Friday, May 29, 2009

779 மோஹன ராகம் பாடும்



படம்:அஸ்வினி
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா
நடிகர்கள்: அஸ்வின் நாச்சப்பா, Y.விஜயா, பானுசந்தர், ராம்ராஜ், சரன்யா
தயாரிப்பு: உஷா கிரன்

இசையன்பர்களே ஏற்கெனவே அஸ்வினி என்ற படத்தில் இருந்து ஹேய் உன்னை வெற்றி.. என்ற பாடல் இந்த தளத்தில் பதிவாகியுள்ளது எல்லோரும் அறிந்ததே இதோ இன்னொரு சூப்பர் மெலோடி பாடல். கேட்டு மகிழுங்கள்

Get this widget | Track details | eSnips Social DNA


மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ

குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ

இதழ் அங்கங்கள்..

என்னைக் கூப்பிட்டு சொல்லும்

புது அர்த்தங்கள்..

மஞ்சள் மாலையிலே மன்மதனே நினைந்து

மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ

குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ


வானில் தாரகை மடி ஓடி சேருமோ

நதிகள் பொங்கலாம் கடலில் வந்தே சேரனும்

இரண்டு கண்ணம் வெட்கம் நிறைந்த கிண்ணம்
கண்ணா உன்னை கண்டால் வெட்கம் வழியும்

சின்ன கண்ணே சிறகு கொண்ட பெண்ணே
உந்தன் காலைச்சுற்றி உள்ளம் அலையும்

சந்தோசம் தாளத்திலே...

மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ

குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ

மனமா உன்னிடம் உடல் தானே என்னிடம்

உயிரே பெண்ணிடம் உணர்வு தானே என்னிடம்

இந்த அங்கம் செதுக்கி வைத்த தங்கம்
உந்தன் கையில் தஞ்சம் கொண்டேன் அழகே

இந்த பந்தம் எனக்கு மட்டும் சொந்தம்
கண்ணால் வந்த பந்தம் என்பேன் நிலவே

ஆனந்த சாலையிலே...

மோஹன ராகம் பாடும் இளங்குயில் நானல்லோ


குயில் பாடும் பாட்டுக்கு பல்லவி நானல்லோ

இதழ் அங்கங்கள்..

என்னைக் கூப்பிட்டு சொல்லும்

புது அர்த்தங்கள்..

மஞ்சள் மாலையிலே மன்மதனே நினைந்து

தனனனனா தானேனான தன்னன்னா

தாஆஆனனன்ன்னாரரரரரராஆஆஆ குக்கூ

778 காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா



//கதிர்கள் முற்றிப் போனால் களத்தில் சேரவேண்டும்.. காதல் முற்றிப் போனால் அது எங்கே சேரவேண்டும்// சந்தேகமே இல்லைங்க இந்த வரிகள் இந்த பாடல் சரணத்தில் வருகிறது பாலுஜியின் குரலில் ஆஹா.. ஓ ஹோ போடவைக்கும் இனிமை.. அனுபவியுங்கள்.. சந்தோசமாக இருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: ரோஜா மலரே
பாடியவர்: எஸ்.பி.பி

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா

முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா..முழுமையாகுமா

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே
வேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல்

காதல் இன்று கல்லில் காமம் கொஞ்சம் உண்டு
இடையில் சின்ன காதல் அட அதுதான் ரொம்பபாடு

கோடு போடு அதை தாண்ட மாட்டேன்

தாண்டச் சொல்லி உன்னை தூண்டமாட்டேன்

உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும்
காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன்

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

கதிர்கள் முற்றிப் போனால் களத்தில் சேரவேண்டும்
காதல் முற்றிப் போனால் அது எங்கே சேரவேண்டும்

மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும்
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் ஹஹ என் மார்ப்பில் தாங்க வேண்டும்

ஒன்றை ஒன்றாய் மாற வேண்டும்

உன்னில் என்னை தேட வேண்டும்

எப்போதும் இடை விடாமலும்
நகம் படாமலும் கத்தி?? போல் நீ கையாலவேண்டும்

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

பெண்ணை தொடாதது ஹஹ ஒரு பெருமையாகுமா

முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா..முழுமையாகுமா

காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா

கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா

Thursday, May 28, 2009

777 மந்தைவெளியிலே சுத்துனகாளை




படம்: அத்தைமக ரத்தினமே
பாடியவர்: பாலுஜி

எப்பவோ கேட்டபாட்டுங்க இது. இந்த பாடலில் வரும் சரணங்கள் யாவையும் அற்புதமாக இருக்கும் பாலுஜியின்குரலில். அதுசரீங்க.. படத்தகவல்கள் நீங்கதான் சொல்லனும்...

