Friday, November 27, 2009

866 புள்ளிமானே புள்ளிமானே




மான் போல துள்ளி ஓடும் மனது
கட்டுக்கடங்காமல் திரியும் காளை போல்
காண்பதெல்லாம் கண்டு தவிக்க
கும்மாளம் போடுது தோப்புக்குள்ளே
காதல் பண் பாடுது நெஞ்சுகுள்ளே

பாலுஜியின் குரலும் சித்ரா மேடம் குரலும் இணைந்து பாடலின் தாளங்களுடன் ஒரே சீராக செல்வது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது கேட்டு மகிழுங்கள்.

பாடல்: புள்ளிமானே புள்ளிமானே
படம்: ஜகதால பிரதாபன்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ரா
இசை:சங்கர் கனேஷ்
பாடலாசிரியர்:வைரமுத்து

Get this widget | Track details | eSnips Social DNA


எஸ்.பி.பி:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே

சித்ரா:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
நீ எங்கே அட நான் அங்கே

எஸ்.பி.பி:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே

எஸ்.பி.பி:
தோப்புக்குள்ளே காவல் இல்லை சுத்தி முத்தி யாரும் இல்ல
மெதுவா...... வந்து தொடவா

சித்ரா:
காஞ்சு போன காளையிது கட்டுகாவல் மீறிவிடும்
சொல்லவா..... இன்னும் சொல்லவா

எஸ்.பி.பி:
எத்தனை காலம் இன்னும் தவிக்க
பெண் பூவே எப்படி உன்னை இன்னும் அடக்க
எத்தனை காலம் இன்னும் த..வி..க்க
பெண் பூவே எப்படி உன்னை இன்னும் அடக்க

சித்ரா:
ஆடுற மாட்டை ஆடுற படியும்
பாடுற மாட்டை பாடுற படியும்
ஓடுற மாட்டை ஓடுற படியும்.. நீ துரத்த..

எஸ்.பி.பி:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே

சித்ரா:
மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா

எஸ்.பி.பி:
நீ எங்கே அட நான் அங்கே

சித்ரா:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே

சித்ரா:
ஆத்துகுள்ள நான் குளிக்க அக்கம் பக்கம் வந்ததென்ன
கண்ணையா என் கண்ணையா

எஸ்.பி.பி:
தங்கத்துக்கு மஞ்சப்பூச ஆசைப்பட்டு வந்துருக்கேன்
கண்ணம்மா இளம் பொண்ணம்மா

சித்ரா:
மன்மத மஞ்சம் கட்டிக்கொடுங்க என் கண்ணனே
சங்கதி கொஞ்சம் கத்துக்கொடுங்க ஹஹ
மன்மத மஞ்சம் கட்டிக்கொடுங்க என் கண்ணனே
சங்கதி கொஞ்சம் கத்துக்கொடுங்க

எஸ்.பி.பி:
பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட மோகனராஜன் வந்த பின்னும்
கன்னிப்பெண்ணெ நெஞ்சுக்குள்ளே காண வேண்டும்

எஸ்.பி.பி: சித்ரா:
புள்ளிமான... ஹோய்
புள்ளிமானே... ஹா
உன் ஜோடி நான் தானே

எஸ்.பி.பி:
ஹோ மானு போகும் பாதை எல்லாம் மச்சான் போகும் பாதையம்மா

சித்ரா:
நீ எங்கே அட நான் அங்கே

எஸ்.பி.பி:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே

சித்ரா:
புள்ளிமானே புள்ளிமானே உன் ஜோடி நான் தானே

Thursday, November 26, 2009

865 ஒழுங்கா படிக்க விடாமா



தற்போது கல்லுர்ரி மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் இதோ அவர்களூக்காக ஒரு பாட்டு
இல்லையில்லை அவங்க சார்பாக பாலுஜி அவர்கள் ஒரு பாட்டு பாடறார் கேளூங்கோ. அடெங்கப்பா என்னவொரு எனர்ஜியான பாடல் படத்தின் தலைப்பே வித்தியாசமா இருக்குது. புயல் ஓஓஒன்னு ரீங்காரம் தான் உண்டாக்கும். இந்த பாலுஜி புயல் குரலால் என்னவொரு அட்டகாசம் செய்கிறது. இந்த பாடலும் கோவை ரசிகர் திரு.வி.கோபாலகிருஷ்னன் அவர்களின் விருப்பபாடல் தான் நாமும் அவருடன் சேர்ந்து கேட்டு மகிழுவோம். பாலுஜி தலைவரே இப்படியெல்லாம் கலக்கலா பாடி கொல்றீங்களே.. எங்களை..எங்களை..

படம்:புயல் பாடும் பாட்டு
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி குழுவினர்
பூம்புகார் தயாரிப்பு
இயக்கம்:மணிவண்ணன்
திரைக்கதை வசனம்:கலைஞர்
இசை:இளைய ராஜா
வருடம்:1987

Get this widget | Track details | eSnips Social DNA


மாணவர்களே மாணவர்களே
இளைத்து இளைத்து போனவர்களே
பணம் கொடுத்து ஜெயித்தவர்களே
படிப்பை மறந்து தோத்தவர்களே
எங்களூக்கு நண்பனாய் எதிரியாய்
அன்பனாய் வம்பனாய்
தந்தையாய் தாயுமானவர்களே
இப்ப மாணவர்களூக்கு இருக்ககூடிய பிரச்சணைகளை சொல்றேன்
எல்லோரும் கேட்டுட்டு அப்படியே ஒத்துக்கோங்க
அப்படா.... இல்லைன்ன உட்டுடறன்யா உட்டுடு..

ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
நாட்டினில் பிரச்சனையோ கேட்டு இந்த மாணவர்கள்
புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியலைங்க
புத்தி தடுமாறுது வழி மாறுது அட ஆண்டவா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை

ஐயோ.. ஐயோ காலேஜில் இடம் கிடைக்க யாரு யாரு கால புடிச்சோம்
கட்டு கட்டா பணம் கொடுத்து இந்த ஊரு சீட்ட புடிச்சோம்
ஐயோ ஐயோ காலேஜில் இடம் கிடைக்க யாரு யாரு கால புடிச்சோம்
கட்டு கட்டா பணம் கொடுத்து இந்த ஊரு சீட்ட புடிச்சோம்

புடவை ஒன்னு, பூவும் ஒன்னு, ஜின்ஸ் ஒன்னு, மேக்ஸி ஒன்னு,
கெடுக்குதா புத்தியத்தான் மற்ந்துவிட்டோம் புத்த்கம்தான்
போஸ்டரு எங்களை விரட்ட விரட்ட
தியேட்டரிலே குறட்டை குறட்டை
க்ளாஸ் ரூமிலே அரட்டை அரட்டை
பரிட்சை பேப்பரு மிரட்ட மிரட்ட
என்னத்த படிச்சு என்னத்த எழுதுவோம் ராமா ராமா

ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
நாட்டினில் பிரச்சனையோ கேட்டு இந்த மாணவர்கள்
புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியலைங்க
புத்தி தடுமாறுது வழி மாறுது அட ஆண்டவா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை

சூடான கடலை முறுக்கு சுண்டல்
சூடான கடலை முறுக்கு சுண்டல்

என்னடா கிண்டல் உன்னாவிரதம் இருக்கிற இடத்துலயா சுண்டல் விக்கிறது

உங்களூக்கு இல்லசார் வேடிக்கை பார்க்க வந்தவங்களூக்கு

அட்றாஆஆ அவன... டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

செக்ஸுக்கு ஒரு க்ளாஸ் வெச்சு சொல்லித்தரவேணுமா
சிந்தனையை கண்ட பக்கம் திருப்பி விட வேணுமா
செக்ஸுக்கு ஒரு க்ளாஸ் வெச்சு சொல்லித்தரவேணுமா
சிந்தனையை கண்ட பக்கம் திருப்பி விட வேணுமா

செக்ஸ் ஒன்னு, சினிமா ஒன்னு
பீச் ஒன்னு, குவாட்டர் ஒன்னு
மாணவரை படுத்துதய்யா மனசெல்லாம் கெடுக்குதய்யா
புத்தகம் படிச்சேன் புரட்டிபுரட்டி
கத்தனும்?? அப்புறம் விரட்டி விரட்டி
பட்டத்தை வாங்க கபடி கபடி
பழைய குருடி கதவ திறடி
எத்தனை எத்தனை விரட்டுது எங்களதான் ராமா ராமா

ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை
நாட்டினில் பிரச்சனையோ கேட்டு இந்த மாணவர்கள்
புத்தகத்தை கையில் எடுத்து படிக்க முடியலைங்க
புத்தி தடுமாறுது வழி மாறுது அட ஆண்டவா
ஒழுங்கா படிக்கவுடாமே தொந்தரவு பன்னாதே எங்களை
எங்களை எங்களை
படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமே பார்த்துக்க ஜனங்களே எங்களை
எங்களை எங்களை

Wednesday, November 25, 2009

864 யாரபத்தியும் இவனுக்கு கவலை




//உசிரு இருக்குதய்யா செலவளிக்க துட்டு இல்ல.. பொட்டியில் பணத்தை வெச்ச எடுத்து கிட்டா தப்பில்ல.. புள்ளையார் கோயிலுக்கு குடமா குடமா போகுதில்லை.. குடத்து பால குடிச்சு புட்டா சாமிக்கொரு நட்டமில்லை.. வசதிக்கு திருடிபுட்டா அதிலும் ஒரு குத்தமிருக்கு
வயத்துக்கு திருடி தின்னா அதுல என்ன தப்புமிருக்கு..//

பாலுஜியின் தீவிர ரசிகர் கோவை திரு.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் அவருக்கும் மட்டுமல்ல எனக்கும் ஏன் எல்லோருக்கும் பிடித்த பாடல் கேட்டு மகிழுங்கள் அன்பு உள்ளங்களே.

பாடல்:பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
படம்: புதியபாதை
நடிகர்:பார்த்தீபன்
பாடிய்வர்கள்; பாலுஜி, வாணிஜெயராம்
இசை:சந்திரபோஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


யாரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை.. கவலையில்லை
ஊரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை க்வலைய்ல்லை
சொக்கனுக்கு தேவை எல்லாம் சட்டியளவு
இவனுக்கு தேவை எல்லாம் புட்டியளவு

ஹ யாரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை.. கவலையில்லை
ஊரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை க்வலைய்ல்லை

உசிரு இருக்குதய்யா செலவளிக்க துட்டு இல்ல
பொட்டியில் பணத்தை வெச்ச எடுத்து கிட்டா தப்பில்ல
புள்ளையார் கோயிலுக்கு குடமா குடமா போகுதில்லை
குடத்து பால குடிச்சு புட்டா சாமிக்கொரு நட்டமில்லை
வசதிக்கு திருடிபுட்டா அதிலும் ஒரு குத்தமிருக்கு
வயத்துக்கு திருடி தின்னா அதுல என்ன தப்புமிருக்கு

அய்ய்யா யாரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை.. கவலையில்லை
ஊரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை க்வலைய்ல்லை
சொக்கனுக்கு தேவை எல்லாம் சட்டியளவு
இவனுக்கு தேவை எல்லாம் புட்டியளவு

தேனி தேன் எடுத்து சேர்த்து வைக்குது கூட்டுகுள்ளே
அதுல யாரு எடுத்துக்கிட்டா திருட்டுன்னு சொன்னதில்ல
அம்பிளைங்க கொடுத்து கிட்டா அமுக்கிட்ட நெஞ்சுக்குள்ளே
அமுக்கி வெச்சத அமுக்கி புட்டா அதுல ஒரு தப்புமில்ல
சாதி மதமெல்ல்லாம் இவனுக்கு இல்ல இவனுக்கு இல்ல
சட்டபடி இவனுக்கு ஒரு பெயருமில்ல பெயருமில்ல

