
இந்த மூன்றாவது நாள் சிறப்பு ஒலித்தொகுப்பு ஒரு வித்தியாசமானது இசையன்பர்களே. ஒலித்தொகுப்புக்குள் நுழையும் முன் இந்த தொகுப்பிற்க்கு தேவையான பாடல்களை தந்து உதவிய எனது பெங்களூர் அருமை நண்பர் மற்றும் பாலுஜியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் திரு.ஆர்.ஜி.நாராயாணா அவர்களூக்கும், இந்த பாடல்களையும் விளக்கங்களையும் ஒரே நாளில் பதிவு செய்து பாரிஸ் கலையகம் வானொலியில் ஒலிப்பரப்ப மிகவும் உதவியாக இருந்த கொஞ்சும் குரல்யாளினி கவிதைகுயில் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்களூக்கு அனைத்து உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் மற்றும் பாலுஜியின் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக்கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.
இந்த ஒலித்தொகுப்பை பற்றி ஒரு சிறு விளக்கம். பாலுஜி அவர்கள் பல மேடை நிகழ்ச்சிகளிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளிலும், தொலைக்காட்சி பாடல் போட்டிகளிலும் புதிய பாடகர்களூக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் ஒரு அறிவுரை சொல்ல தவறுவதேயில்லை அவை புதிய பாடகர்கள் பாடும் போது தன் சொந்தக்குரலில் நன்றாக வாயைதிறந்து பாட வேண்டும் மற்ற பாடகர்களை பின்பற்றி அவர் குரலைப்போன்று பாட முயற்சிக்கக்கூடாது என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக சொல்லுவார். இதை எல்லோரும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
பாலுஜி சொன்னதற்க்கும் இந்த ஒலித்தொகுப்பிற்க்கும் நேர் மாறான ஏன் முறன்பாடான தொகுப்பும் கூட. அதுஎன்னவென்றால் மற்றவர்களூக்கு தான் அறிவுறையா அவருக்கு கிடையாதா அவர் எவ்வளவு பாடல்களில் குரல் மாற்றி பாடியிருக்கிறார் என்று கேட்கத்தோன்றுகிறதுதானே?. நீங்க சரியான கேள்வியை தான் கேட்டீர்கள் என்பேன். ஒன்று கவனியுங்கள் அவர் துவக்க காலத்தில் என்றுமே குரல் மாற்றி பாடியது இல்லை. பிரபலமான பிறகுதான் படங்களின் கதையம்ப்சத்திற்க்கு தேவை என்று இயக்குனர்கள் வேண்டுகோளின் படி அமரர்.நடிகவேள் எம்.ஆர்.ராதா, அவர் புதல்வர் திரு.எம்.ஆர்.ராதாரவி, அமரர்.தேங்காய் சீனிவாசன், திரு.வென்னிறஆடை மூர்த்தி மற்றும் அமரர் சுருளிராஜன் ஆகியோருக்கு குரலை மாற்றி பாடியிருக்கிறார் அவ்வளவு தான். இதையே சில பேர் கிண்டலாக கள்ளத்தொண்டையில் பாடுகிறார் என்று கிண்டலடித்திருப்பதை பல பேர் பேசியதையும் விமர்சனங்களையும் நானும் கேட்டுருக்கின்றேன். அவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று தான் நான் சொல்வது..கள்ளத்தொண்டை என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் அவரிடம் இருக்கும் அபாரமான திறமை என்று எடுத்துக்கொள்ளலாமே? எந்தவொரு ஒரு பாடகரரும் தன்னுடைய வித்தியாசமான திறமை வெளிகொண்டுவரவில்லையென்றால் அவர் முன்னேற முயற்சி எடுக்கவில்லை என்று தான் நினைக்க தோன்றும். நான் சொல்வது சரிதானே?