Get this widget | Track details | eSnips Social DNA



ஹே.ஹேஏஏஏஏ..டுர்ர்ர்ர்ர்ர்ர்
டுர்ர்ர்ர்ர்ர்ர் ரக்கடகக்க்காஆஆஅ
டுர்ர்ர்ர்ர்ர்ர் ரக்கடகக்க்காஆஆஅ
டுர்ர்ர்ர்ர்ர்ர் ரக்கடகக்க்காஆஆஅ
டுர்ர்ர்ர்ர்ர்ர் ஹே ஹே
டுர்ர்ர்ர்ர்ர்ர் ஹே ஹே

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

வீர தீரமான ஆளு
மாலை வாங்க போகும் நாளூ
வந்தது பாரு வணங்குது ஊரு
அண்ணன் போல் யாரு

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

தாய் கத்துக்கொடுத்தது பாசம்
அந்த பாசம் வளர்த்தது நேசம்
வாக்கு சுத்த தமிழிலே பேசும்
கேட்டா எதிர்த்த திசையிலே வாசம்
வழி பலபோகும் ஒரு ஊரு தான்
பல வித ஊரு ஒரு நாடு தான்
மனுசங்க வாழும் பல நாடு தான்
புரிஞ்சக்க வேணும் ஒரு பூமிதான்
ஒரு நீதி..ஹே ஹே
ஒரு ஜாதி..ஹே ஹே
ஒரு நீதி இங்கு மாறாம
இனி ஒரு ஜாதி மேலும் தூங்காம வாழ

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

பூமி கோடி காலமா இருக்கு
அதபோல் போட்டி பூசலும் இருக்கு
முடிவா சேர இடம் ஒன்னு இருக்கு
ஹஹ அதுகுள்ள எதுக்கு தனித்தனி கணக்கு
திறமையை காட்டு தொழில் மேலாதான்
வறுமையை மூடும் தெரியாமதான்
உரிமையை கேளூ சரியாகதான்
உனக்கு சேரும் மனம்போலதான்
கொடி ஏத்து..ஹே ஹே
வழி மாத்து..ஹே ஹே
கொடி ஏத்து கோட்டை மேலேறி
உன் வழி மாத்து கொடியும் பூமாறி ஆஹா

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

வீர தீரமான ஆளு
மாலை வாங்க போகும் நாளூ
வந்தது பாரு வணங்குது ஊரு
அண்ணன் போல் யாரு

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

மந்தைவெளியிலே சுத்துனகாளை
பந்தயம் இதிலே ஜெயிக்கறவேளை
வந்தது ராசா பார்த்துக்க பேஷா
ஆகிறேன் நான் பாசா

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அஹாஹ

Wednesday, May 20, 2009

776 அதி தீவிர பாலுஜி ரசிகருக்கு வாழ்த்தொலித்தொகுப்பு



அதி தீவிர பாலுஜி ரசிகருக்கு வாழ்த்தொலித்தொகுப்பு



அன்பு உள்ளம் கொண்ட பாலுஜி ரசிகர்களே நேற்று தான் எனது ஆருயிர் நண்பர் திரு. எஸ்.பாலசுப்ரமணியம், நந்தினி ஆகியோரின் 22.05.2009 அன்று வெள்ளியன்று நடைபெறும் திருமண வாழ்த்தி சொல்லி ஒரு பதிவு போட்டேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


புதுமாப்பிள்ளைக்கு >> ஆனந்தமே அலைபாயுதே >> ராசி நல்ல ராசி >> கல்யாணக்கோவிலின் தெய்வீககலசம் >> ஒரு நாளூம் உன்னை மறாவாத >> சந்தோசம் பாடும் சிங்காரகுயிலே >> கடவுள் அமைத்து வைத்த மேடை

