Friday, April 30, 2010

978 வளையல் சத்தம் யம்மா யம்மா




//பூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி.. போதுமடி தாங்காது கண்ணாமூச்சி//

ஆஹா ஆஹா சூப்பருங்கோ...

படம்:சேலம் விஷ்ணு
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி டாக்டர்.எஸ்.ஜானகியம்மா
லக்‌ஷ்மி சாந்தி மூவீஸ்
வருடம்:1990


Get this widget | Track details | eSnips Social DNA


வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க
வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க

விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

என்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா

மந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா

வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க

விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

என்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா

மந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா

ஆஆஆ வளையல் சத்தம் யம்மா யம்மா குலுங்க குலுங்க

விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

காத்து வரக்கூடாது கண்ணே பாப்பா
போட்டு விடும் நீயாக உள்ளே தாப்பா

நேத்து முதல் ராவானா ஒரே ஏக்கம்
வேர்த்துவிட்ட பூமேனி உன்னை கேட்கும்

எதுக்கு ஒரு மேலாடை அதுக்கு இனி நானாச்சு

இருக்குது நீளமா?? எதுக்கு இனி வீண்பேச்சு

வளையல் சத்தம்... ஹ யம்மா யம்மா குலுங்க குலுங்க

விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

பாடிவரும் பூந்தேரு என்னைப் பாரு
வடம் புடிக்க வேறாளு இருந்தா கூறு

பூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி
போதுமடி தாங்காது கண்ணாமூச்சி

எடுத்து தரேன் ராசாவே இருக்குது இங்கே எராளம்

வயசு வந்த பின் தானே மனசு ரொம்ப தாராளம்

வளையல் சத்தம்.. ஹஹ யம்மா யம்மா குலுங்க குலுங்க

ஏய் விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

என்னவோ என்னவோ மெதுவாக மந்திரம் சொல்லலாமா

மந்திரம் சொன்னதும் பொதுவாக தந்திரம் செய்யலாமா

வளையல் சத்தம் யம்மா யம்ம்ம்மா குலுங்க குலுங்க

விளக்கு வெச்சேன் யப்பா யப்பா நெருங்க நெருங்க

Thursday, April 29, 2010

977 விழிகள் மீனோ மொழிகள் தேனோ



எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள் மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள் நல்லா `பைட்' பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது'' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.

எத்தனை நடிகர்களிடம் இந்த விரிந்த மனப்பான்மை - சக நடிகர்களை தட்டிக் கொடுக்கும் தாராள மனம் இருக்கிறது?

நன்றி:ரஜினி ரசிகர்கள் தளம்

படம்:ராகங்கள் மாறுவதில்லை
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை;இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA




விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புதிவித தாகம்
பௌர்னமி பார்வை புரிகிறதே
மனந்தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்

இடையின் பாகம் நூலாகும்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தாள் மனக்கு ரகசிய சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம்
நாயகி பாதம் நாயகன் வேதம்

நீயே காதல் தேவாரம்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

Wednesday, April 28, 2010

976 ஈர நிலா விழிகளை




Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் - அரவிந்தன்
பாடியவர்கள் - ஷோபனா,பாலு
இசை - யுவன்சங்கர்ராஜா

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்

நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது
என் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு

சேரும் நதி ரெண்டுதான் பாதை இனி ஒன்று தான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே

975,மெளனமே பார்வையால்


படம் - அன்பே சிவம்
பாடியவர்கள் - சந்திராயி,பாலு
இசை - வித்யாசாகர்

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம் ம்ம்ம்ம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம் கண்ணம்மா

ம்ம்ம்..ஆ..ஆஆஅ..

ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய்
காதல் மொழியில்
மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம்
உந்தன் கருவில்
இங்கு வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும்காலங்கள்
வளம் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்

ஒரு சேதி அடி நீ என்பதன் பாதி
இனி நான் என்பதென் மீதி தேதி சொல்லம்மா

மெளனமே பார்வையாய்
மெளனமே பார்வையாய்பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம் கண்ணம்மா

இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்

ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
உடம்பினில் கறைந்ததும் கலைவரையும்
மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தால் என்ன
விழி ஜாடைகள் பேசியே நடந்தால் என்ன

இங்கு வாழ்க வாழ்க இந்த நேரங்கள்
சுகம் சேர்க சேர்க வரும்காலங்கள்
வளம் சூழ்க சூழ்க இவர் பாதைகள்
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்
ஒரு மெல்லினத்தை வல்லினமும் கை சேர
ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேச

மெளனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்
நானமே வண்ணம்மாய் பூசிக் கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம் பல வண்ணங்களை அள்ளும்
சில எண்ணங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

974,மழையே மழையே


படம் - அம்மா
பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு
இசை - சங்கர்கணேஷ்

Get Your Own Hindi Songs Player at Music Plugin
லலலா லலலா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா
லால்லாலா....
மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரில் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்
கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க
லலல்லா லலல்லா லலலா லலலா
லலலா லலலா லலலா லலலா
லால்லாலா....

விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை
விரக வேதனையில் பருவமான ஒரு தாமரை
மன்மத தேசத்து மாதுளை

நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
நாம் போகும் பாதை எங்கெங்கும்
பயிராகும் காதல் தங்கம்
உயிருக்குள் எரிகின்ற நெருப்பு
வந்து அணைப்பது இனி உந்தன் பொறுப்பு

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

கூந்தல் மலரின் தேனை கொடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

லா லல்லா லா லல்லா
லா லல்லா லா லல்லா
லாலல்லா லாலல்லா
லாலல்லா லாலல்லா
ல லா....
லாலல்லா லாலல்லா
ல லா....

நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
பப்ப்பா...ஆ..
மார்கழி மாதத்து வேதனை

நனைந்த பூவில் வண்டு
ஒதுங்கும் போது ஒரு சோதனை
பப்ப்பா...ஆ..
மார்கழி மாதத்து வேதனை

மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
மடி மீது சாயும் இந்நேரம்
மழைக் கால ஆசை தோன்றும்
இடைவெளி குறைகின்ற நெருக்கம்
இந்த இரவினில் இளமைக்கு பசிக்கும்

மழையே மழையே இளமை முழுதும்
நனையும் வரையில் வா
சாரல் விழும் நேரம் தேவ மயக்கம்

கூந்தல் மலரின் தேனை எடுக்க
காத்து கிடந்தேன் கால்கள் கடுக்க
இதயம் துடிக்க

லாலல்லா லாலல்லா
ல லா....
ஆ..ஆ...
லாலல்லா லாலல்லா
ல லா....

973, இதுதான் சந்தோஷமோ


படம் - அன்பேஅன்பே
பாடியவர்கள் - பாலு
இசை - பரத்வாஜ்

Get Your Own Hindi Songs Player at Music Plugin
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
நிதமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே
ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம்
அனைவரின் இதயம் கைகுட்டையாகும்
முன்காலம் நிகழ்காலம் எதிர்காலமும்
நம் சொந்தம் இது போலே தினம் வாழ்ந்திடும்
இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா

இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
அழகாய் ஓர் கூட்டிலே கிளிகள் குடி இருந்ததே
கல்லடி பட்டு கலைந்தே போச்சு
கண்ணடி பட்டு பிரிந்தே போச்சு
பறந்தோட புது வானம் கிடைத்தாலுமே
உறவோடு இருக்கின்ற சுகம் தோணுமா

லாலாலலா......