சரீங்க..இனி தொகுப்பினுள் செல்வோமா...?டி.ஆர்.டி லண்டன் வானொலியில் குயில் குதுகுலம் என்ற நிகழ்ச்சியில் வெளிவந்த ஒலித்தொகுப்பு தான் இந்த பதிவு. வழங்கியவர் டி.ஆர்.டி வானொலி அறிவிப்பாளர் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு என் சார்பாகவும், பாஸ்டன் சுந்தர் சார்பாகவும் நன்றி.
துவக்கத்திலே எல்லோர் மனதையும் கவர்ந்த நலம் வாழ என்ற பாடல் எப்போது கேட்டாலும் அற்புதமான வரிகளால் மெய்மறந்து போவேன். இப்பாடலை எனக்காக வழங்கிய அறிவிப்பாளர் அவர்கள என்றென்றும் நலம் வாழ எந்நாளூம் என் வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் என் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சினிமா என்ற ஊடகத்தில் அந்த காலத்தில் பல பேர் நகைச்சுவை நடிகர்கள் அபாரமாக நடித்துள்ளனர். இந்த பாடலை அப்போதே அமர்க்களமாக இசையமைத்த சமீபத்தில் காலம் சென்ற வயலின் வித்வான் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களூக்கு முதல் பாடலாக சமர்ப்பணம் செய்கிறேன். குன்னகுடியாரின் பெருமைகளையும் சாதனகளையும் என்றென்றும் பேசிக்கொண்டே இருக்கலாம். அவர் எப்போதும் தன் நெற்றியில் இடும் பட்டை விபூதியை போன்று பளீச்சென்று தன் சிரிப்பால் இசைப்போல் எல்லோரையும் கவர்ந்தவர். வயலின் இசைக்கருவியை தனிதன்மையாக மேடையேற்றிய பெருமை இவர் ஒருவருக்கே உண்டு. அந்த இசையருவியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் இறைவனை வேண்டுகிறேன். அவர் நினைவாக இந்த பாடல்.
தற்போது தொலைக்காட்சிகளில் மிமிக்ரி என்ற ஒரு நிகழ்ச்சி அதிகம் பிரபலமாகிறது. அதற்க்கு என்ன காரணம் ரசிகர்களீன் நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருப்பது தான். அதைப்பார்த்து தான் இந்த நிகழ்ச்சியை உருவாக்க தூண்டுதலாக இருந்தது. என் வாழ்நாளில் அதிகம் இடம் பிடித்தது ஏன் எனக்கு மிகவும் அமைதியை ஏற்படுத்துவது
இரண்டு. ஒன்று இசை மற்றொன்று நகைச்சுவை. இசையை ரசிப்பது என் உயிரிலே கலந்தது. நகைசுவை என் கவலைகளை மறக்கடிக்கசெய்வது. அந்த வகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்பிலும் அவர் குரலிலும் ஒரு வித கவர்ச்சி இருக்கும். கூடவே நக்கலும், நையாண்டி வசணங்களூம் நூல் இலையாக இழையோடும் அவர் வசனங்கள் பேசும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும் அவர் பேசும் ஏற்ற இறக்கங்களின் உச்சரிப்பு எனக்கு தெரிந்த வரை எந்த வித ஒரு நகைச்சுவை நடிகரும் பேசியதில்லை.அந்த வகையில் பாலுஜி பாடிய கந்தர் அலங்காரம் என்ற படத்தில் வரும் இந்த இந்த பாடலில் அவரின் நக்கலும், நகைசுவையும் கொஞ்சிகுலாவி இந்த காதினில் தேன் பாய வைக்கின்றது இந்த பாடல்.