லண்டன் தமிழ் வானொலி அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் இந்த தளத்தில் அந்த பதிவை பார்த்து மேற்கண்ட பாடல் பல்லவிகளூடன் உடனே ஒரு வாழ்த்தொலியாக அம்சமான கவிதைகளூடன் சரியான பாலுஜியின் பாடல்களை சேர்த்து பதிவு செய்து இன்று எனக்கு அனுப்பினார். 24 மணி நேரத்தில் பதிவை படித்து ஒலித்தொகுப்பு தயார் செய்து அனுப்பியது நினைத்தால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்னை நானே பலமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அடெங்கப்பா.. பாலுஜியின் மீதும் அவரின் பாடல்களை ரசிக்கும் அவரின் அபிமான ரசிகர்களின் மீதும் வைத்திருகும் அன்பை என்னவென்று சொல்வேன். வாழ்த்திய கொஞ்சும் குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நன்றி..நன்றி.. நன்றி. அவரின் ஒலித்தொகுப்பை புதிதாக இல்லறம் துவங்கும் மணமக்களிடம் சேர்ப்பது தான் நான் செலுத்தும் நன்றியாக கருதுகிறேன்.

இசையன்பர்கள் அனைவரும் வாழ்த்தொலி கோப்பை கேட்டு உங்கள் வாழ்த்துக்களையும் எழுதுங்கள். வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் >> ராகினி பாஸ்கரன், ஜெர்மனி, மற்றும் கோவை ரவி.

Sunday, May 17, 2009

775 ஞாபகம் இல்லையோ என் தோழி



ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல மெலோடி புதிய பாடல் கேட்டேன். நம்ம நண்பர்களூக்கு வழங்காமல் இருக்கலாமா? ஞாபகங்கள் என்ற ஒரு படம் வரபோகுதுங்கோ நடிகர் வேறு யாரும் அல்ல பரவச பாடலாசிரியர் திரு.பா.விஜய் தான். அவர் வரிகளைலே இந்த பாடல் அமர்க்களமான மனதை கொள்ளைக்கொண்டு போகும் வயலின் பின்னணி இசையில் பாலுஜி குரல் கொஞ்சி கொஞ்சி விளையாடுகிறது. கேட்டுத்தான் பாருங்களேன்..

கேட்பதற்க்கு முன்.. சில...

பாலுஜியின் அன்பைப்பெற்ற அதிதீவிர ரசிகர் ஆயிரம் பேர் (தலை இல்லை) வாங்கிய அபூர்வசிகாமணி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும்

எஸ். பாலசுப்ரமணியம், நந்தினி
ஆகியோரின் திருமணம் வருகின்ற 22.05.2009 அன்று வெள்ளிகிழமை சென்னையில் அடையாரில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் நடக்கிறது மணமக்கள் இருவரும் மண மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவோம்.

அதென்ன ”ஆயிரம் பேர் வாங்கிய அபூர்வசிகாமணி” என்று கேட்கத்தோன்றுகிறது தானே? இந்த தளத்தில் நான் எப்போது பதிவுகள் வழங்கினாலும் தவறாது வருகை தந்து நான் செய்யும் தட்டச்சு இலக்கணப்பிழைகளை சுட்டி காட்டி திருத்துவது அவர் கடமை. அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். சமீபகாலமாக வருவதில்லை நிறைய தவறுகள் செய்கிறேன் போல? மனுசன் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார் போல அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மறுமொழிக்கும் ஒவ்வொரு பெயரில் அதுவும் பாலுஜி பாடிய பிரபல பாடலகள் தலைப்பில் தான் வரவார் ஆரம்ப கால பதிவுகளில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அதனால் ”ஆயிரம் பேர் வாங்கிய அபூர்வசிகாமணி” என்ற இந்த பெயர். என்னை செல் பேசியில் தொடர்பு கொண்டு திருமணத்திற்க்கு வரவில்லையென்றால் தெரியும் செய்தி அப்புறம் ப்ளாக்கில் ஒரு பதிவும் போட முடியாது என்று மிரட்டியும் விட்டார். பாலுஜி யின் மீது பைத்தியகாரமான அன்பை பொழிபவர். பாலுஜி பாடல்கள் என்றால் அவர் குரலின் மீது அப்படி யொரு மயக்கம். அவருக்கு பாலுஜியின் தகவல் பெட்டகம் என்று கூட அழைப்போம். இன்று திருமணம் செய்து வாழப்போகும் பாலுவிற்க்கு நீடுழி வாழ்க வாழ்க என்று , எஸ்.பி.பி. சாரிடபில் பவுண்டேசன், வெப்மாஸ்டர் திரு.கிரிதர் ராஜா சார்பாகவும், மாடேரட்டர்ஸ் அனைவரும் சார்பாகவும், கோவை ரசிகர்கள் சார்பாகவும், யாகூ பாலுஜி ரசிகர்கள் குழுவின் அனைவரின் சார்பாகவும் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த புது பாடல் ஒலிக்கோப்பையும் பாடல் வரிகளையும் எனக்கு வழங்கிய ஹைத்ராபாத் உஷா மேடத்திற்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு அவருக்கும், புதுமாப்பிளை திரு. எஸ்.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