ஹே..யாரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை.. கவலையில்லை
ஊரப்பத்தியும் இவனுக்கு கவலையில்லை க்வலைய்ல்லை
சொக்கனுக்கு தேவை எல்லாம் சட்டியளவு
இவனுக்கு தேவை எல்லாம் புட்டியளவு

863 ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி



சந்தனகாற்று படத்தில் ரொம்ப நாள் கழித்து பாடல் கேட்கிறேன் இது ஒரு அமர்க்களமான மெலோடி பாலுஜி பாட்டு அவருக்கே உரிய ஸ்டைலில் பாடி அசத்தியிருப்பார் செமி கிராமத்து பாடல் மெட்டு. இசையமைப்பாளர் சங்கர் கனேஷ் எப்பவாவது தான் இது போல் பாடல் மெட்டு தருவார் தேவா சார் இசைப் போல் இல்லை? அதுவும் விஜயங்காந்த், கௌதமி ஜோடி கேட்டுக்கவா வேண்டும். நீங்களூம் ரசித்து மகிழுங்கள் அன்பர்களே.

பாடல்:ராசாத்தி ராசாத்தி
படம்:சந்தனக்காற்று
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இசை:சங்கர் கனேஷ்
பாடாலசிரியர்:வாலி

Get this widget | Track details | eSnips Social DNA



நான் இட்டுக்கட்டி பாடுறதில் இன்னும் ஒரு கம்பனடா
துட்டு எடுத்து நீ கொடுத்தா மெட்டு எடுக்கும் கொம்பனடா
மதுர தமிழ் எடுத்து மச்சான் நான் பாடுறப்போ
குதிரை குட்டி போடும் காட்டு யாணை முட்டி போடும்
காறாம் பசுவெல்லாம் பாலா பால் சுரக்கும்
தரையெல்லாம் தமிழ் மணக்கும் ஆஆஆஆ..ஆஆஆஆ
ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ
தமிழ் மணக்கும் ஹஹாஆஆஆ

ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீ ஒருத்தி உன் கூட ஆடவேனும் பாடவேணும்
மாலை நான் மாத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீ ஒருத்தி உன் கூட ஆடவேனும் பாடவேணும்
மாலை நான் மாத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி

பொன்வயல் புது நாத்து உன் மேனி சந்தன பூங்காத்து
கண்களில் ஒரு பாட்டு நீவாடி காதல் கொடி ஏத்து
அம்மன் கோயில் தேரு கால்கள் கொண்டு ஆடுதோ
தென்னை இளநீரை சேலை கொண்டு மூடுதோ
பாய் தான் போட வாய் வெடிச்ச பூதான் வாட
உஹஹ அட வாம்மா கூட பாட்டெடுத்து நான் தான் பாட
பார்க்க ஒரு மோகம் தான் தாகம் தான் தானா உண்டாச்சு

ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீ ஒருத்தி உன் கூட ஆடவேனும் பாடவேணும்
மாலை நான் மாத்தி
ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி

நல்லதொரு நால் பாத்து ஏன் வீட்டில் வந்து நீ விளக்கு ஏத்து
நெத்திலி மீன் சோறு நீ ஆக்கி நித்தமும் பரிமாறு
வண்ணப்பிள்ளை சோல வாய நாணும் காட்டணும்
பெத்த தாயே போல நீயும் வந்து ஊட்டனும்
கட்டில் மேலே ஐயோ பூ விரிச்ச மெத்தை போட்டு ஹஹ
கொண்டை சேவல் கூவும்வர காதல் பாட்டு
பாட ஒரு மோகம் தான் தாகம் தான் தானா உண்டாச்சு

ராசாத்தி ராசாத்தி போவாதே சூடேத்தி
நூத்துல நீ ஒருத்தி உன் கூட ஆடவேனும் பாடவேணும்
மாலை நான் மாத்தி
ராசாத்தி ராசாத்தி ஹஹ
போவாதே ம்ம்ம்
ராசாத்தி ராசாத்தி போவாதே

Monday, November 23, 2009

862 கண்ணும் கண்ணும் பேசுது



பாசக்கனல் என்ற படத்தில் இந்த பாடல் வருகிறது இந்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை தெரிந்தவர்கள் தரலாமே? பிரபலமாகாத பாடல் தான் இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்காக கேட்கலாம்.

படம்:பாசக்கனல்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,லத்திகா
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்:எஸ்.ஏ.ராஜ்குமார்
வருடம்:1989

படத்தகவல் உடனே வழங்கிய பெங்களூர் தீவிர பாலுஜி ரசிகர் திரு.ஆர்.ஜி.நாராயணன் அவர்களுக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
காதல் மூச்சு வாங்குது
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
அசை மனதின் பாழை இதுவோ
அசை மனதின் பாழை இதுவோ

பூவை தொடவோ கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்

பக்கம் வந்து குளிரடிக்குது ஏனெதுக்கு
வெட்கம் விட்டு போன பின்பே நீ நெருங்கு

பக்கம் வந்து குளிரடிக்குது ஏனெதுக்கு
வெட்கம் விட்டு போன பின்பே நீ நெருங்கு

கிச்சு கிச்சு மூட்டுதடி பொடவ தலைப்பு
அச்சம் விட்டு போன பின்பு அதுவும் எதுக்கு
பள்ளியறை பாடங்களை படிக்க வேணுமா
பாதியில நாடகத்த முரிக்க வேணுமா.. ஏய்..
ப்ச்ஞ்சும் நெருப்பும் பக்கம் இருக்கு அட
பத்திக்க போகுதே

கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்

மொட்டு ஒன்னு தொட்டதும் தொட்டதும் பூத்திருச்சு
பத்துவிரல் பட்டதும் முத்திரையும் ஆயிடுச்சு
கற்றுத்ர வித்தைகள் இருக்கு த்ரவா த்ரவா
கட்டளையிட்டதும் மெத்தையில் வரவா வரவா

கொஞ்சம் விட்ட
வாசல் கதவ விட்ட வேற பார்வை
ரொம்ப நேரமா கனவா
உடம்பு தவிக்குது

கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
காதல் மூச்சு வாங்குது
பக்கம் வந்து குளிரடிக்குது ஏனெதுக்கு
வெட்கம் விட்டு போன பின்பே நீ நெருங்கு
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்
கண்ணும் கண்ணும் பேசுது டக் டக்

Friday, November 20, 2009

861 தலைவா நீவா தரவா பெறவா



//ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் நனைந்தேன்.. ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்.. இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்த்த்தேன்.. இதழ்களில் சில கோலம் வரந்திட துடித்தேன்..// இது போன்ற அழகான வரிகள் கொண்ட டூயட் பாடல் இது. பாலுஜியும், வாணியம்மாவும் அமர்க்கள்பப்டுத்தியிருப்ப்பார்கள். பாலுஜி தீவிர ரசிகர் கோவை திரு.கோபலகிருஷ்னன் அவர்கள் விரும்பி கேட்ட பாடல் இது. அவருடன் நாமும் சேர்ந்து ரசிப்போமே.

பாடல்: தலைவா நீவா
படம்: புதியாதை
பாடியவர்கள்:பாலுஜி,வானிஜெயராம்
இசை: சந்திரபோஸ்.

Get this widget | Track details | eSnips Social DNA


தலைவா நீவா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

தலைவி நீவா தரவா பெறவா
மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்
மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

தலைவா..ஹா.. நீவா...வா
தரவா..ஆஆ பெறவா... வா

தலைவி..ஹா.. நீவா...வா
தரவா..ஆஆ பெறவா... வா

ஒரு முறை உன்னை பார்த்தேன் உயிர் நனைந்தேன்
ஜன்னலில் ஒரு பூவாக தினம் தினம் மலர்ந்தேன்

இளங்கிளி உன் கோலம் தினம் தினம் ரசித்த்த்தேன்
இதழ்களில் சில கோலம் வரந்திட துடித்தேன்

உள்ளுக்குள் என்னென்ன சத்தங்கள்
இது பெண்ணுக்குள் இல்லாத அர்த்தங்கள்

உன்னோடு நான் கொண்ட சொந்தங்கள்
என் உள்ளங்கை காணாத இன்பங்கள்

தலைவா நீவா தரவா பெறவா

ஆஆ மழை விழுந்தது போலே விழுந்தது கடிதம்

மலர் மலர்ந்தது போலே மலர்ந்தது இதயம்

தலைவி நீவா...

தரவா.. ஹோய்...பெறவா.. ஆஆஆ

மழை கொண்டு வரும் காற்று மடியினில் வந்ததா
மனதுக்குள் ஒரு பூப்பூக்க மழை துளி தந்ததா

அள்ளி தெளிக்கின்ற வானம் பருகிட வந்ததா
தலையணை ஒன்றை நான் கேட்டேன் இரவினை தந்ததா

ஆரம்பம் இல்லாத ஆறில்லை
அடி ஆசைகள் இல்லாத பெண்ணில்லை

பேர் ஒன்றும் இல்லாத ஊரில்லை
என் பெண்மைக்கு நீயின்றி வேறில்லை

தலைவி..ஹா.. நீவா...வா

Thursday, November 19, 2009

860 மாராப்பு போட்ட புள்ளே மஞ்சக்குளிச்ச புள்ளே



கிராமத்து சூழ்நிலை பாட்டு ஒன்று கேட்போமா? அட்டகாசமான பாட்டு பாலுஜியும் சித்ரா மேடமும் பட்டைய கிளப்பியிருக்கிறார்கள் கேட்டு மகிழுங்கள்.

படம்:நம்ம ஊரு பூவாத்தா
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,சித்ரா
நடிகர்: முரளி,கௌதமி,
இசை: தேவா

Get this widget | Track details | eSnips Social DNA


மாராப்பு போட்ட புள்ளே மஞ்சக்குளிச்ச புள்ளே
பூவாத்தா அடி பூவாத்தாஆஆஆஆ
காதல் வந்து கண்ணுக்குள்ளே
மின்னல் அடிக்குது.. மின்னல் அடிக்குது
கன்னிப்பொன்னு கூட்டம் எல்லாம்
கும்மி அடிக்குது கும்மி அடிக்குது

காதல் வந்து கண்ணுக்குள்ளே
மின்னல் அடிக்குது.. மின்னல் அடிக்குது
கன்னிப்பொன்னு கூட்டம் எல்லாம்
கும்மி அடிக்குது கும்மி அடிக்குது

வாயாடி வம்புக்காரியே..
சாயாத ஜம்பக்காரியே??
வாயாடி வம்புக்காரியே.. ராசாத்தி
சாயாத ஜம்பக்காரியே??
மஞ்சள் முகம் கொண்டதொரு மல்லிகையே
அடி உண்மைகளை சிந்திவரும் புன்ன்கையே
உன் சந்தன கண்ணத்தில் முத்தங்கள் சிந்திடும்
சம்மதம் தந்திடு சிங்கார கன்னிகையே

மாராப்பு போட்ட புள்ளே மஞ்சக்குளிச்ச புள்ளே
பூவாத்தா இந்த பூவாத்தாஆஆஆஆ
காதல் வந்து கண்ணுக்குள்ளே
மின்னல் அடிக்குது.. மின்னல் அடிக்குது
கன்னிப்பொன்னு கூட்டம் எல்லாம்
கும்மி அடிக்குது கும்மி அடிக்குது