இதுதான் சந்தோஷமா இனிக்கும் சங்கீதமா
இதுதான் மறு ஜென்மமா
இறைவன் தரும் பாடமா
இலையுதிர் காலம் முடிந்தே போச்சோ
மரங்களின் இலைகள் பசுமை ஆச்சோ
குற்றாலம் பனிச்சாரல் நம் சொந்தமே
வற்றாத ஊற்றாகும் நம் பாசமே
இதுதான் சந்தோஷமே இனிக்கும் சங்கீதமே...

இதுதான் சந்தோஷமே இனிக்கும் சங்கீதமே

972 சீரகச் சம்பா நெல்லு குத்தி



பாடல் பதிவின் போது சில நேரங்களில் படத்தின் போஸ்டர் மற்றும் தகவல்கள் இணையத்தில் தேடித் தேடி ஓய்ந்து போய்விடுவேன் இதற்க்காகவே பல பாடல்கள் பதிவிற்க்காக காத்திருந்தன. இந்த பாடல் இன்றுதான் வரிகளை கேட்டு எழுதினேன்.படங்களும் சீக்கிரம் கிடைத்துவிட்டது. ஏற்கெனவே இதே ரேஞ்சில்கிச்சிலி சம்பா என்று ஒரு அமர்க்களமான பாடல் பதிந்திருக்கேன். அடெங்கப்பா ஒரு நடிகர் பட்டாளமே இருக்கிறதே... பாலுஜியும் ஜானகியம்மாவும் வழக்கம் போல் கலக்குறாங்கப்பா... கேட்டு மகிழுங்கள்.



படம்:கண்ணன் வருவான்
பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகியம்மா
நடிகர்கள்:கார்த்திக்,கவுண்டமணி,மந்த்ரா,திவ்யா உன்னி,ரஞ்சித், செந்தில், மனோரமா
இயக்குநர்: சுந்தர்.சி
இசை: சிற்பி

Get this widget | Track details | eSnips Social DNA


சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பலச் சாறு எடுத்து
நான் ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்

ஹேய் ஊத்து தோண்டி தண்ணிய எடுத்து
வெண்ணீர் வச்சிருக்கேன்
மாமா வெண்ணீர் வச்சிருக்கேன்
பொண்ணு வாய கொப்பளிக்க
தண்ணீர் வச்சிருக்கேன்
மாமா தண்ணீர் வச்சிருக்கேன்
மாமா சாப்பிட வாறீர்களா
இல்லை தோப்புக்கு போறீர்களா

ஹாய் சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பலச் சாறு எடுத்து
நான் ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்

ஹாய் ஆத்துக்குள்ளே சேலையிள்ளே
மீனப் புடிப்போமா ஹ அந்த
தோப்புக்குள்ளே ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா

நான் ரொம்ப நாளா சைவமடி உனக்கு தெரியுமா ம்ஹ
நீ கூப்பிட்டது ஓடிவர என்னால் முடியுமா

நான் விரிச்சு வெச்ச இலையே நீ மூடலாமா மாமா

என் ருசியை தெரிஞ்சுக்காம நீ சமைச்சு வைக்கலாமா

நான் ஆக்குனது ஆறிடலாமா ... ம்ஹஹஹஹஹ

மாமா சாப்பிட வாறீர்களா
இல்லை தோப்புக்கு போறீர்களா

சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பலச் சாறு எடுத்து
நான் ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்

உன் பத்து விரல் நகத்திலையும் விஷேசம் இருக்கா
உன் கைப்பட்டா தண்ணி இனிக்குதடி பாயாசங்கணக்கா

நீ உச்சிகுள்ளே பேசறது ??? ருசிச்சேன்
ஐயோ..
என் மனசுக்குள்ளே இப்போ வேற என்ன பன்னியிருக்க

நீ இலையை போடும் போது அதில் வளையல் விழுந்ததென்ன

அது கையை மீறும் ஆசை அது சொல்லி என்ன பன்ன

ஒரு பசி முடிஞ்சா பசி பிறக்கும் ம்ம்ம்ம்ம்ஹம்ம்ம்

சாப்பிட வரட்டமா
நடு சாமத்தில் வரட்டுமா

சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்

சிரிச்சு மயக்கும் சிவந்த உதட்டில்
தேனுக்கு காத்திருக்கேன்
மானே தேனுக்கு காத்திருக்கேன்

ஹேய் ஊத்து தோண்டி தண்ணிய எடுத்து
வெண்ணீர் வச்சிருக்கேன்
மாமா வெண்ணீர் வச்சிருக்கேன்

ஹோய் உனக்குள் குதிச்சு உடம்பு நனைக்க
உசிரு காத்திருக்கு கண்ணே உசிரு காத்திருக்கு

மாமா சாப்பிட வாறீர்களா
இல்லை தோப்புக்கு போறீர்களா

சாப்பிட வரட்டமா
நடு சாமத்தில் வரட்டுமா

Tuesday, April 27, 2010

971,நீயா அழைத்தது என்னை



படம் - அலை ஓசை
பாடியவ்ர்கள் - பாலு,எஸ்.ஜானகி
இசை - இளையராஜா

div>

Ilayaraja - TamilWire.Com - Alai Osai - Neeya Azhaithathu - TamilWire.Com .mp3
Found at bee mp3 search engine


நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

தண்ணீரில் வெந்நிலவு நீராடுமா
வெண்ணிலவு தரை வந்தால் ஆறோடுமா
பெண்மை குளித்தது தன்னை மறந்தது நீர் ஓடை

கரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை
காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
என்ன லீலை கண்ணன் வேலை
நிலைகளில் உடைகொடு இல்லை ஒரு வழிவிடு
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

தலைவனே விரைவினில் பெண் பார்க்கவா
காலங்கள் கனியட்டும் கை சேர்க்கவா
சேலை பூக்களில் தேனை தேடுது பொன்வண்டு
ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று
ஏனி ஏங்கும் கன்னி நெஞ்சம் தள்ளிக் கொள்ளுமா

கேள்வி என்ன கேலி என்ன என்னை இதில் வரைமுறை
தென்றல் தொடும் இருவரை

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெந்நீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது


970,தாமரைக் கொடி தரையில்

படம் - ஆனந்தக்கும்மி
பாடியவர் - பாலு
இசை - இளையராஜா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன்
சுப நேரில் ஓடினேன்
பலன் இல்லை என்பதா
இங்கு பாதை மாறினேன்
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

காலை வேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன்
பாட நூலில் கேள்வி துனண என்று எழுதினேன்
வீட்டு பூனையாம் வேங்கை பூனையாய் மாறினேன்
நேரம் வந்ததடி நானும் எல்லைகளை மீறினேன்
வேலை செய்வதில் நான் காதல் மன்னனே
லீலை செய்வதி நான் பாதி கண்ணனே
அல்லிராணி அல்லவா நீ அர்ஜுனன் தானே

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

மூக்கின் மீது நிறம் மாறிப்போவது கோபமோ
என்னை மீறி ஒரு தந்தி வந்துவிடக் கூடுமா
பந்தமுள்ளது சொந்தம் கொள்வது பாவமோ
ஆசை கோபமாய் வேஷம் போடுது நியாயமோ
மோகம் என்பதே பனி தூங்கும் புல்வெளி
ஆடி வந்து நீ விளையாடு பைங்கிளி
ஊடல் கொள்ள நேரமில்லை வரங்கொடு தோழி

தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன்
சுப நேரில் ஓடினேன்
பலன் இல்லை என்பதா
இங்கு பாதை மாறினேன்
தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி

969 ஒரு காதல் என்பது


படம் - சின்னதம்பி பெரியதம்பி
பாடியவர்கள் - எஸ்.ஜானகி,பாலு
இசை - இளையராஜா

Get Your Own Hindi Songs Player at Music Plugin
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ளவேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ளவேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயின்று போடாதோ

கண்ணா கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன் வேறோடு
உன் தேகம் என் மீது...