Photo:Thanks to Indiagliz.com

படம்: ஞாபகங்கள்
பாடலாசிரியர்:பா.விஜய்

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி
சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

கவிஞன் எழுதிய எழுதிய
அழகிய அழகிய கவிதை நீ
உனக்கென உருகிய உருகிய
முகிலினை விலகிய நிலவு நீ
எழுதிய என் பார்வை உனதில்லையா
தழுவிய உன் ஸ்வாசம் எனதில்லையா ஆஆஆஆ

நேற்றெல்லாம் நிஜமானது
காற்றெல்லாம் சுகமானது
கண்ணெல்லாம் கனமாகிறது
சிலநாட்கள் தான் அழகானது
காலங்கள் இதமானது
எல்லாமே க..ன..வா..கிறது

ஒரு முறை கண்களில் பார்த்தது
ஒரு யுகம் வாழ்ந்தது நெஞ்சமே
இருதயம் விடுவதும் அழுவதும்
தொடுவதும் சுடுவதும் போதுமே

இதுவரை என் பேனா நின்றதில்லை
உன்பெயர் சொல்லாமல் சென்றதில்லை

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோழி

சொல்லாமல் சுமையானது
சோகங்கள் சுகமானது
ஏதோதோ நினைவோடுதடி

சில பார்வைகள் நீ பார்ப்பதும்
வார்த்தைகள் நீ தந்ததும்
நெஞ்சோடு நிழலாடுதடி

ஞாபகம் இல்லையோ என் தோழி
சொன்னதும் நீயும் இல்லையோ சேதி
ஞாபகம் இல்லையோ என் தோ...ழி...

Friday, May 15, 2009

774 புத்தம் புது தேசம்



//காணா இரவா நான் எங்கே பார்க்கின்றேன்... நான் ஆணா பெண்ணா உன்னைக் கேக்கின்றேன்... ஆனந்த ஆசை வந்தாள் ஆணாகின்றாய்... ச்ச்சீ... கண்ணாலே கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்//

புத்தம் புது தேசம் என்ற பாடல் கலக்கல் பாடல்ங்க..

நடிகர்: அர்ஜூன்
படம்: கர்ணா
இசை:வித்யாசாகர்

Get this widget | Track details | eSnips Social DNA



புத்தம் புது தேசம்

பூவும் கொஞ்சம் பேசும்

புத்தம் புது தேசம்

பூவும் கொஞ்சம் பேசும்

நம் கண்கள் தொட்டு
காதல் காத்து வீசுமே ஹோ

இது இரவில் கதிரும்
பகலில் நிலவும் காயும் நேரமே

காதல் என்றே சொல்வார்
இனி கதவு திறக்குமே

கட்டிக தழுவிக் கொண்டால்
நம் கனவு பலிக்குமே

புத்தம் புது தேசம்

பூவும் கொஞ்சம் பேசும்

தலைவா நிலவை என் கையில் பார்க்கின்றேன்
கனவா நினைவா ஹ நான் கிள்ளிப்பார்க்கின்றேன்

காணா இரவா நான் எங்கே பார்க்கின்றேன்
நான் ஆணா பெண்ணா உன்னைக் கேக்கின்றேன்

ஆனந்த ஆசை வந்தாள் ஆணாகின்றாய்
ச்ச்சீ
கண்ணாலே கைகள் தொட்டு பெண்ணாகின்றாய்

என் நெஞ்சில் எப்போதும் பாயாதுங்க??
என் தேகம் எப்போது தேனாகுங்க??

