914 ஆசை அது யாரை கேட்டும்
,
,
இந்த பாடலை கேட்பதற்க்கு முன் சின்ன விஷயம். பாலுஜி பாடிய பாடல்களில் அதிகம் திரும்ப திரும்ப கேட்கும் பாடல் வரிசைகளில்பூமா தேவி போல வாழும் தெய்வம் நீ தானேஇந்த பாடல் சோகம் என்னை பெரிதும் பலதடவை மனசை பாதித்துள்ளது. இந்த சுட்டியுள் உள்ள இந்த பாடலை கேட்டு விட்டு இந்த பதிவில் உள்ள பாடலை கேளூங்கள். ஒரு ஒற்றுமையை உணர்வீர்கள் அது என்ன என்பதை நீஙக்ளே பின்னூட்டத்தில் தந்துவிடுங்கள். குங்கும கோலங்கள் இந்த படத்தை நான் பார்க்காததால் அதிகம் காட்சியமைப்பு விவரிக்க முடியவில்லை. இதன் காட்சியமைப்பு தெரிந்தவர்கள் சொல்லாலாமே?.. பாட்டு கேட்டீங்களா? பாலுஜி அவர்களின் குரலின் இனிமையை என்னவென்பது? ஏதேன்பது? இனிமையான பாடலை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்...
பாடல்:ஆசை அது யாரை கேட்டும்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம்: குங்கும கோலங்கள்
இசை: ஷ்யாம்
|
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை
அலையில் மோதிய ஓடம் போலே
மனதில் ஓடும் ஓடமே
அலையில் மோதிய ஓடம் போலே
மனதில் ஓடும் ஓடமே
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை
ஆத்து நீரின் ஓட்டம்
ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து
போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்
ஆத்து நீரின் ஓட்டம்
ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து
போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்
பொறந்தோம் வளர்ந்தோம் எல்லாமே
நிலங்கள் எல்லமே ஒரே கோலம்
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை
அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி
ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி
அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி
ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி
நிறங்கள் நிலங்கள் ஒரே மாற்றம்
ஓடங்கள் ஓடங்கள் வரும் காலம்
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ...