காதல் வந்து கண்ணுக்குள்ளே
மின்னல் அடிக்குது.. மின்னல் அடிக்குது
கன்னிப்பொன்னு கூட்டம் எல்லாம்
கும்மி அடிக்குது கும்மி அடிக்குது

கல்யாண ஆசை வந்தது....
கண்ணோரம் ஜாடை வந்தது..
கல்யாண ஆசை வந்தது....என் ராசவே
கண்ணோரம் ஜாடை வந்தது..
பொட்டு வச்சேன் உன் நினைப்பு பொட்டு வச்சேன்
பூப்போட்டு சம்மதை சொல்லிப்புட்டேன்
என் காதல் செடியில் ஆசை மலர்கள்
பூத்தது பூத்தது சமம்தமே

மாராப்பு போட்ட புள்ளே மஞ்சக்குளிச்ச புள்ளே
பூவாத்தா அடி பூவாத்தாஆஆஆஆ

காதல் வந்து கண்ணுக்குள்ளே
மின்னல் அடிக்குது.. மின்னல் அடிக்குது
கன்னிப்பொன்னு கூட்டம் எல்லாம்
கும்மி அடிக்குது கும்மி அடிக்குது

ஆஆஆஆ காதல் வந்து கண்ணுக்குள்ளே
மின்னல் அடிக்குது.. மின்னல் அடிக்குது
கன்னிப்பொன்னு கூட்டம் எல்லாம்
கும்மி அடிக்குது கும்மி அடிக்குது

ஆஆ..ஆஆ...ஆஆ...ஆஆ

Wednesday, November 18, 2009

859 பச்சப்புள்ள அழுதுச்சுன்னா



//முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா.. இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா
நேத்து நான்.. மிருகமா.. இன்னைக்கு மாற்றமாகி செஞ்ச மாயமா.. முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா.. இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா// இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தவை ஆகையால் ரொம்ப நாள் கழிச்சு ஒரு சோகப்பாடல் நடிகர் பார்த்தீபன் நடித்த படம் புதிய பாதை பாலுஜி என்னமாக உருகுகிறார் நம்மையும் உருக்குகிறார்.

இந்த ஒலிக்கோப்பை மிகவும் ரசித்து விரும்பி கேட்ட கோவை பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.வி.கோபலகிருஷ்னன். ஒலிக்கோப்பை எனக்கு அனுப்பி வைத்ததற்க்கு அவருக்கு பா.நி.பா தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றி.

பாடல்:பச்சப்புள்ள அழுதுச்சுன்னா
படம்: புதியபாதை
நடிகர்:பார்த்தீபன்
பாடிய்வர்கள்; பாலுஜி, வாணிஜெயராம்
இசை:சந்திரபோஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்
இந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா
பிள்ளையே பிள்ளையே உன் மனம் வெள்ளையே
கள்ளம் கபடம் இல்லையே
பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்
ஹஇந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா

புள்ளைங்க வேணுமின்னா நான் கல்யாணம் பன்னிக்கிட்டேன்
ஒரு புள்ளையே தேர்ந்தெடுத்து நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்
கர்ப்பத்துல நம்ம புள்ள.. நீங்க மட்டும் என் புள்ள
கர்ப்பத்துல நம்ம புள்ள.. நீங்க மட்டும் என் புள்ள
உன்ன போல நல்ல புள்ள ஊருக்குள் யாரும் இல்ல

முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா
இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா
நேத்து நான்.. மிருகமா..
இன்னைக்கு மாற்றமாகி செஞ்ச மாயமா
முள்ளையே பூச்சரமா மாத்த முடியுமா
இந்த கல்லையே கனிய வெச்ச கடவுள் நீயம்மா

கற்ப கெடுத்தவனே நீ கையில் எடுத்துக்கிட்ட
ராவணம் போல் இருந்தேன் நீ ராமனா மாத்திப்புட்டே
மாலை தந்த நேரமடி....மாமனுக்கு ஞானமடி
மாலை தந்த நேரமடி....மாமனுக்கு ஞானமடி
உன்ன விட்டா கண்ணு எனக்கு உறவு வேறில்லேஏஏ

பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்

இந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா

பிள்ளையே..

பிள்ளையே..

உன் மனம் வெள்ளையே

கள்ளம் கபடம் இல்லையே

பச்சப்புள்ள அழுதுச்சுன்னா பாட்டு பாடலாம்

ஹஇந்த மீசை வச்ச குழந்தைக்கு என் பாட்டு போதுமா

858 கட்டழகி தொட்டாலென்ன



அந்த காலத்தில் நடிகர் சுமன் படமென்றால் கராத்தே உடையில் அடிக்கிற போஸ் கொடுப்பாரே அந்த காட்சி நினைவுக்கு வரும் அவர் நடித்த படம் தான் நீச்சள் குளம். நடுவிலே காணமா போய் சூப்பர் ஸ்டார் மூலமா திரும்பவும் தமிழ் படங்களில் நுழைஞ்சவர். "கட்டழகை தொட்டாலென்ன" பாடல் இதில் தான் பாடல் பெரிய பிரபலமாகவில்லை தான் இருந்தாலும் ரொம்ப நாள் கழிச்சு கேட்ட்க இனிமையாக தான் இருக்குங்க சார்.