காதல் என்றே சொல்வார்
இனி கதவு திறக்குமே

கட்டிக தழுவிக் கொண்டால்
நம் கனவு பலிக்குமே

புத்தம் புது தேசம்

பூவும் கொஞ்சம் பேசும்

காமன் வந்து என் காதில் சொன்னபடி
காதல் கொண்டால் உன் கண்ணுக்கு இளையகொடி

மோகம் வந்து என்னை முட்டிப்பார்த்ததடி
மூங்கில் காடாய் என்னை பற்றிக்கொண்டதடி

நீ என்னை கண்டபோது நான் இங்கு இல்லை
வாய் வார்த்தை வந்த போது நீயில்லையே

சத்தான முத்தங்கள் தா முல்லையே
அச்சாரம் நீ போடு ஆளீல்லையே

காதல் என்றே சொல்வார்
இனி கதவு திறக்குமே

கட்டிக தழுவிக் கொண்டால்
நம் கனவு பலிக்குமே

புத்தம் புது தேசம்

பூவும் கொஞ்சம் பேசும்

நம் கண்கள் தொட்டு
காதல் காத்து வீசுமே ஹோ

இது இரவில் கதிரும்
பகலில் நிலவும் காயும் நேரமே

காதல் என்றே சொல்வார்
இனி கதவு திறக்குமே

கட்டிக தழுவிக் கொண்டால்
நம் கனவு பலிக்குமே

காதல் என்றே சொல்வார்
இனி கதவு திறக்குமே

கட்டிக தழுவிக் கொண்டால்
நம் கனவு பலிக்குமே

Friday, May 08, 2009

773 புதிய உலகிலே செல் செல் செல்



இந்த பாடலில் பாலுஜி வித்தியாசமாக கொஞ்சுண்டு சிரிப்பது அபாரம். ஒலிக்கோப்பின் தரம் சரியாக இல்லையாதலால் வரிகள் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை ஆகையால் பல்லவி மட்டும் இங்கே.. முடிந்த வரை கேட்டு பாருங்கள் நல்ல கோப்பு கிடைத்தவுடன் மாற்றி விடுகிறேன். இதுவும் ஒரு பிரபலமாகாத பாடல் ச்ச்ச்ச்சும்மா கேட்டு தான் பாருங்களேன்..

படம்:அபூர்வ சக்தி 369
பாடியவர்கள்: பாலுஜி, சித்ரா??
இசை:இளையராஜா

புதிய உலகிலே செல் செல் செல்
விந்தை காணவே வந்தோம் இன்றே
புதுமைகள் பார்த்துக்கோ

Get this widget | Track details | eSnips Social DNA

772 வெள்ளி முத்துக்கள் நடனமாடும்



//எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்.. இன்பங்கள் ஓடட்டுமே ஏஏஏஏஏ.. எட்டாத கொம்பல்ல கிட்டாத உறவல்ல.. என்னங்கள் நீங்கட்டுமே ஏஏஏஏ// பாலுஜி, சுசீலாம்மா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் அமர்க்களமான பாடல்... அச்சச்ச்சச்சாஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்..சூபர்ப்பு..

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:மீண்டும் வருவேன்
பாடியவர்கள்:பாலுஜி,பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
பொன்மேனி நீராட

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட அச்சச்சாஆஆ...ம்ம்ம்..
பொன்மேனி நீராட

செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே...
சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூவண்ணம்
பந்தாட்டம் ஆடட்டுமே ஆஆஹாஆ
நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள்
நீரோடு ஓடட்டுமே ஏஏஏஏ..யேஹேஏஏஏஏ

லாஆஆஆலலலலலலல லலாஆஆஅ
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம ம்ம்ம்ம்ம
லாஆஆஆலலலலலலல லலாஆஆஅ

எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் ஓடட்டுமே ஏஏஏஏஏ
எட்டாத கொம்பல்ல கிட்டாத உறவல்ல
என்னங்கள் நீங்கட்டுமே ஏஏஏஏ

கோபாலன் நானுண்டு கோபியர்கள் தானுண்டு
லீலைகள் ஆகட்டுமே ஏஏஏஏ

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
பொன்மேனி நீராட

பெண் பார்க்க பெண் வந்தால்
மண் பார்க்க கண் உண்டு
பேசாமல் பேசட்டுமே

தூது ஒன்றும் இல்லாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
உள்ளங்கள் போகட்டுமே