1. எட்டுகுடி மன்னவன்
படம்: கந்தர் அலங்காரம்,
பாடியவர்: எஸ்.பி.பி. எம்.ஆர்.ராதா,
இசை: குன்னக்குடிவைதியநாதன்
ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் பிறந்தவர் தான் தேங்காய் சீனிவாசன் அவர்கள். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் இந்த பகுதிக்கு வந்தால் இவரின் கொள்ளுத்தாத்தா ஞானசிகாமணி வீட்டில் தான் தங்குவார்களாம். இவருக்கு தேங்காய் என்ற அடைமொழி எப்படி வந்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பே இல்லை. கல்மணம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக தோன்றி கலகலப்பூட்டியதால்தான் அவர் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கபட்டார்.
தஞ்சைமாவட்டம் ராஜமன்னார்குடியில் பிறந்தவர் பெண் குழந்தை தேவி சாந்தா தான் இன்றைய ஆச்சி மனோரமா சிறு வயதிலேயே அசோக்குமார்,மீரா படப்பாடல்களை அபோதே பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இவர் அடிக்கடி விழாக்களிலும் பாடியவர். ஆகையால் பள்ளத்தூர் பாப்பா என்று அழைத்தார்கள்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் மணிமகுடம் என்ற நாடகத்தில் நடிக்க வைத்தார். பல நாட்கங்களில் நடித்து வந்தவர் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் முதல் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்றி நடித்திருக்கின்றார். தன் கணீர் என்ற குரலால் பல படங்களில் பாடி தன் இசைத்திறமையை வெளிபடுத்தியவர். அதில் ஒன்று 1971ஆம் ஆண்டு கருந்தேள் கண்ணாயிரம் என்ற படத்தில் நடிகர் தேங்காய் சீனிவாசணுடன் பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே என்ற அட்டகாசமான பாடல் எஸ்.பி.பியுடன் பாடியது தான் இந்த பாடல். அசத்தி இருக்கும் நகைச்சுவை அரசி ஆச்சி மனோரமா அவர்களூக்கு கண்டிப்பாக ஒரு சபாஷ் கொடுக்கத்தான் வேண்டும். அவருக்கு மட்டுமா குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணீயம் அவர்களூக்கும் தான்.
2 பூந்த மல்லியிலே ஒரு பொண்னு பின்னாலே
படம்: கருந்தேள் கண்ணாயிரம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, மனோரமா
முதல் பாடலைப்போன்று இந்த பாடலும் என்ன எம்.ஆர்.ராதா அவர்களின் புதல்வன் திரு.எம்.ஆர்.ராதாரவி அவர்களின் குரலிலும் வரும் இந்த பாடல் துவக்கத்திலே கட்டை குரலில் கர்ஜித்து ”அப்பன் பேச்சை ஒழுங்கா கேட்டவன் யார்டா டேய்” என்று அவர் பாணியிலே எஸ்.பி.பி துவங்குவது பாடல் கேட்பவரின் ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது பல தனியார் தொலைக்காட்சி தொடர்களில் மிமிக்ரி பாணியில் பல நிகழ்ச்சிகள் வந்து ரசிகர்களை நகைசுவையால் குளிரவைக்கிறது. அதில் வரும் கலைஞர்கள் எம்.ஆர்.ராதா அவர்களின் குரலில் சர்வசாதரணமாக பேசுவதை கேட்டிருக்கிறோம். ரத்தக்கண்ணீர் நாடகம் அந்த காந்தா வசனம் முதல் பாடலில் அவர் சொன்னது போல் அனைவரின் உள்ளத்திலும் பதிந்துள்ளது. அதே போல் இந்த பாடலிலும் வரும் வசணங்களூம் வரிகளும் கேட்பவரின் வாயையும் முனுமுனுவைக்கும் நான் மட்டும் கேட்டால் போதுமா கேட்டுதான் பார்போமா? உங்களோடு இணைந்து நானும் மீண்டும் ஒரு தடவை.
