையில் வரும் அழகான ஜதிகளூம், ஆலாபனைகள் நம் மனதை திருடிவிடுகின்றன.
508. செம்பூவே பூவே
சிறைச்சாலை (1996) என்னுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியதோர் படம். அந்த சமயத்தில் வரிசையாக பல்வேறு மலையாளப் படங்கள் தமிழகத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டன. மம்மூட்டி மோகன்லால் என்று மாற்றி மாற்றி அருமையான படங்களை நமக்குக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
3507கார்த்திகை மாதம் கார்காலம்
வண்டிக்காரன் மகன் இந்த படத்தில் "மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே" என்ற அழகான டூயட் பாடலை இந்த தளத்தில் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இதே படத்தில் ஒரு "கில்பான்ஷ்" பாடலை கேட்போமே. இந்த பாடல் சிலபேருக்கு பிடிக்காம போகலாம். அவர்கள் தயவுசெய்து மன்னிக்கவும்.
2506தென்றலுக்கு என்றும் வயது
1976ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவித்துவமான வரிகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த அழகான பாடல் இந்த பயணம் படப்பாடல். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கு ஒவ்வொரு இசையமைப்பு ஸ்டைல் உண்டு. மெல்லிசை மன்னருக்கே உரிய ஸ்டைலில் இந்த பாடலில் பாலு அவர்களை பாடவைத்து பட்டையை கிளப்பியிருப்பார்.
505மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பாசமுள்ள தங்கச்சி மீது பாடும் பாட்டு இது சாமுண்டி இந்த படத்தை எனக்கு சுத்தமாக பார்த்ததாக நினவில்லை. ஆணால், பாலு அவர்கள் இந்த பாடலை மிகவும் உருக்கமாக பாடியிருப்பார். அவரின் குரலுக்கு சிகரம் வைத்தார் போல பாடல் வரிகள் நம் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்யும்.
2504.வெல்கம்..ம்..ம்..ம்
இந்த தளத்தில் பாலு அவர்கள் பாடிய என் பதிவுகளை கேட்டு வருகிறீர்கள். எங்கள் கொங்கு மாநகரம் கோவையை பற்றி சில சுற்றுலா தளங்கள் பாலு அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள். இந்த பாடல் திரு. பாக்கியராஜ் டைரக்சனில் "சுவர் இல்லாத சித்திரங்கள்" என்ற படத்தில் வரும் பாடல்.
3503.நிலவும் மலரும் சென்னை நிகழ்ச்சி
19.8.2007 ஞாயிறு அன்று அதிகாலையில் வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ஒரு நாளிதழ் வாங்கிகொண்டு வீட்டில் வந்து முதலில் திறந்த பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் பக்கம் தான்.
8501. சென்னை 600028 - நூறாவது நாள் விழா
சின்னக்குட்டியின் பதிவிலே இந்த ஒளிக்கோப்புகளைக் கண்டேன். அவருக்கு நன்றி.
இறுதிக் கோப்பின் இறுதியான நிமிடங்கள் நெகிழ வைப்பதாக இருந்தன. ஏற்கெனவே பாலு ரசிகர்களின் Yahoo குழுமத்தில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து SPB Foundation ஒன்றை ஏற்படுத்தியிருப்பதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.
நீ ஆண்டவனா.. - 500 வது பதிவு
H Ramakrishnan receiving a award from Justice Bhaktavatsalam, Judge, Madras High Court, for his performance in the film Vaaname Ellai.
http://www.hramakrishnan.com/aboutme.htm
மேலே உள்ள போட்டோவில் உள்ள திரு. ராமகிருஷ்ணன் தெரிந்து இருப்பீர்கள். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.
வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர
கிராமச்சூழ்நிலையில் பாட்டு வேண்டுமென்றால் பாலு அவர்களின் பாடல் தான் கேட்கவேண்டும். வார்த்தை உச்சரிப்பால் அப்படியே நம்மளை கிராமத்துக்கே தூக்கிச்சென்று விடுவார். இதே இந்த பாடல் "வண்டிக்காரன் சொந்த ஊறு மதுர" பாடலின் பல்லவியே அமர்க்களமாக இருக்கிறது. இசை வேறு யார் சந்திரபோஸ் தான்.
3ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்! :-)
இந்த ஒளிக்கோப்பை அறிமுகப்படுத்திய சின்னக்குட்டி அவர்களுக்கு நன்றி.
ராஜாவின் பார்வையை மோகன்லால் வீசுவது அழகாகத்தான் இருக்கிறது. அவர் 'சின்ன எம்ஜியார் மாதிரி இருக்கிறார்' என்று குறிப்பிட்டால் அரசியலாகிவிடுமோ?
டிஎம்எஸ் அவர்களின் பாடலை பாலு அவர்கள் பாடுவது அழகு.
தண்டால் எடுங்கடா...
தெற்குத்தெரு மச்சான் இந்த படத்தில் எல்லா பாடல்களூம் பாலு அவர்கள் பாடியுள்ளார். பாடல்கள் எல்லாவற்றையும் பாடலாசிரியர் திரு. காளிதாசன் எழுதியுள்ளதில் ஏற்கெனவே லொக்கு லொக்கு இருமலு என்ற புகைப்பிடிப்பவர்களுக்காக ஒரு பாடல் இந்த தளத்தில் கேட்டோம்.
2கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்
சத்யம் (1976) படத்தில் வரும் இந்தப் பாடலை சிறுவயதில் பலமுறை கேட்டிருக்கிறேன். கமல்ஹாஸனும் ஜெய்சித்ராவும் நடித்திருக்கிறார்கள். இசையமைத்திருப்பவர் கே.வி.மகாதேவன் அவர்கள். பாலுவும் வெள்ளைக்குயில் சுசீலாம்மாவும் பாடியிருக்கிறார்கள்.
தாயின் மணிக்கொடி
அனைவருக்கும் இந்திய தேசத்தின் சுதந்திர தின நல் வாழ்த்துகள்! 60 வருடங்கள் நிறைவடைந்தது - இளமையாகத் தொடருகிறது இந்தியா!
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்த
ஹேய்... உன்னை..
அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.
நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தில் ஜாக்கிங் பின்னணியில் ஒர் மேலோடி பாடல் ஏற்கனவே இந்த தளத்தில் கேட்டுள்ளோம். ஏன் சமீபத்தில் கூட அந்த பாடல ஒரு வித்தியாசமான துவக்கத்துடன் பாலு அவர்களும் ஜானகியம்மாவும் சென்னை ஒரு மேடை நிகழ்ச்சியில் பாடினார்கள்.
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
சென்னை 600 028 நூறாவது நாள் நிகழ்ச்சியின் படங்களை வழங்கிய www.indiaglitz.com தளத்திற்க்கு பாலு ரசிகர்கள் சார்ப்பாக நன்றி.
5உன்னைத்தொட்ட காற்று வந்து
ஒவ்வொரு இசையமைப்பளருக்கு ஒரு ஸ்டைல் இருக்கும் அந்த வகையில் இசையமைப்பாளர் வி.குமார் அவர்களீன் பழைய பாடல்களில் பாலு அவர்கள் அப்போதே கொடிகட்டி பறந்தார். அவருக்கு ஹம்மிங் பாடலென்றால் கிருஷ்னா ஸ்வீட் மைசுர்பா சாப்பிட்ட மாதிரி.
கண்களா ம்ம்..மின்னலா ம்ம்
இளையதளபதி விஜய் நடித்த "என்றென்றும் காதல்" என்ற படத்தில் ஏற்கெனவே "ஓ தென்றலே" என்ற மெலோடி பாடல் கேட்டோம். இதோ இன்னும் ஒர் மெலோடி பாடல், இந்தி இசைமைப்பாளர் திரு. மனோஜ்பட்நாயக் அவர்களின் அழகான சூப்பர் சோனிக் மெலோடி பாடல். "சூப்பர்சோனிக் மெலோடி பாடல்" என்று ஏன் குறிப்பிட்டேனென்றால்.
2அஞ்சு கெஜம் காஞ்சிப்பட்டு
1994 ஆம் ஆண்டு வெளிவந்த ராசாமகன் என்ற படத்தின் நாயகன் திரு.ப்ரசாந்த். இந்த படத்தில் பாலு அவர்களும் ஜானகியம்மாவும் ஒரு கிராமச்சூழ்நிலையில் அமைந்த ஒர் பாடல் பாடியிருக்கிறார்கள்.
கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.
// மாலை நேர பூங்காத்து... வீசும் அந்த மாந்தோப்பு.. உன்னோடு உக்காந்து நான் பேச...
காதல் விளையாட
1974 ஆம் ஆண்டு வெளிவந்த "கண்மணி ராஜா" படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் ஓர் அற்புதமான மெலோடி பாடல் இது. இந்த காதல் விளையாட பாட்டில் சரணத்திற்கு பிறகு வரும் இந்த ஹம்மிங்...//ஹே ஹே ஹே ஹே ஆஹா அஹா ஹா ஹா... ஆ ஆ ஹா ஹா.. ஒஹோ ஆஹா ம்ஹும்.. லா லா ஆஹா ஆ..
1சுகம் தானா சொல்லு கண்ணே
1976 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் கலக்கலான படம் மன்மதலீலை கமல் இந்த படத்தில் புகுந்து விளையாடியிருப்பார். இத்தனை நாள் சுந்தருக்காக விட்டுவைத்திருந்தேன். இந்த பாடலை எப்போதும் கேட்டாலும் படத்தை பார்த்த எல்லோருக்கும் ஒரு பெரிய மெகா கொசுவத்தி சுருள் சுத்துவது தெரியும்.
4அஞ்சாம் நம்பர் பஸ்
கானா பாடல் போல் தோற்றமளிக்கும் ஓர் பாடல் இது. நடிகர் விஜய் நடித்து வெளிவந்த "காலமெல்லாம் காத்திருப்பேன்" என்ற படத்தில் வரும் இந்த பாடல் எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்று நினவுக்கு வரவில்லை. எவ்வளவோ நினவு படுத்தியும் இந்த படத்தை கேள்விபட்டிருக்கேனே தவிர நான் பார்த்ததாக சுத்தமாக நினவு இல்லை.