படம்: நீச்சள் குளம்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,, பி.சுசீலா
இயக்குனர் ராமண்ணா
நடிப்பு சுமன், இந்திரானி
இசையமைப்பு தாராபுரம் சுந்தராஜன்
இசை: தாராபுரம் சுந்தரராஜன்
பாடலாசிரியர்: குமாரதேவன்

Get this widget | Track details | eSnips Social DNA


கட்டழகை தொட்டாலென்ன கண்ணத்திலே இட்டாலென்ன
கட்டிலறை காவியமே வா பக்கமா

கட்டழகை தொட்டாலென்ன கண்ணத்திலே இட்டாலென்ன
கட்டிலறை காவியமே வா பக்கமா

பொங்கி வரும் மஞ்சலிலே போதை தரும் பந்தலிலே
பொங்கி வரும் மஞ்சலிலே போதை தரும் பந்தலிலே
என்னென்ன ஏக்கங்களோ நீ சொல்லய்யா

புன்னகையின் ஜாடையிலே பூங்குழலி ஆடையிலே
புன்னகையின் ஜாடையிலே பூங்குழலி ஆடையிலே
மன்னவனின் மயக்கமென்ன நீ சொல்லம்மா

கட்டழகை தொட்டாலென்ன கண்ணத்திலே இட்டாலென்ன
கட்டிலறை காவியமே வா பக்கமா ஆஆஆஆ

நீலவண்ண கண்ணா கண்ணா நான் உனக்கு ராதை
நீலவண்ண கண்ணா கண்ணா நான் உனக்கு ராதை
நீ புரிந்த லீலையிலே மெய் மறந்தேன்

நாணத்திலே சிரித்த நிலா நான் உனக்கு பழுத்த பலா
நாணத்திலே சிரித்த நிலா நான் உனக்கு பழுத்த பலா
நாடகத்தை தொடங்கிடவே நானாக அழைத்திட வா

கட்டழகை தொட்டாலென்ன கண்ணத்திலே இட்டாலென்ன

கட்டிலறை காவியமே வா பக்கமா

குங்குமத்தில் குளித்தவளே கோலமிட்டு சிவந்தவளே
தூசிபட்டு?? கோபமல்ல ஊடலது ஊடலடி

மையலிலே நீந்துகிறாய் ராவினிலே?? ஏங்குகிறாய்
சொக்கி சொக்கிச் சுவைத்ததென்ன சொர்க்கத்துக்கே அழைத்தென்ன
மன்னவா.. கொஞ்சவா.. இன்னும் கொஞ்சவா..

கட்டழகை தொட்டாலென்ன கண்ணத்திலே இட்டாலென்ன
கட்டிலறை காவியமே வா பக்கமா

Tuesday, November 17, 2009

857 கண்ணே என் அழகு ராணி ராதா



//கண்ணே என் அழகு ராணி ராதா// இந்த பாடல் ரொம்ப வருடங்களுக்கு முன் கேட்டது எனது நண்பர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் என் வேண்டுக்கோளுக்கிணங்க இணையத்தில் தேடி பிடித்து அனுப்பினார் அவருக்கு இந்த தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றி.. இந்த பாடல் வரும் படம் பொக்கிஷம் பழசுங்க ரொம்ப பழைய படங்க. அதுவும் மொழி மாற்றம் படம் தெலுங்கிலுருந்து இசையமைப்பாளர் சத்யம் அவர்கள் சர்வ சாதரணமாக மெட்டை தந்திருக்கிறார் அதுவும் பாலுஜியின் குரலில் இனிமையுடன் பாடல் வரிகள் மிகவும் அழகாக எழுதப்பபட்டிருக்கும் கேட்டு பாருங்கள்.

படம்:பொக்கிஷம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை: சத்யம்
வருடம்:1985

Get this widget | Track details | eSnips Social DNA


ஆஆஆஆ..ஆஆஆஆ...ஆஆஆஆ
ஆஆஆஆ..ஆஆஆஆ...ஆஆஆஆ

கண்ணே என் அழகு ராணி ராதா
என் காதல் மலரும் நாள் வராதா
என் ஆசை கடிதமாய் விடாதா
அதே உன் காதலை தராதா
அதே உன் காதலை தராதா

கண்ணே என் அழகு ராணி ராதா
என் காதல் மலரும் நாள் வராதா
என் ஆசை கடிதமாய் விடாதா
அதே உன் காதலை தராதா
அதே உன் காதலை தராதா

காற்றில் ஒரு தென்றல் நானல்ல
கவிஞர்களில் கம்பன் நானல்ல
வாசனையில் முல்லை நானல்ல
ஆசைகளை தேடி நான் சொல்ல
காகிதத்தில் பேசினேன் மெல்ல
கன்னி உன்னை கைகளில் நான் அள்ள
காகிதத்தில் பேசினேன் மெல்ல
கன்னி உன்னை கைகளில் நான் அள்ள
ஓர் பொருளும் அறியேன் இப்போது
உன்னைத்தான் நான் அறிவேன்
ராதா..ராதா..ராதா..

கண்ணே என் அழகு ராணி ராதா
என் காதல் மலரும் நாள் வராதா
என் ஆசை கடிதமாய் விடாதா
அதே உன் காதலை தராதா
அதே உன் காதலை தராதா

ஆடுவது ஊஞ்சல் போல் உந்தன்
கூறுவது அன்பென்னும் வெள்ளம்
தேடுவது பாவை உன் என்னம்
கூறுவது தேவையா இன்னும்
நாளை ஒரு வார்த்தை நீ சொன்னால்
நானும் அந்த காமனை வெல்வேன்
நாளை ஒரு வார்த்தை நீ சொன்னால்
நானும் அந்த காமனை வெல்வேன்
கானும் இடம் யாவும் உன் போலே
பேசுதடி முன்னாலே ராதா..ராதா..ராதா..

கண்ணே என் அழகு ராணி ராதா
என் காதல் மலரும் நாள் வராதா
என் ஆசை கடிதமாய் விடாதா
அதே உன் காதலை தராதா
அதே உன் காதலை தராதா

Friday, November 13, 2009

856 ஏய் ஏய் ஏய் ஏய் ஏல இளங்குயிலே



சில வருடங்கள் முன்னே திருப்பூரில் பாலுஜி ஒரு இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நிகழ்ச்சிக்கு வருமுன் ஒரு கபடி போட்டி நிகழ்ச்சிக்காக தலைமை தாங்கி வந்தேன் என்றார் கூடவே எதுக்கு என்னை கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை என்றார் அதுவும் என்னைப்போய்? ஒரு நகைச்சுவைக்காக தெரிவித்தார். சிறு வயதில் அவர் கபடி ஆடியிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம் எது எப்படியோ? இதோ இந்த பாட்டில் அவர் குரலில் ஆடும் கபடி இருக்கே கேட்க நமக்கு ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கு அவ்வளவு எனர்ஜி பாடலில்.பிரபல நடிகர் ராஜசேகர் தம்பியும், ஆத்தா உன் கோயிலிலே உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் செல்வா படத்தை யாரு பார்த்தா? இணையத்தில் கிடைத்த தகவல் தான் இது. பாடல் சூப்பரோ சூப்பர். கேட்டு மகிழுங்கள்.