3. அப்பன் பேச்சை கேட்டவன் யாரு
படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி
பாடியவர்: எஸ்.பி.பி
மொழி மாற்றம் செய்த படங்கள் ஒரு காலத்தில் பிரபலம். நட்சத்திரம் படப்பாடல்கள் மிகப்பிரபலம் அதில் அவள் ஒரு மேனகை என்ற பாடல் எல்லோர் மனதையும் கவர்ந்த பாடல். அதில் ஒரு வித்தியாசமான பாடலுக்கு சங்கர் கனேஷ் அவர்கள் இசையமைத்துள்ளார் அதிகம் பிரபல மாகாத பாடல் இது. கேட்பதற்க்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். உங்கள் காதுக்கு விருந்தாக இந்த பாடலை காற்றாலைக்கு எடுத்து வருகின்றேன்.
4. கண்ணுல சூசின பொண்ணு
படம்: நட்சத்திரம்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: சங்கர் கனேஷ்
வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் எத்தனை காதாப்பாத்திரம் சந்திக்கின்றோம் சந்தித்த கதாபாத்திரங்களில் ஒருவராகிய சுருளிராஜன் அவர்கள். மன வளர்ச்சி குன்றிய நபரின் கதாபாத்திரத்தில் சுருளிராஜன் நடித்த பெண்ணுக்கு யார் காவல் படத்தில் வருகிற இந்த பாடல்.. சோகத்தையும், ஏக்க்ததையும் தனக்குள் புதைத்துக் கொள்கிற ஒரு ரம்மியமான தாலாட்டு. இந்த பாடலின் துவக்கமே பாலுவின் குரலில் அழகான, அமைதியான ஆலாபனையுடன் கேட்பதற்கு மனதிற்க்கு மிகவும் இனிமையாக இருக்கும். இந்த பாடலை நான் மட்டும் ரசித்தால் போதுமா நீங்களூம் அனுபவியுங்கள்.
5.கண்ண்ணே கண்ணான
படம்: பெண்ணுக்கு யார் காவல்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
சுருளிராஜன் அவர்கள் டி.என்.பாலு இயக்கத்தில் பல நாடகங்களீல் நடித்து வந்தார்.டைரக்டர் வி.சி.குகநாதன் அவர்கள் முயலுகு மூணுகால் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இவருக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்ஸ் இவரின் குரல் தான். வேறு எவருக்கும் இவரைப்போல் வசணம் பேச வராது. இவரை பிரபல படுத்திய படமும் ஆதிபராசக்தி. கொக்கரக்கோ பாடலில் நவராத்திரி ஒன்பது, நவதானியம் ஒன்பது, நவரத்தினம் ஒன்பது, நவக்கிரங்களூம் ஒன்பது.. ஏண்டா நாங்க மட்டும் ஒன்பது.. என்ற வரிகள் இந்தச் சமூகம் இன்னும் அவர்களை எந்த நிலையில் நடத்துகிறது என்பதை ஒரு சுளீர் சாட்டையடி போல உணர்த்துகின்றன. திருநங்கையர்கள் உணர்வுகள் நாம் புரிந்து கொண்டு சமுதாயத்தில்
அவர்களூக்கு கொடுக்க வேண்டிய மரியாதை தர முயற்சி செய்வோம்.
திருநங்கையரகளுக்கு அரவாணீகள் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் திருநங்கையர். நிகழ்கின்ற வண்கொடுமைகளை பட்டியல் போடுகின்றது எனலாம். கதாபாத்திரத்தை நன்கு உள் வாங்கி தன்னைஇயே அந்த சூழலுக்குல் பொருத்திக்கொண்டு பிரமாதமாக பாடியிருக்கின்றார் எஸ்.பி.பாலசுப்ரமணீயம் அவர்கள் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த சூலழுக்கேற்றவாரு தன்னை அர்பணித்துக்கொண்டு, இசையில் தானே புகுந்து கொண்டு ஒவ்வொரு திறமைகளையும் இத்தன ஆண்டுகாலமாக நம் காதுகளூக்கு விருந்தாக அள்ளித்தெளீக்கும் இவரது குரல் என்றும் மறக்க முடியுமா?. இனி வரும் சந்ததிகள் கூடத்தான் மறந்துபோக முடியுமா? நான் இப்பிறப்பில் கேட்கும் வரம் என்னவென்றால் இன்னும் ஒரு மானிட பிறவி எனக்குள் இருந்தால் எஸ்.பி.பி அவர்களூக்கு நான் தங்கையாக பிறக்க வேண்டும் அவர் பாடும் அழகை நான் அருகில் இருந்து ரசிக்க வேண்டும் இது தான் நான் இப்பிறப்பில் நான் கேட்கும் வரம்.