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பன்பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

968 கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி

,

//கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு.. கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் நெஞ்சு சூடாச்சு.. கும்மாளம் போடும் கண்ணில் பூத்திருந்த ஊதாப்பூ.. கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ.. வாடி.... புள்ளி மானே.. சேலை... மலர் தேனே
ஒரு தாலி கட்டி தாமரை பூவில் தேன் அள்ளுவேனே//

இதுவும் ஒரு கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:கிழக்கு வீதி
பாடியவர்க்ள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி

Get this widget | Track details | eSnips Social DNA


கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொக்கரக்கோ சேவலோட காவலைத் தேடி
அடி ஒரங்கட்டு ஓரங்கட்டு நேரத்தோட
நீ ஆசைப்பட்ட சேவலோட ஆட்டம் போட

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி

கல்யாண பூவே சும்மா காட்டாதே உன் வீராப்பு
கண்ணத்தில் கண்ணம் சேர்க்க காதல் நெஞ்சு சூடாச்சு
கும்மாளம் போடும் கண்ணில் பூத்திருந்த ஊதாப்பூ
கோபத்தில் மாறிப்போச்சு கண்ணே இந்த ரோசாப்பூ
வாடி.... புள்ளி மானே
சேலை... மலர் தேனே
ஒரு தாலி கட்டி தாமரை பூவில் தேன் அள்ளுவேனே

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி
ஏய் நீயா நானா பார்த்துக்கலாம் மேடை போடு
அட ஆம்பள நான் நேருக்கு நேரு மோதிப்பாரு
கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி

வம்புக்கு காதல் செய்து காலை மாலை ஆட்டாதே
அங்கெல்லாம் ஆண்களத்தா பெண்கள் கண்கள் பார்க்காதே
மரமண்டை மந்திரத்தில் மாங்காய் ஒன்னும் காய்க்காது
உன் போல ஆம்பிளைக்கு எந்த பொண்ணும் வாய்க்காது
போய்யா... மொட்டை மாடி
அட நீயா.. எந்தன் ஜோடி

நீ காதல் விட்டு தாவிய கட்டு வாங்கித்தாரேன் வா

கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொக்கரக்கோ சேவலை காவலைத் தேடி
அடி ஒரங்கட்டு ஓரங்கட்டு நேரத்தோட
நீ ஆசைப்பட்ட சேவலோட ஆட்டம் போட

ஏய் கூடாரம் உள்ளாரத்தான் கூவுது கோழி
கொத்திப்பார்க்க சுத்தும் இந்த சேவலை தேடி

Monday, April 26, 2010

967 ஓரோன் ஒண்ணு ஒண்டியாக



படம்:நிலவு சுடுவதில்லை
நடிகர்கள்:சிவக்குமார், ராதிகா
இசை: இளையராஜா
வருடம்:1984
இயக்குநர்: கே.ரங்கராஜ்

கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


ஓரோன் ஒண்ணு ஒண்டியாக நின்னாலே
ரெண்டோன் ரெண்டு ரெண்டு பேரும் சேர்ந்தாலே
ஒண்ணுக்கு மேலே ரெண்டு இருக்கு
ரெண்டுக்கு மேலே வேணவே வேனாம்

ஓரோன் ஒண்ணு ஒண்டியாக நின்னாலே
ரெண்டோன் ரெண்டு ரெண்டு பேரும் சேர்ந்தாலே
குக்கூக்ருக்குகூஊஊஊ

என் மாமன் பொண்ணு மஞ்சக் குளிச்சா
அஞ்சாம் மாசம் கொஞ்சி முடிச்சா
வீட்டுக் குள்ளே லூட்டி அடிச்சா
நாத்தனாரும் மாட்டி முளிச்சா
ஆனாரூனா கட்டிக்கோட கோனாரு
மூனாம் நாளே கட்டிக்கிட்டு போனாரு
அட ஆனாரூனா கட்டிக்கோட கோனாரு
மூனாம் நாளே கட்டிக்கிட்டு போனாரு

ஒரு கானா காரேன் டூட்டி மேலே போனா
மாட்டிகிட்டாளோ

ஓரோன் ஒண்ணு ஒண்டியாக நின்னாலே
ரெண்டோன் ரெண்டு ரெண்டு பேரும் சேர்ந்தாலே
ஒண்ணுக்கு மேலே ரெண்டு இருக்கு
ரெண்டுக்கு மேலே வேணவே வேனாம்

ஓரோன் ஒண்ணு ஒண்டியாக நின்னாலே
ரெண்டோன் ரெண்டு ரெண்டு பேரும் சேர்ந்தாலே

ஒரு பொட்டப்புள்ளே பார்த்து சிரிச்சா
பக்கம் பார்த்து கட்டிப்புடிச்சா
குந்தச் சொல்லி முந்தி விரிச்சா
ஏழாம் மாசம் பெத்து தொலைச்சா
ஏடா மூடா புத்திகெட்டு போகாதே
ஏடா போடா தள்ளி கிட்டு நிக்காதே
அட ஏடா மூடா புத்திகெட்டு போகாதே
ஏடா போடா தள்ளி கிட்டு நிக்காதே

அட போறும் போறும் பெத்ததெல்லாம் போறும்
கிட்ட கிட்ட வாராதே

ஓரோன் ஒண்ணு ஒண்டியாக நின்னாலே
ரெண்டோன் ரெண்டு ரெண்டு பேரும் சேர்ந்தாலே
ஒண்ணுக்கு மேல் ஒண்ணுக்கு மேல் ரெண்டு இருக்கு
ரெண்டுக்கு மேல் ரெண்டுக்கு மேல் வேணவே வேனாம்

ஓரோன் ஒண்ணு ஒண்டியாக நின்னாலே
ரெண்டோன் ரெண்டு ரெண்டு பேரும் சேர்ந்தாலே

Saturday, April 24, 2010

966 கோழி கூவும் நேரத்திலே



பாடல்: கோழி கூவும் நேரத்துல
திரைப்படம்: வண்ண வண்ண பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இயக்குனர்: பாலு மகேந்திரா
நடிப்பு: பிரசாந்த், மௌனிகா, வினோதினி
இசையமைப்பு: இளையராஜா


GetYour Own Hindi Songs Player at Music Plugin

கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா
கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா

மெத்த ஒண்ணும் தேவையில்ல கத்துக்கொள்ளும் பாடமில்ல
மொத்தமா பூத்த முல்ல வித்தையுள்ள வெடலப்புள்ள
படிச்சா வருமா புடிச்சா விடுமா
நெனைச்சா தகுமா இதமா கொடுமா
எட்டாத கனியுமில்ல எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையில காவலுமில்ல
ஏறாத மலையினிலே ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல
வருவேன் தனியே புது மாங்கனியே

கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு ஆஹஹா ஹா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி ஆஹஹா ஹா
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா
கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா

முத்தத்துல மால கட்டு வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு
நெனைச்சா சொகமா நெதமும் இதமா
தனியா வரவா தரவா பதமா
கட்டான சரிகப்பட்டு கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு எழுதுங்க பாட்டு
பொன்னான உடலிருக்கு உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு காட்டணும் கணக்கு
மெதுவா மெதுவா தொடணும் பொதுவா

கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு மேளம் தட்டி கேட்கலாமா
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா

Friday, April 23, 2010

965 பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே



//கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ... எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ
தேகம் வந்து மோகம் வந்து சூடு பறக்கும்.. தேன் குடிக்க எப்ப இந்த கூடு பிறக்கும்
தட்ட தட்ட திறந்திடும் நான்//

அமர்க்களமான பாடல் பாலுஜி பட்டைய கிளப்பியுள்ளார்...