நேராக நீயுண்டு
நெஞ்சத்தில் நானுண்டு
லாபங்கள் காணட்டுமே ஏஏஏஏ

வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் தாலாட்ட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
பொன்மேனி நீராட

Thursday, May 07, 2009

771 சிரிக்கச் சிரிக்க சிலர் இருக்க




இந்த பாடலை கேட்டால் நேற்று பிறந்த குழந்தை கூட துள்ளி குதித்து கொண்டு சொல்லி விடும் அப்பட்டமான மொழி மாற்றம் செய்த பாடல் என்று. யாருக்காவது புரிகிறதா இதன் ஒரிஜனல் படம் எதுவென்று? (எனக்கு தெரியவில்லை ஆதனால் உங்களீடம் கேட்கிறேன் அய்யா) பாடல் வரிகள் தட்டச்சு செய்வதில் மிகவும் சிரமப்படவே இல்லை. இசையமைப்பாளர்கள் எல்லா பாடல்களும் இப்படி மெட்டமைச்சு கொடுத்தாங்கன்னா கண்ணியில் தட்டச்சு செய்ய மிகவும் சுலபம் அவ்வளவு ஸ்லோப்பா.... பாடும் போது பாலுஜி ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்திருப்பார் போல... மிகவும் சோம்பலாக பாடியிருக்கிறார்.. ம்ம் இதுவும் கேட்க வித்தியாசமாகதான் உள்ளது.. உங்களுக்கு?
இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் தேடினால் இதோ கீழே உள்ள தகவல் தான் வருகிறது? இது சரியா...தவறா? என்று பாலுஜி தான் சொல்லவேண்டும்.

//செல்லப்பிள்ளை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலைய்யா, கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.//

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:செல்லப்பிள்ளை
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

ஹோ..ஓஓஓஓஒ..ஓஓஓஒ
சிரிக்கச் சிரிக்க சிலர் இருக்க
ஒரு ஜீவன் ஏன் துடிக்க ஆஆஆஆ

ஏன் இன்று மௌனம் கலைந்தது
யாரை நான் இங்கே தேடுகிறேன்

சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
இன்று யாருக்கு யாரென்று தெரியவில்லை
சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
இன்று யாருக்கு யாரென்று தெரியவில்லை
நான் அவனிடம் ஒரு பதில் கேட்கின்றேன்
நான் அவனிடம் ஒரு பதில் கேட்கின்றேன்

நான் கேட்டதில் சிலை அது பேசவில்லை
சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
இன்று யாருக்கு யாரென்று தெரியவில்லை

உன் ராஜ்ஜியத்தை நான் பார்க்கின்றேன்
உன் ராஜ்ஜியத்தை நான் பார்க்கின்றேன்
அன்று நிகழ்வதை என்னி பாடுகின்றேன்
என் சொந்தங்கள் இங்கே புரியாது
கேட்டால் பதிலை சொல்ல யாருமில்லை

சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
இன்று யாருக்கு யாரென்று தெரியவில்லை

எங்கோ ஓடுகிறேன் என்றும் வாடுகிறேன்
எங்கோ ஓடுகிறேன் என்றும் வாடுகிறேன்

அன்று நடந்ததை சொல்ல வார்த்தையில்லை
இங்கே திரையை நீக்கிட தெரியவில்லை
இங்கே திரையை நீக்கிட தெரியவில்லை
எதனால் மறந்தாய் எத நான் மறந்தால்??

சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
இன்று யாருக்கு யாரென்று தெரியவில்லை

நான் சொல்லாமல் யார் தான் சொல்வார்
நான் சொல்லாமல் யார் தான் சொல்வார்
நான் பாடியது எல்லாம் பொய்யா
இந்த அழகிய மாளிகை வாழ்க்கையிலே
அவள் துயரத்தி நீ அதை பார்க்கவில்லை

சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
இன்று யாருக்கு யாரென்று தெரியவில்லை

நான் அவனிடம் ஒரு பதில் கேட்கின்றேன்
நான் அவனிடம் ஒரு பதில் கேட்கின்றேன்

நான் கேட்டதில் சிலை அது பேசவில்லை
சில ஞாபகம் சிலருக்கு தீயாகும்
தீயாகும்....தீயாகும்....தீயாகும்....

Followers

பகிர்க