823 அய்யம் பேட்டை அய்யரே


இந்த பாடல் வரும் படத்தின் தகவல்கள் தேடித்தேடி ஓய்ஞ்சு போன போது கிடைச்சிடுச்சு..”வேலை கிடைச்சிடுச்சு” என்ற படத்தில் தான் இந்த பாடல் என்று இணையத்தில் தேடினால் அடேங்கப்பா அருமையான படத்தகவல் மாயம்.காம் தளத்தில் கொட்டிகிடந்தது. இந்த தளத்தில் விவரமாக இந்த படத்த்தின் தகவல்களை தந்தவருக்கு பா.பி.பா தளத்தின் சார்பாக நன்றி.
பி.வாசு டைரக்ட் செய்த "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில் சத்யராஜ் கதாநாயகனாகவும், சரத்குமார் வில்லனாகவும் நடித்தனர். பி.வாசு டைரக்ட் செய்த பல வெற்றிப் படங்களில் சத்யராஜ் நடித்தார். அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
"என் தங்கச்சி படிச்சவ படத்தின் மூலம் பி.வாசு மிகச் சிறந்த டைரக்டராக அடையாளம் காட்டப்பட்டார். இந்த வெற்றி மூலம் ரஜினி, விஜயகாந்த் படங்களையும் இயக்கினார். "பொன்மனச் செம்மல்'' படத்தில் விஜயகாந்தையும், பணக்காரன் படத்தில் ரஜினியையும் இயக்கினார்.
டைரக்டர் பி.வாசுவைப் பொறுத்தவரையில் வேலையில் வேகம் இருக்கும். அதே அளவுக்கு தரமும் இருக்கும்.
பிரபுவை வைத்து "சின்னத்தம்பி'' படத்தை இயக்கிய அதே நேரத்தில்தான், என்னை வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்குவது எவ்வளவு சிரமமானது என்பது, இயக்குனர்களுக்குத்தான் தெரியும்.
சரத்குமார்
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. கவுதமி முதன் முதலாக எனக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் சரத்குமார் எனக்கு வில்லனாக நடித்தார். ஒரு நாள் படப்பிடிப்பு இடைவேளையில் அவரிடம், "சரத்! உங்களால் ரொம்ப நாள் வில்லனாக நீடிக்க முடியாது'' என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னதும் சரத் திடுக்கிட்டார். "ஏன் சார் அப்படிச் சொல்றீங்க?'' என்று கேட்டார். நான் அவரிடம், "உங்க பர்சனாலிடி, நடிப்புத் திறமை இரண்டுமே சீக்கிரமே நீங்க ஹீரோ ஆயிடுவீங்கன்னு சொல்லுது. அதைத்தான் அப்படிச் சொன்னேன்'' என்றதும் சரத் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். நான் சொன்னது போலவே அடுத்த ஒன்றிரெண்டு படங்களைத் தொடர்ந்து, சரத் ஹீரோவாகி விட்டார்.
சண்டைக்காட்சி
சரத்தின் வளர்ச்சிக்கு தொழிலில் அவர் காட்டிய அதீத அக்கறை முக்கிய காரணம். "வேலை கிடைச்சிடுச்சு'' படத்துக்காக நானும் சரத்தும் ஒரு சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஒரு தகரம் அவரது காலை குத்திக் கிழித்து ரத்தம் கொட்டியது. நானும் டைரக்டர் பி.வாசுவும் உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு சரத்தை அழைத்துப் போனோம். தகரம் ஆழமாகப் பதிந்து சதையை கிழித்திருந்ததால், டாக்டர் தையல் போட வேண்டும் என்றார். பொதுவாக கொஞ்சம் பெரிய அளவில் காயம் என்றால் மயக்க மருந்து கொடுத்தே தையல் போடுவார்கள். அந்த ஆஸ்பத்திரியில் அந்த அளவுக்கு வசதி இல்லாததால், வலி மரத்துப்போகிற ஊசி போட்டு, பிறகு தையல் போட்டார் டாக்டர். கண்டிப்பாக ஒரு மூன்று நாளாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்
சொல்லியனுப்பினார்.ஆனால், சரத்தோ மறுநாளே சண்டைக் காட்சியில் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்! டைரக்டரும் நானும் சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. "எனக்காக படப்பிடிப்பு தள்ளிப் போகக்கூடாது'' என்று சொன்னவர், தையல் போட்ட காலுடன் சண்டைக் காட்சியில் நடித்தார். காயம்பட்ட காலுடன் நடிப்பது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே நடித்தபோது காட்டிய வேகத்தை விட, இம்முறை அதிக வேகத்துடன் சண்டை போட்டார்.
வலிகளையும், வேதனைகளையும் தாண்டித்தான் வெற்றி பெற முடியும் என்பதை சரத் விஷயத்திலும் உணர்ந்தேன்.