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: உள்ளம் உருகுதே
பாடிய்வர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை:இளையராஜா
வருடம்: 1986

பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம்
நல்ல நேரம்.... துகுத்துத்து...துத்து

பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

ஹா நேத்து நீ பார்த்த போது ராத்திரி தூக்கம் ஏது
நேத்து நீ பார்த்த போது ஹ ராத்திரி தூக்கம் ஏது

கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ

கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ

தேகம் வந்து மோகம் வந்து சூடு பறக்கும்
தேன் குடிக்க எப்ப இந்த கூடு பிறக்கும்
தட்ட தட்ட திறந்திடும் நான்

பல்லவியே ஹெ..ஹெ..நீயும் கொஞம் ஹ ஹ பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம்
நல்ல நேரம்.... துகுத்துத்து...துத்து

பூவு தான் காத்துவாங்க ஹ வண்டு தான் பார்த்து ஏங்க
பூவு தான் காத்துவாங்க ஹ வண்டு தான் பார்த்து ஏங்க

உள்ளிருக்கும் கள்ளு எடுக்கும் நேரம் எப்போ
ஒட்டிக்கொள்ள கட்டிக்கொள்ள வேளை எப்போ
உள்ளிருக்கும் கள்ளு எடுக்கும் நேரம் எப்போ
ஒட்டிக்கொள்ள கட்டிக்கொள்ள வேளை எப்போ

முன்னம் என்னும் சத்தம் கொண்டு?? விட்டுப்போகுமா
இன்னும் கொஞ்சம் தொட்டால் என்ன கெட்டு போகுமா
பட்டனத்து வட்ட நிலவே ஹா

ஹ பல்லவியே ஹெ..ஹெ..நீயும் கொஞம் ஹ ஹ பக்கத்திலே வா.. வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம்
நல்ல நேரம்.... துறுத்துத்துறு...

ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா
ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா
ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா
ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா

964 நேத்து உன்னைப் பார்த்து



//அட்டைப் போல் ஒட்டிக்கடி கண்ணே.. அங்கங்கே குளிரடங்கும்.. அச்சாரம் வாங்கிக்கடி நாளை.. மச்சானின் நெனப்பு இருக்கும்//

படம்:ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகியம்மா
இசை:வி.எஸ்.நரசிம்மன்

Get this widget | Track details | eSnips Social DNA


நேத்து உன்னைப் பார்த்து
நேத்து உன்னைப் பார்த்து
நெஞ்சுல உள்ளத கண்ணுல சொன்னேனே
நீ எப்பவும் கொஞ்சிட சொப்பனம் கண்டேனே
ஆசை தீரதான் சரி சோடி சேரத்தான்
வந்தா சந்தோசம் சின்னப் பொன்னு

நேத்து உன்னைப் பார்த்து
நேத்து உன்னைப் பார்த்து
உன் நெத்தியில குங்கும பொட்டாடம்
தலை மத்தியில் வைக்கிற மல்லிகை பூவாட்டம்
ஆசை தீரத்தான் உன்னை நானும் சேரத்தான்
வந்தா சந்தோசம் சின்னப் பொன்னு

நேத்து உன்னைப் பார்த்து

நேத்து உன்னைப் பார்த்து

தென்காசி குத்தாலம்
தென்காசி குத்தாலம் அருகிருக்க
தூறல் சாறல் தான் தெளிச்சிருக்க
சில்லுன்னு பூங்காத்து அடிச்சிருக்க
தாளாம என் தேகம் துடிச்சிருக்க

அட்டைப் போல் ஒட்டிக்கடி கண்ணே
அங்கங்கே குளிரடங்கும்
அச்சாரம் வாங்கிக்கடி நாளை
மச்சானின் நெனப்பு இருக்கும்

மெல்ல மெல்ல தூண்டிப் போடுறே
என் மாமா எல்லைக் கோட்டை தாண்டி பாடுற
வா னைத்தொடு

நேத்து உன்னைப் பார்த்து
நேத்து உன்னைப் பார்த்து
உன் நெத்தியில் வைக்கிற குங்குமப் பொட்டாட்டம்
தலை மத்தியில் வைக்கிற மல்லிகை பூவாட்டம்

ஆசை தீரத்தான் அட சோடி சேரத்தான்
வந்தா சந்தோசம் சின்னப் பொன்னு

நேத்து உன்னைப் பார்த்து
நேத்து உன்னைப் பார்த்து

ராவானா தீய்யாட்டம்
ராவானா தீய்யாட்டம் நிலவிருக்க
அம்மாடி அங்கங்கே அனலடிக்க
நெய்யாட்டம் மேனி உருகுதய்யா
நிக்காம சித்தாடை நலுவுதய்யா

பாடு உன்னாட்டம் தான் மானே
என் நெஞ்சும் தவிக்குதடி
உன்னாம தூங்காம தான் நாளும்
உள்ளாற கொதிக்க்க்குதடி

பேசிப் பேசி காக்கவைக்கிற என் மாமா
கெஞ்சி கெஞ்சி கேட்க வைக்கிற

வா னைத் தொடு
நேத்து உன்னைப் பார்த்து
நேத்து உன்னைப் பார்த்து
என் நெஞ்சுல உள்ளத கண்ணுல சொன்னேனே
நீ எப்பவும் கொஞ்சிட சொப்பனம் கண்டேனே

ஆசை தீரத்தான் உன்னை நானும் சேரத்தான்
வந்தா சந்தோசம் சின்னப் பொன்னு

நேத்து உன்னைப் பார்த்து
நேத்து உன்னைப் பார்த்து

Tuesday, April 20, 2010

963 மனதிலே ஒரு பாட்டு




பாடல்:மனதிலே ஒரு பாட்டு
படம்:தாயம் ஒண்ணு
பாடகர்கள்:டாக்டர் எஸ்.பி.பி பத்மபூஷன் பி.சுசீலாம்மா
இசை:இளையராஜா
நடிகரகள்:அர்ஜுன், சீதா

Get this widget | Track details | eSnips Social DNA


மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்

காற்று பூவோடு கூடும்
காதல் சங்கீதம் பாடும்
பார்த்து என்னுள்ளம் தேடும்
பாசம் அன்போடு மூடும்
இதயம் போதாத கவிதைப் பாட்டு
இமைகளில் பல தாளம்
இசைகளில் அது கூறும்
இரவிலும் பகலிலும் - உன்னைப்
பார்த்துப் பார்த்து பார்வை வாடும்

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்

நீயும் இருந்து வாழ
நேரம் பொன்னாக மாற
நானும் பாமலை பாட
தோளில் நீ வந்து சூட
எனது ராகங்கள் எழுதும் வேதம்
புதிய தாகங்கள் விழியில் ஊறும்
எழுந்து வா இளம் பூவே
இசையிலே அழைத்தானே
இமைகளில் தொடர்கதை
இனி சோகம் ஏது.. தீரும் போது

மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழி பூவும் மலரும் காலை நேரம்

962 பாம்பே டையிங் சூட்டில பார்த்தா



எப்பவோ கேட்ட பாடல் இதுங்க பாடலில் வரும் ரிதம்ஸ் சூப்பர்ப் நம்மையறியாமல் தாளம் போட வைக்கும். பாடியது யாரு சூப்பர் ஜோடி பாலுஜியும் ஜானகியம்மாவும் சொல்லவும் வேண்டுமா?...? அமர்க்களம்.

