
//நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்.. பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது.. பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது.. வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது//
படம்:அவளும் பெண் தானே
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, பி,சுசில்லாம்மா
நடிகர்கள்:முத்துராமன், சுமித்ரா
இசை:வி.குமார்
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்
நன்றியை சொல்ல நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன் வேறென்ன செய்தேன்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
உறவை துறந்து ஊரை பிரிந்து
பறவை ஒன்றாஉ வந்தது அதன்
உடம்பை தின்று பசியை தீர்த்த
உலகம் சுற்றி நின்றது
பறவை மனமும் பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவுகள் பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
காலை ஒரு நாள் கண்ணில் நின்று??
கனவினில் நான் தான் திகைத்தேனா
கடவுள் மனிதன் அருகில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தானா
தேவனின் உள்ளம் கோவிலாய் என்னி
தேவியை நெஞ்சில் ஏற்றினேன்
நெஞ்சிலே கொண்டு நிலவெல்லாம்
வண்ண மாலையாய் கொண்டு சூட்டினேன்
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
என் எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
0 comments:
Post a Comment