படத்தை 40 நாளில் எடுத்து முடித்தார், பி.வாசு. இந்தப் படத்துக்கு முன், என் நடிப்பு வாழ்க்கையில் ஏற்பட்ட சின்ன இடைவெளியை இந்தப்படம் சரி செய்தது. படத்தின் விளம்பரத்தில் கூட இதை உறுதிப்படுத்தும் விதத்தில் டைரக்டர் பி.வாசு, "மீண்டும் உங்கள் சத்யராஜ×க்கு வேலை கிடைச்சிடுச்சு'' என்று குறிப்பிட்டார்!
வேலை கிடைச்சிடுச்சு'' படத்தில்
சத்யராஜ் - கதாநாயகன்
சரத்குமார் - வில்லன்
பி.வாசு - இயக்குநர்
|
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே
பொன்னு புள்ள மனம் முடிக்க தேதி சொன்னானே
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
பாக்கு வெச்சு தேதி ஒன்னு பார்த்து சொல்லுங்க??
நாயர்தெரு மகளுக்கும் கவுண்டரோட மகனுக்கும்
கல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
பாக்கு வெச்சு தேதி ஒன்னு பார்த்து சொல்லுங்க?
கூப்பிடீங்களா?
உன்னையில்லமா கிரகமே..உட்காரு
இரண்டு.. இரண்டாந்தேதியா ?
இல்லை ஏழு.. ஏழாந்தேதியா?
ஏழுக்கு முன்னாடி இரண்டு
இரண்டு பின்னாடி ஏழு.. இருபத்தி ஏழு
யப்பா இருபத்தி ஏழு
அத்வும் தேதியில்ல வயசு
அய்யரே இப்ப நீ உத வாங்கப்போற
யே நான் தேதி வைக்கப்போறேன்
மாசி மாசம் வெள்ளி கிழமை ஆறாம் நாள்
மூகூர்த்தம்..மூகூர்த்தம்...சுபமூகூர்த்தம்
ரொம்பவுந்தான் குனிஞ்ச பொன்னு
ஊரையெல்லாம் கூட்டி வந்து
மனு கொடுத்தா மாப்பிள்ளையை மடக்கிப்புட்டா
கைவளையல் புடிச்சுப்புட்டா ஹ..
காரியத்தை முடிச்சுப்புட்டா ஹ.. ஹ..
இப்பவும் நான் சமைஞ்ச பொன்னு
உன்னை என்னி பச்சத்தண்ணி குடிச்சதில்ல
கண்ண மூடி படுத்ததில்ல
என் கவலை உனக்கு இல்ல
எப்பவுமே ஊர் கவலை
நான் புடிச்ச உத்தமபுத்திரன் தான்
நாடறிஞ்ச சத்தியசுந்தரந்தான்
நாளூமது நெஞ்சை அள்ளூற
மஞ்ச பூசுற மஹாலக்ஷ்மிதான்
சாமி பார்த்து சேர்த்து வச்ச புருஷன் தான்
யாருக்குமே இல்லை இங்கு வருத்தம் தான்
மாலை சூடும் காட்சிதான்
எல்லோருமே சாட்சி தான்
கல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே
பொன்னு புள்ள மனம் முடிக்க தேதி சொன்னானே
புள்ளி மயில் மனசு வெச்சு பூவிலங்க பொட்டு வச்சு
என்ன புடிச்ச என்னம் போல கதமுடிச்ச
ஆசையதான் அமுக்கடிச்சா அவபக்கம் இழுத்தடிச்சா
வீட்டுகுள்ள சைட்டு அடிச்சு நெஞ்சுக்குள்ள பைட் அடிச்சு
மயங்க வச்சான் என் மனச மலர வச்சான்
என் மனச படம் புடிச்சான் எப்படியோ இடம் புடிச்சான்
சீர்வரிசை பந்தலில் வச்சுடுவேன்
மாப்பிள்ளைக்கு சூட்டுக்கள் தெச்சிடுவேன்
உள்ள?? நான் பொங்க வைக்கனும்
பூசவைக்கனும் எங்க வீட்டுலதான்
நூறு ஆண்டு பூவும் பொட்டும் மனக்கனும்
ஆறு ஏழு புள்ள குட்டி பொறக்கனும்
வண்ண வண்ண வாழை தான்
மாட்டிகிற வேளைதான்
கல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே
பொன்னு புள்ள மனம் முடிக்க தேதி சொன்னானே
பஞ்சங்கத்தான் பாத்துங்க பாக்கு வெத்தலை மாத்துங்க
ல்யானமாம் கல்யானமாம் கல்யானமாம்
பாட்டு கச்சேரியாம் கச்சேரியாம் கச்சேரியாம்
அய்யரே அய்யரே அய்யாரய்யரே
அய்யம் பேட்டை அய்யரே