படம்:சிஷ்யா
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி டாக்டர் எஸ்.ஜானகியம்மா


Get this widget | Track details | eSnips Social DNA


பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்

பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்

ஓலைலா ஓ மை லைலா
வாநிலா காதல் நிலா
உன்னை பார்த்தது மனசு
தந்தியடிக்குது டடாக் டடாக் டா

பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்

நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்

ஓஜானா ஒஜானா ஓடுவதே சீனா

நெஞ்சோடு நீதானா பாடியது தில்லானா

ஓஜானா ஒஜானா ஓடுவதே சீனா

நெஞ்சோடு நீதானா பாடியது தில்லானா

புள்ளி வட்டம் ஏங்குது பூவை தீண்டு

கண்ணை மூடு வேளையில் கனவில் தோன்று

வந்து விட்டேன் கண்ணுக்குள்
தந்து விட்டேன் அள்ளிக்கொள்

நானும் இப்போ மாறிப்போனேன்
உன்னால உன்னாலதான்

ஹெ

பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்

நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்

சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ்லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி

சிங்காரி சிங்காரி பாடுகிறாள் லவ்லாலி
உன் கைகள் என் மார்பில் போடுதடி ரங்கோலி

உன் இதழில் எத்தனை தீண்டல் சொல்லு

உன் இதழில் எத்தனை முத்தம் சொல்லு

எண்ணிச்சொல்லு ஒவ்வொன்னா
பின்னிக்கொள்ளு என் மன்னா

பூலோகமே மாறிப்போச்சு உன்னால உன்னாலதான்

ஆஹே ஹெய் ஹெய் ஹெய் ஹெய்ய்

பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் கிஸ்ஸு ப்ளையிங்

ஓலைலா ஓ மை லைலா
வான்நிலா காதல் நிலா
உன்னை பார்த்தது மனசு
தந்தியடிக்குது டடாக் டடாக் டா

பாம்பே டையிங் சூட்டில பார்த்தா
டைவிங் மனசு டைவிங்
நீ பாஸ்போர்ட் சைசு போட்டோ தந்தா
ப்ளையிங் ம்ம்மா.. ம்மாமா..ம்மாஆ

Monday, April 19, 2010

961 யார் தூரிகை தந்த ஓவியம்



இந்த அழகான இனிமையான பாடலை வேண்டி வேண்டி விரும்பி கேட்ட நேயர்கள் கோவை கோபால கிருஷ்னன், பெங்களூரு சுப்ரமணியம், சென்னை லக்‌ஷ்மி வரதராசாரி மற்றும் எப்பவோ இந்த தளத்தில் கேட்ட நேயர் ஷபி ஆகியோருக்கு சமர்ப்பணம். இவர்களூடன் நானும் அந்த ஷிக்கு ஷிக்கு டைமிங்க்ஸ் இசையில் மனதையே அற்பனித்தவன். நீங்களூம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. போனஸ் பாடலாக இதே பாலுஜியுடன் இணைந்து உமா ரமணின் குரலையும் கேட்டு மகிழுங்கள்.

பாடல்:யார் தூரிகை தந்த ஓவியம்
படம்:பாரு பாரு பட்டனம் பாரு
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்:மைக் மோகன்,
இசை: இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


படம்: பாரு பாரு பட்டணம் பாரு

யாரு தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புதுமாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஹ ஹ

யாரு தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புதுமாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே

கடலலைகளீன் தாளம்
பல நதிகளீல் தோன்றும்
நினைவினில் ஒரு ராகம்
நிதம் பல வித பாவம்
அடும் கடல் காற்று
அந்தி வரும் காற்றும்
ஓராயிரம் பாவம் ஏன்
நிதமும் தேடுதே ராகம் பாடுதே
மனதினிலே கனவுகளே
வருகிறதே தினம் தினம்

யாரு தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்

சிறு மலர்களின் வாசம்
பல கவிதைகள் பேசும்
சில மனங்களீன் பாவம்
கலை நிலவினில் வாழும் ?

அலையென ஓடும்
ஆசை அந்து கூடும்
பொன் வானமோ பூவைச்சூடுதே
பலவேறு ஆசைகள் உள்ளூற ஊறுதே
இளமனதில் புது உறவு
தெரிகிறதே தினம் தினம்

யாரு தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை செய்த காவியம்
புதுமாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே

spb -vj uma ramanan

Get this widget | Track details | eSnips Social DNA


படம்:உதவி நன்றி தொடர்புகள்.ப்ளாக்ஸ்பாட்.சொம்

960 தேன் கூட்டு பக்கத்தில்



படம் மங்கள வாத்தியம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, வாணிஜெயராம்
நடிகர்கள்:கமல்ஹாசன்,ஸ்ரீப்ரியா
இசை:மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி


Get this widget | Track details | eSnips Social DNA


தேன் கூட்டு பக்கத்தில் வாழைக்கன்னு
செவ்வந்தி பூப்போல சின்னப்பொண்ணு
மானுக்கு வாய்ச்சது ரெண்டு கண்ணு
மனசிலே ரெண்டில்லே நானும் ஒன்னு

பூவாளி போடட்டா பன்னீர் ஒன்னு
பூஜைகள் பன்னட்டா பக்கம் நின்னு
ஆவாரம் காட்டுக்குள் காதல் பன்னு
அடிவாரம் தேடுது அருவி ஒன்னு
ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா
ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா

மழையில் பலாப்பழம் காத்திருக்க
மாம்பழ கத்தியும் சுவைச்சிருக்க

அலையிலே என் சாரல் கேட்டிருக்க
அதுக்குள்ள என்ன நான் போத்திருக்க
ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாகசுன்னா ஜாலிங்கடா
ஜூலா ஜூலா ஹேலா ஜூலிங்கடா
ஜோகே பாச்சுன்னா ஜாலிங்கடா

ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம்
மங்கள வாத்தியம் மங்கள வாத்தியம்

மோஹினி வா ராகினி வா
தேவதை உலகின் ஸ்ரீமஞ்சனம்
தெய்வம் சொர்க்கம் பிரம்மோர்ச்சவம்

ஆகாயகங்கை தீர்த்தாடனம்
அனங்கனும் ரதியும் புது நர்த்தனம்

இது யுகமோஹனம்
நீ மனமோஹனம்
நானே ஒரு சீதனம்
நானே உனக்கே தனம்

ராஜாத்தி குங்குமம் சிருங்காரம்
ராஜாவின் பக்கத்தில் சிங்காரம்

ஆரம்ப ராகம் அதிசய மேளம்
ஆனந்தம் பாடும் மங்கள வாத்தியம்
மங்கள வாத்தியம்
மங்கள வாத்தியம்

Saturday, April 17, 2010

959 கண்ணே உலகமே பள்ளிக்கூடம்



//வஞ்சம் சூது பொய்யை கண்டால் சண்டை செய்யுங்கள்.. உண்மை நண்மை நேர்மை கண்டால் நெஞ்சில் வையுங்கள்.. உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்.. உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்.. உன்னை வெல்ல ஒருவரும் இல்லை தலைவன் நீயடா..//