படம்:ஆத்தா உன் கோயிலிலே
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி.சித்ரா
இசை:தேவா
பாடலாசிரியர்:காளிதாசன்

Get this widget | Track details | eSnips Social DNA


ராக்காயி மூக்காயி எல்லோரும் வாங்கடி
தில்லானா போடுங்கடி

வாடாத பொன்னுங்க வாலாட்ட வந்தது
வளைச்சு கட்டுங்கடோ

ஏய் ஏய் ஏய் ஏய் இளங்குயிலே
எங்க ஊரு பொன்மயிலே
எட்டு கண்ணும் விட்டெரிக்கும்
அந்தரி சுந்தரி முந்திரி கொட்டை
வாடி என் வள்ளீக்கிழங்கே அட
மதமதப்பு வாடாத மஞ்சக் கிழங்கே

கபடி.. கபடி.. கபடி.. கபடி.. கபடி..
கபடி.. கபடி.. கபடி.. கபடி.. கபடி..
கபடி.. கபடி.. கபடி.. கபடி.. கபடி..
கபடி.. கபடி.. கபடி.. கபடி.. கபடி..
வாடி... அடி வாடி என் வள்ளீக்கிழங்கே அட
மதமதப்பு வாடாத மஞ்சக் கிழங்கே

ஏய் வெத்தல வெத்தல வெத்தல வெத்தல
கொழுந்து வெத்தல பாரு
நான் கும்பகோண ஆளு
பத்தல பத்தல பத்தல பத்தல
பந்தியில் வெச்ச சோறு
அந்த பச்ச தண்ணி மோறு
அந்த மாயவரம் தேரு
அத இழுத்தவ நான் பாரு.. அம்மாடி
நான் ராஜாதேசிங்கு கோட்டை
எங்க பாட்டனோட பேட்டை.. அய்ய
மோதாதே எங்க கையிலே..உஹுஹு
உன் திமிறு எல்லாம் மூட்டை கட்டு ஓட்ட பையிலே...ஹஹ
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
மோதாதே அட மோதாதே எங்க கையிலே..
உன் திமிறு எல்லாம் மூட்டை கட்டு ஓட்ட பையிலே...

ஏய் ஏய் ஏய் ஏய் இளங்குயில்தான்
எங்க ஊரு பொன்மயில்தான்
எட்டு கண்ணும் விட்டெரிக்கும்
அந்தரி சுந்தரி முந்திரி கொட்டை
மோதாதே எங்க கையிலே..
உன் திமிறு எல்லாம் மூட்டை கட்டு ஓட்ட பையிலே...

ஜிங்கிடி ஜிங்கிடி சக்கடச்சான் அட சக்கடடச்சான்
அடி சக்கடச்சான் அட சக்கடடச்சான்
தகதிமி தகதிமி தகதிமி..
கபடி.. கபடி.. கபடி.. கபடி.. கபடி

அத்திரி புத்திரி தவிட்டு தலையன்
ஆந்த கண்ணு முழிக்கும் முழிய
பானச்சோரு பத்தலைன்னானே

த்த்தக புத்தக தழுக்கி சுந்தரி
தானாக பழுத்த முந்திரி
தாவானியை கிழிச்சிகிட்டாளே

ஹேய்..மத்தளம்.. மத்தளம்.. மத்தளம்.. மத்தளம்
மருத மத்தளம் ஜோரு
எங்க மாமன் வயிறு பாரு
சுத்துற.. சுத்துற.. சுத்துற.. சுத்துற
சுத்தி வளைக்கிற சூரன்
நான் மதுர ஜில்லா வீரன்..டுர்ர்ர்ர்
பொட்ட புள்ள கேளு
நான் கட்டபொம்மன் பேரன்
சொந்த ஊமைத்தொற கோட்டை.. அடச்சே
எங்க மாமனோட பேட்டை. அவ்வவ்வ

அடி வாடி என் வள்ளீக்கிழங்கே அட
மதமதப்பு வாடாத மஞ்சக் கிழங்கே
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு.. சடுகுடு
அடி வாடி என் வள்ளீக்கிழங்கே அட
மதமதப்பு வாடாத மஞ்சக் கிழங்கே

ஏய் ஏய் ஏய் ஏய் இளங்குயிலே
எங்க ஊரு பொன்மயிலே
எட்டு கண்ணும் விட்டெரிக்கும்
அந்தரி சுந்தரி முந்திரி கொட்டை
வாடி என் வள்ளீக்கிழங்கே அட
மதமதப்பு வாடாத மஞ்சக் கிழங்கே
ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

மோதாதே எங்க கையிலே..
உன் திமிறு எல்லாம் மூட்டை கட்டு ஓட்ட பையிலே

Thursday, November 12, 2009

855 ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது


//ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா.. ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா. ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது// நான் பார்க்காத பட வரிசையில் என்ற அழகான பல்லவியுடன் தொடங்கும் இந்த பாடல் ரொம்ப வருடங்கள் கழித்து கேட்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

படம்:மாட்டுக்கார மன்னாரு
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, பத்மபூஷன் பி.சுசீலாம்மா
இசை: தேனிசை தென்றல் தேவா
வருடம்:1986

Get this widget | Track details | eSnips Social DNA


ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா..
ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா..

ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது
அவ வருவா தருவான்னு
நான் வாசலிலே காத்திருந்தது

ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது
அவன் வருவான் தருவான்னு
நான் வாசலிலே காத்திருந்தது

ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது

மஞ்சமுக மேகம் வெட்கத்திலே மாறும்
பஞ்சமென கேட்க பக்கத்துணையாக

மூடிய ஆடையில் மாதுளை ஆடும்

நேரத்துல ஜில்லுன்னு காத்து வரும்
தென்னையில நீரோடு போதை வரும்

தாகதுல தந்தானா பாட்டு வரும்
துந்தனனா கட்ச்சேரி நடந்து வரும்

அம்மம்மா தேகம் சிலிர்த்திட பூவா விரிந்திட

ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது
அவன் வருவான் தருவான்னு
நான் வாசலிலே காத்திருந்தது
ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது

முத்து நகை போட்ட முத்தமொன்னு கேட்கும்

நித்தம் நித்தம் பார்க்க நித்திரையை போக்கும்

கூடிய மேடையில் மாவிலை வாடும்

வேகத்துல முத்தாக வேண்டிவிட வேண்டும்
வித்தை என தள்ளாடி மனம் குளிரும்

மோகத்துல வித்தாரம் பேச வரும்
முத்தார வித்தைங்க மீண்டும் வரும்

அம்மம்மா தோதா சிரிச்சிட பூவா விரிஞ்சிட

ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது

அவ வருவா தருவான்னு
நான் வாசலிலே காத்திருந்தது

ஒரு நாள் ராத்திரி திருநாளா போனது

ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா..
ஜிங்கிலா..ஜிங்கிலா..ஜிங்கிலா..

Friday, November 06, 2009

854 தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே



//உயிரே நம் உறவு என்னும் அகராதியில்.. பிரிவு என்னும் ஒரு வார்த்தை கிடையா..தம்மா
ஆஆஆஆ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்.. ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடிவிடக்கூடும் வாசமலர் தான்.. வாடுவது ஏது பாசமலர் தான்.. மாறாது மறையாது மனம் வீசுமே// இந்த வரிகளை என் மனதை கவர்ந்தவை, ரொம்ப நாள் கழித்து தங்கச்சி செண்டிமென்ட் பாடல் பாலுஜி குரலில் கேட்கிறேன் பொதுவாகவே பாலுஜி தங்கச்சி பாசப்பாடல் என்றால் மெழுகாக உருகுவார் இதோ மாநகர காவல் படத்தில் வரும் தங்கைப்பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்ற் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

படம்: மாநகர காவல்
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:விஜயகாந்த்
இசை:சந்திரபோஸ்

Get this widget | Track details | eSnips Social DNA


தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக் கனவே வஞ்சி நிலவே
நாம் இங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்

தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
கொடி மின்னலே.....

மணமாலை மாங்கல்யம் நாளை வரும்
மணவாளன் துணை சேர வேலை வரும்
ஆஆஆஆ எல்லோரும் உன்னை வாழ்த்த காலம் வரும்
என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும்
தங்கையொரு தாயாய் பிள்ளை பெறலாம்
பிள்ளைக்கு இந்த ஹஹமாமன் சீர்வரிசை தரலாம்
நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன்

தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக் கனவே வஞ்சி நிலவே
நாம் இங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
தலைவாரி பூச்சூடும் இளம் தெ..ன்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
கொடி மின்னலே.....

உயிரே நம் உறவு என்னும் அகராதியில்
பிரிவு என்னும் ஒரு வார்த்தை கிடையா..தம்மா
ஆஆஆஆ ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான்
ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா
வாடிவிடக்கூடும் வாசமலர் தான்
வாடுவது ஏது பாசமலர் தான்
மாறாது மறையாது மனம் வீசுமே

தலைவாரி பூச்சூடும் இளம் தென்றலே
தரைமீது வந்தாடும் கொடி மின்னலே
அண்ணன் எனது கண்ணில் எழுந்த
வண்ணக் கனவே வஞ்சி நிலவே
நாம் இங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..

Thursday, November 05, 2009

853 மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம்



//நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக்கோலம்.. அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம் // இந்த வரிகளில் பாலுஜி பி.சுசீலாம்மா குரல்களில் இனிமை இனிமை.. கேட்டு மகிழுங்கள்.

மேகத்துக்கும் தாகமுண்டு
இயக்குனர் எஸ். ஜெகதீசன்
தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிக்சர்ஸ்
பி. எஸ். ஹரிஹரன்
நடிப்பு சரத் பாபு, ரஜனி சர்மா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்

Get this widget | Track details | eSnips Social DNA


மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இது
மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமாள் படித்தாளே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது
காலம் இல்லாதது .... ஆஆஆ காதல் பொல்லாதது

இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட
இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய் பாட
இரவும் பகலும் உறவும் கனவும் சுகமல்லவோ

ஒரு நாள் பொழுதும் உன்னை பிரிந்தாள் மறந்தேன் என்னை
ஒரு நாள் பொழுதும் உன்னை பிரிந்தாள் மறந்தேன் என்னை
இதுவும் கனவில் இனிமை கலந்தாள் இதமல்லவோ

ஆஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆஆ

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமாள் படித்தாளே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது
ஹாஆஆ..காலம் இல்லாதது ....

வலையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம் ஆஆஆ
வலையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மனக்கும் நீ காணலாம்

நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக்கோலம் ஆஆஆ
நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக்கோலம்
அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்

ஆஆஆஆ...ஆஆஆஅ...ஆஆஆஆ

மரகத மேகம் சிந்தும் மழை வரும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கே திருமாள் படித்தாளே
ஆசை நெஞ்சம் கூடும் போது காலம் இல்லாதது
காலம் இல்லாதது .... ஆஆஆ காதல் பொல்லாதது

Followers

பகிர்க