6.சொல்லவெக்கமா இருக்கு சொக்கம்மா
பெண்ணுக்கு யார் காவல்
தொங்குவ தற்கு முருங்கை மரம் தேடி அலைகின்ற ஒரு ஆவிக்கு பேய்கள் நிறைந்த ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு விருந்தே கிடைக்கிறது. அந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடு இப்பாடல். நம் பாலுவின் குரல் ஆவிக்கும் அம்சமாய் பொருந்தி அட்டகாசம் பண்ணுகின்றது.இதுதான் அவருக்கு இறைவன் கொடுத்த வரம். அது என்ன அட்டகாசம் என்று கேட்கபோகின்றீகளா?
7.வாய்யா வாய்யா
படம்:ஜப்பானில் கல்யாணரமன்
உல்லாசப் பறவைகள் படத்தில் அழகு ஆயிரம், தெய்வீக ராகம்,ஜெர்மனியின் செந்தேன் மலரே போன்ற என்றும் இனிமையான பாடல்களின் domination / ஆக்கிரமிப்பு காரணமாக அநேகமாக எல்லாரும் மறந்து போன அல்லது பெரிதும் கண்டு கொள்ளாத பாடல் இது. வெண்ணிற ஆடை மூர்த்தி சுருளிராஜன் இருவரும் இந்த படத்தில் பெண்களை தேடி அலையும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் பாடல் அதனால். இந்த பாடல் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக இருக்கும். தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களூக்காக பதிவு செய்யபப்ட்ட பாடல் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வென்னிறாடை மூர்த்தி நடித்தார் அவர் குரலுக்காகத்தான் பாலுஜி பாடியிருக்கிறார். சுருளிராஜன் அவர்களூக்கு மலேசியா வாசுதேவன் அவர்கள் வித்தியாசமான முயற்சி. நடிகர்கள் இருவரும் பாடல் காட்சி முடிவில் அடிபட்டு நொந்து நூலாகி வரும் உணர்ச்சியை அப்படியே தத்ரூபமாக தங்கள் குரலில் இறுதியில் பாடியிருப்பது அமர்க்களம்.
8. எங்கெங்கும் கண்டேனம்மா பெண்கள்
படம்: உல்லாசப்பறவைகள்
பாடிவர்கள்: எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன்
இந்த ஒலித்தொகுப்பின் முக்கிய நோக்கமே பாலுஜியின் அபாரமான வித்தியாசமான திறமையை வெளிகொண்டுவந்து இணையதள அன்பர்கள் கேட்டுரசிக்கத்தான். அவரின் திறமையை வெளியினை வெளிக்கொணர்ந்த அனைத்து இயக்குநர்களூக்கும் இசையமைப்பாளருக்கும் தான் நன்றி சொல்லவேண்டும். அது போன்ற பாடல்களை தேடிப்பிடித்து உங்கள் செவிகளூக்கு விருந்தாக படைக்க உதவிய அனைத்து அன்புள்ளங்களூக்கும் கேட்டு ரசித்த இணையதள அன்பர்களூக்கும் என் மனாமார்ந்த நன்றி. கேட்டுவிட்டு 4.6.2009 அன்று கொண்டாடும் அபார திறமை பெற்ற நம் பாலுஜி அவர்களூக்கு பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிடுங்கள்.
-- கோவை ரவி