இதுபோன்ற அழகான வரிகள் உள்ள அருமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்: கண்ணாமூச்சி
இயக்குனர்: ஆர். பட்டாபிராமன்
தயாரிப்பாளர்: சாந்தி நாராயணசாமி
ஸ்ரீ பாலாம்பிகா புரொடக்ஷன்ஸ்
நடிப்பு: சிவகுமார், லதா
இசையமைப்பு: வி. குமார்
வெளியீடு நாட்கள்: அக்டோபர் 30, 1978

Get this widget | Track details | eSnips Social DNA


கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்
கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்
தேடிடவேண்டும் உன் உள்ளம் உன்விழி
மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு
ஐந்தில் வளையட்டுமே

கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

விதையோ சிறிது மரத்தை பாரு வானை மூடுதே
விளையும் போதே நன்றாய் விளைந்தால் ஞானம் கூடுது
தங்கம் இருந்தங்கே சங்கிலி ஆனதங்கே
தங்கம் இருந்தங்கே சங்கிலி ஆனதங்கே
தட்டும் போது சரியாய் தட்டு நீயும் ஆகலாம்

கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

வஞ்சம் சூது பொய்யை கண்டால் சண்டை செய்யுங்கள்
உண்மை நண்மை நேர்மை கண்டால் நெஞ்சில் வையுங்கள்
உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்
உயர்ந்து வந்தாலே உலகம் உன் கையில்
உன்னை வெல்ல ஒருவரும் இல்லை தலைவன் நீயடா

கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

தேடிடவேண்டும் உன் உள்ளம் உன்விழி
மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு
ஐந்தில் வளையட்டுமே

கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்

958 குலாபி குலாபி குலாபி



இந்த தளத்தின் உரிமையாளர் வற்றாயிருப்பு சுந்தர் ஒரு வாரமாக பாலுஜியுடன் சேர்ந்து பாடிய பெண் பாடகிகளின் பெயர்களூடன் பட்டியல் வெளியிட்டுள்ளார் தற்போது நிலவரப்படி பாலுஜி ஜானகியம்மா ஜோடி முன்னணியில் உள்ளது கொஞ்சம் பேர் தான் தங்களின் வாக்குகளை பதிந்துள்ளார்கள் இதுவரையும் இனிமேலும் பாலுஜி ஜானகியம்மா ஜோடிக்கு வாக்களித்தவர்களூக்கும், வாக்கு அளிப்பார்களூக்கும் சேர்த்து இந்த பாடல் சமர்ப்பணம். மேலே உள்ள படத்துகும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று மட்டும் கேட்காதீர்கள். பாலுஜியின் பிரியமான ரசிக ரசிகைகளே சின்ன வேண்டுகோள் பாலுஜியும் ஜானகியம்மாவும் இந்த எப்படி ஸ்டைலாக பாடியுள்ளார்கள் என்று மட்டும் ரசியுங்கள் வரிகளில் அர்த்ததை தேடாதீர்கள். இது போன்ற பாடல்கள் தான், இருவரின் அன்யோனமான பீலிங்கில் பாடும் பாடல்கள் தான் ரசிகர்களை அவர்களை முதலில் கொண்டுவந்திருக்கிறது என்று தோன்றுகிறது. கேட்டு ஜமாய்ங்கள் அன்பர்களே.

படம்:மறவன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி,டாக்டர்.எஸ்.ஜானகியம்மா

Get this widget | Track details | eSnips Social DNA


காலுக்கு மேலே கொலுசு
கொலுசுக்கு மேலே இளசு
இடுப்புக்கு மேலே சொகுசு
ஐயோ கலுத்துக்கு மேலே..

குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி

ஹ ஹ ஹ ஹ
குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி

தித்திக்குது தொட்ட இடம்
என்னோட ஒட்டிக்கொள்ள வா
திண்டாடுது மத்த இடம்
உன் கை கட்டிக்கொள்ள வா வா வா

குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி

சைட்டு அடிக்கற நைசா புடிக்கற
நான் தான் உங்க சிங்காரியா
சிம்மக்குரலிலே சிந்து படிக்கிற
நீ தான் அந்த சிவாஜியா

ஜோரா இருக்கிற சுண்டி இலுக்கிற
ஜல்சா பண்ணி ஜமாய்க்கிற

மூடிமறைக்கிற மூட குறைக்கிற
ஏம்மா இன்னும் டபாய்க்கிற
மே மாசம்..வேகுதடா
மாம்பூவே மெல்ல தொடு
பூவாசம் தூக்குதடி
பூந்தேனே அள்ளிக்கொடு

நைசா டேரா போட நினைக்கிற
ஐயோ
லேசாக அங்க இங்க அணைக்கிற அணைக்கிற

குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி

கூவிடிச்சாம் கூவிடிச்சாம் கிழக்கே போற ரயிலு
குந்தி கிட்டான் குந்தி கிட்டான் மதுர போற மயிலு
கண்டுகிட்டான் கண்டுகிட்டான் குஷ்பு போல உடலு
காட்டிபுட்டான் காட்டிபுட்டான் பிரபு போல ஸ்டைலு
உன்னை தவிர நான் என்னை வளைச்சவன்
யாரு இந்த ஜில்லாவுலே
என்னை மடக்கினான் உன்னை புடிச்சி நான்
வெச்சேன் இந்த குல்லாவுல

கொஞ்சும் குரலிலே கூவி அழைக்கிற
நீ தான் லதா மங்கேஷ்கரு
வண்ண குருவியே உன்னை வழக்குற
மைனா எந்த மாமானாரு
நீ வந்தா நல்லா இருக்கு
இல்லாடி டல்லா இருக்கு

முத்தேளே?? நான் தூங்கினா
மெத்தேதான் முள்ளா இருக்கு

உன்னால முத்து ரதம் குலுங்குது
ஹை உன்னோட ஊர சுத்த சினுங்குது சினுங்குது

குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி

தித்திக்குது தொட்ட இடம்
என்னோட ஒட்டிக்கொள்ள வா
திண்டாடுது மத்த இடம்
உன் கை கட்டிக்கொள்ள வா வா வா

குலாபி குலாபி குலாபி
நான் குல்லா போட்டு ஆடவந்த பேபி
பார்த்தேனே ஹிந்தி படம் பாபி
அத பார்த்துபுட்டு இங்கே வந்து பாடி

Friday, April 16, 2010

957 ஓஹோ லேடி ஓல்டு பாடி



ஆஹா ஆஹா கலக்கல் பாட்டாய்யா கேட்டு மகிழுங்கள்.

படம்:பனிமலர்
பாடியவர்::டாக்டர் எஸ்.பி.பி
இயக்குனர்: ஹேமாச்சந்திரன்
தயாரிப்பாளர்: ஜேப்பியார்
ஜேப்பியார் பிக்சர்ஸ்
நடிப்பு: ரவீந்தர், மாதவி
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
வெளியீடு நாட்கள் ஆகஸ்ட் 15, 1981

Get this widget | Track details | eSnips Social DNA


ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தாள
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான் தான் என்றாள்

ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா சபைக்கு வந்தாடி
ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா சபைக்கு வந்தாடி
ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துபுட்டு மயங்கி நின்னாண்டி

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா..வந்தா..வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான் தான் என்றா

ஆளில்லா தோட்டத்திலே ஆப்பிள் பழம் இருக்குது
அடிச்சு புடிச்சு கடிச்சு பார்க்க அய்யா கண்ணு துடிக்குது
ஆளில்லா தோட்டத்திலே ஆப்பிள் பழம் இருக்குது
அடிச்சு புடிச்சு கடிச்சு பார்க்க அய்யா கண்ணு துடிக்குது
வயசுபுள்ள மனசுகுள்ள காதலிச்சான்
இளசு பொண்ண நைசு பன்ன கண்ணடிச்சான்
வயசுபுள்ள மனசுகுள்ள காதலிச்சான்
இளசு பொண்ண நைசு பன்ன கண்ணடிச்சான்

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான் தான் என்றா

பூவாட்டமா நகை தேரோட்டமா
மகாவரம் பாலட்டாமா
பண்பாட்டமா இங்கே வந்தாடம்மா
பல்லாவரம் பக்கம் வாம்மா

பூவாட்டமா நகை தேரோட்டமா
மகாவரம் பாலட்டாமா
பண்பாட்டமா இங்கே வந்தாடம்மா
பல்லாவரம் பக்கம் வாம்மா
மானிருக்கும் மீனிருக்கு மைவிழிக்குள்ளே
தேனிருக்கு காட்டுக்குள்ளே வாடி புள்ளே
மானிருக்கும் மீனிருக்கு மைவிழிக்குள்ளே
தேனிருக்கு காட்டுக்குள்ளே வாடி புள்ளே

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான் தான் என்றா

தந்தனத்தோம் தடிகனத்தோம் தாளம் போடச்சொல்லுது
தளூக்கி குலுக்கி மினிக்கி வந்தா வீரம் எல்லாம் போகுது
தந்தனத்தோம் தடிகனத்தோம் தாளம் போடச்சொல்லுது
தளூக்கி குலுக்கி மினிக்கி வந்தா வீரம் எல்லாம் போகுது

கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடும்மா
பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா அம்மா
கூட்டுக்குள்ளே குயிலிருந்தா பாடிடும்மா
பாட்டுக்குள்ளே பொருளிருக்கு பார்த்துக்கம்மா

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான் தான் என்றா

ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா சபைக்கு வந்தாடி
ஓய் டிக்கிரி டிக்கா டிக்கிரி டிக்கா சபைக்கு வந்தாடி
ஹாய் பக்கிரி மச்சான் பார்த்துபுட்டு மயங்கி நின்னாண்டி

ஓஹோ லேடி ஓல்டு பாடி
ஒய்யாரம்மா நடந்து வந்தா வந்தா
ரோல்டு கோல்டு நகையை போட்டு
குமரிப்பொண்ணு நான் தான் என்றா

Thursday, April 15, 2010

956 தென்றல் வரும் என்னை அழைக்கும்



இந்த சித்திரை மாத சிந்தையை கலங்கடிக்கும் வெயிலில் தென்பொதிகை மலையிலிருந்து புறப்பட்ட தென்றலாக நம் மனதை வருடிச்செல்லும் பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சாருக்கும் பெங்களூர் சுப்ரமணியம் சாரின் ஆகியோரின் விருப்பபாடல் இது. புதுவசந்தம் வீசும் தென்றலை அனுபவிக்க வாருங்கள் அன்பு தோழர்களே...

பாடல்: தென்றல் வரும்
திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

லால லலா ல..லா..லலலா
தென்றல் வரும்...ம்ம் ம்ம்ம் ம்ம்
என்னை அணைக்கும்...ஆஆ ஹஹா ஹா
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும்...ம்ம் ம்ம்ம் ம்ம்

நேற்று நான் உனை நினைத்தேன்
நினைத்தே இடை நான் இளைத்தேன்
கோதை ஞாபகம் எனக்கும்
தினமும் இரவில் பிறக்கும்
ஆடை சுமந்து அழகு நடக்கும்
ஆசை பிறந்து அருகில் அழைக்கும்
நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்

தென்றல் வரும்...ம்ம் ம்ம்ம் ம்ம்
என்னை அணைக்கும்...ம்ம் ம்ம்ம் ம்ம்
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும்...ம்ம் ம்ம்ம் ம்ம்

மாட மாளிகை அமைப்பேன்
மலரால் படுக்கை விரிப்பேன்
கூட நான் வர துடிப்பேன்
கதவை மெதுவாய் திறப்பேன்
காலம் கனிந்தால் கனவு பலிக்கும்
காவல் கடந்தால் நாணம் தடுக்கும்
பக்கம் இழுக்கும் வாலிப வேகம்

தென்றல் வரும்...ம்ம் ம்ம்ம் ம்ம்
என்னை அணைக்கும்...ஆஆ ஹஹா ஹா
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும்...ம்ம் ம்ம்ம் ம்ம்

பாடல் வரிகள்:நன்றி தூள்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA

955 நீரு வத்திப்போச்சு இங்கே நேத்தோடு



இந்த அழகான வரிகளூம் இனிமையான சோகப்பாடலை கொண்ட படத்தின் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன.

படம்:வரையாத ஓவியம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

Get this widget | Track details | eSnips Social DNA


நீரு வத்திப்போச்சு இங்கே நேத்தோடு
மீனுக்கென்ன வேலை இந்த ஆத்தோடு
வாழ்க்கையோ மண்ணாச்சு
சொல்லித்தான் என்னாச்சு
நூலறந்த பட்டம் ஒன்னு காத்தோடு

நீரு வத்திப்போச்சு இங்கே நேத்தோடு
மீனுக்கென்ன வேலை இந்த ஆத்தோடு
வாழ்க்கையோ மண்ணாச்சு
சொல்லித்தான் என்னாச்சு
நூலறந்த பட்டம் ஒன்னு காத்தோடு

பாத்திக்கட்டி விதை போட்டேன் என்னாச்சு
பாவம் அதை கறையானும் தின்னாச்சு
நாளையது மரமாகுமாஆஆஆஆ...
நாளையது மரமாகுமா...ஹோய்
பூவுமில்ல பிஞ்சுமில்ல காயுமில்ல
போட்டு வெச்ச வேலிக்கொரு அர்த்தம் உண்டாடி

வெயிலில் இளைப்பாற போனேண்டி
வேதனைக்கு வழிதேடி வந்தேண்டி
காவலுக்கு கரை ஏதடி ஆஆஆஆ..
கானலுக்கு கரை ஏதடி...ஹோய்
ஊரும் இல்ல சொந்தமெனும் யாரும் இல்ல
ஊமைக்கென்ன மேடையிலே பாட்டுக்கச்சேரி

நீரு வத்திப்போச்சு இங்கே நேத்தோடு
மீனுக்கென்ன வேலை இந்த ஆத்தோடு
வாழ்க்கையோ மண்ணாச்சு
சொல்லித்தான் என்னாச்சு
நூலறந்த பட்டம் ஒன்னு காத்தோடு

Tuesday, April 13, 2010

954 காதோடு பூ உரச




இந்த பாடல் மூச்சூடும் ரிதமிக் மனசை கொள்ளை கொண்டு போகுமய்யா... தன்னை மறந்து தலையை ஆட்டாதவரும் உண்டோ?...இப்போதைக்கு ஒளிக்காட்சி பார்த்து மகிழுங்கள்.




பாடல்: காதோடு பூ உரச
படம்:அன்புக்கு நான் அடிமை
பாடியவர்கள்:டாக்டர்:எஸ்.பி.பி, பத்மபூஷன் பி.சுசீலாம்மா
இசை;இளையராஜா
வரிகள்;வாலி
நடிப்பு:ரஜினிகாந்த், ரதி

காதோடு பூ ரச பூவோடு நான் உரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவக் காத்த உரச

காதோடு பூ ரச பூவோடு நான் உரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவக் காத்த உரச

ஏத்தம் போட்டு இறைச்சா தண்ணீ ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்சா தண்ணீ ஓடும்
ஏன் அது ஏன்
அதை தேடும் வயலும் வாடும்

ஆராதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ

காதோடு பூ ரச பூவோடு நான் உரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவக் காத்த உரச

கொடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கொடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார் அது யார்
அதை கேட்டா தெரியும் சேதி
நான் தானே சின்னப்பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு நீராட வா

காதோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்..
ஆஆஆஆ
என்னோடு நீ.. பூவக் காத்த உரச

ஓலிக்கோப்பு இங்கே

Friday, April 09, 2010

953 சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி




படம்: யாருக்கு யார் காவல்
பாடியவரக்ள்: எஸ்.பி.பி, பி.சுசீலாம்மா
இசை: கே.ஜே. ஜாய்

Get this widget | Track details | eSnips Social DNA


சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி
மடியல்லவோ பூஞ்சோலை
உன் மகனாய் நான் வரவோ
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி

உன்னோடு தான் நான் சொல்ல
நாணம் பிறந்ததய்யா
சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி

மன்மதன் கதை எழுத
மடல் என நானிருக்கேன்
உண்டாகும் காவியங்கள் ஹா ஒன்றல்ல ஆயிரங்கள்

ரகசிய நாடகத்தில் ரதி மதன் நடிக்கையிலே
திரை விழ நேரமில்லை ஹா தொடர்ந்து காதற் கலை

அம்மடி நீ அணைக்கையிலே உன் கைகளிலிலே

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி

சுகங்களின் ஸ்வரங்களிலே சுருதி லயம் சேர்ந்திருக்க
சங்கம தாகங்களோ ஹா சந்த்தித்த மோகங்களோ

சங்கீதமே விளங்காதம்மா உன் வடிவினிளே

சிப்பியின் உள்ளே முத்தாடும் சேதி
சொல்லாமல் என்னிடம் மறைத்தாளே தேவி
மடியல்லவோ பூஞ்சோலை
உன் மகனாய் நான் வரவோ

Thursday, April 08, 2010

952 எங்கேயோ ஏதோ பாட்டொன்று



பாடல்: எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
படம்: நதியை தேடிவந்த கடல்
பாடியவர்கள்:எஸ்.பி.பி, பி.சுசிலா
இசை:இளையராஜா

Get this widget | Track details | eSnips Social DNA


எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்த கான்போம்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பூஞ்சோலை பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது

நாளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான காதல் சொல்லவா

பொன் மாலை நேரம் தேனாடுது

பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது சொர்க்கத்தைக் கண்டேனம்மா

எங்கேயோ ஏதொ பாட்டொன்று கேட்டேன்

தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீ தான் என் ஆதராமே
மணிப் பில்லைகள் மான் குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே

வாடாதா முல்லைப் பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடு தான்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கேயே வா நீயும்

குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

951 போதை ஏற்றும் நேரம்



//அடி ஆத்தா... ஹ... உன்னை பார்த்தா.. ஹ.. அடி ஆத்தா உன்னை பார்த்தா.. இந்த மாமன் வயசு தான் காஞ்சு போச்சுதடி மானே... இந்த பாளூம் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே.//

இது போன்ற பாடல்கள் கேட்டு எவ்வளவு நாளாச்சு. பாலுஜி, ஜானகியம்மா டி.ஆரின் இசையமைப்பில் அமர்க்களம் அசத்தல் டி.ஆரின் பலபாடல்களில் ஒரே மாதிரியான இசையமைப்பு நம் மனதை கவ்விக்கொண்டாலும் பாலுஜியும், ஜானகியம்மாவும் தங்களின் இனிமையான குரலில் ஸ்பெசலாக ஏதாவது செய்து நம்மை கதி கலங்கவைப்பார்கள். அந்த வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. கேட்டு மகிழுங்கள்.

படம்:கூலிக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.பாலுஜி,ஜானகியம்மா
இசை:டி.ராஜேந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA



போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு
இநத சாம நேரத்துல காலை கோழி எனக் கூவும்
இந்த நெஞ்சின் ஓரத்தில மஞ்சம் வேணும் என தாவும்

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

இவளோ தேனாரு ஓஓஓஓ..ஓஓஓஓ
இதழோ பழச்சாறு ஆஆஆஆ..ஆஆஆஆ

இவளோ தேனாரு ஓஓஓஓ..ஓஓஓஓ
இதழோ பழச்சாறு ஆஆஆஆ..ஆஆஆஆ

ஆப்பிள் போல் பழ மேனி
அழகுக்கோர் இவ ராணி

ஆப்பிள் போல் பழ மேனி
அழகுக்கோர் இவ ராணி

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

பருவம் பதினாறு ஹெஹேஏஏஏஏ
பார்த்தால் பாலாறு ஹெஹெஹெஓஓஓஓ
பருவம் பதினாறு ஹெஹேஏஏஏஏ
பார்த்தால் பாலாறு ஹெஹெஹெ ஹஹஹ

கொதித்தாய் நீ என் பாரு
கொடுத்துதான் இளப்பாரு
கொதித்தாய் நீ என் பாரு
கொடுத்துதான் இளப்பாரு

பொருத்துக்க ???
பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு நிலா
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹே...ஏஏஏஏஏ
ஹே..ஹே...ஏஏஏஏஏ

போதை ஏத்தும் நேரம்
இந்த பொன்னு கண்ணில் ரம் ரம் ரம்

அடி ஆத்தா... ஹ
உன்னை பார்த்தா.. ஹ
அடி ஆத்தா உன்னை பார்த்தா
இந்த மாமன் வயசு தான் காஞ்சு போச்சுதடி மானே
இந்த பாளூம் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே

Tuesday, April 06, 2010

950 ஓட்ட சட்டிய வச்சுகிட்டு



அழகான வரிகளுடைய அமர்க்களமான அதிரடி பாடல் சார். (சுந்தர் சார் இது உங்கள் விருப்பம் தான். பாலுஜிக்கு தனியாக ஒரு தளம் ஆரம்பித்த உங்கள் உயர்ந்த உள்ளம் என்றென்றும் வாழ்க வளர்க.

பதிவு ரொம்ப வருடங்களாக காத்திருந்தது மறுபடி கேட்ம முடியவில்லை.
அய்யா.. அம்மா.. (வேற ஒன்னுமில்லங்க ஒட்ட சட்டின்னு தலைப்பு வருதா? அதான். ஹி ..ஹி) உருட்டு தாளமா? அல்லது குருட்டு தாளமா? பாட்ட குஜாலாக கேட்டுட்டு கொஞ்சம் சட்டியில போடுங்கய்யா?

படம்: உயர்ந்த உள்ளம்
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிப்பு: கமல்ஹாசன், அம்பிகா
இசை:ராசய்யா..

ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
உருட்டு தாளம் போடாதே
பாட்டன் சொன்னதே கேட்டுக்கிட்டு
பழைய பாட்டு பாடாதே
நீயும் நானும் ஒன்னாகனும்
சமநீதி நியாயம் உண்டாகனும்
சோறும் நீறும் எல்லாருக்கும்
வந்து சேர்ந்தா பூமி நல்லாயிருக்கும்
இங்கே தான் படிச்சேன் வாழ்க்கை பாடம்
ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
உருட்டு தாளம் போடாதே

கட்டில்கள் மெத்தைகள் மேல்மாடி
எல்லாமே நான் பார்த்தேண்டா முன்னாடி
அங்கெல்லாம் இல்லாத சந்தோசம்
இங்கே நான் கண்டேனே இந்நேரம்
மலர் மஞ்சம் போட்டு நான் பறிச்சேண்டா நேத்து
அது ஒருநாளூம் தூக்கம் வரல ஹெஹெ
தலமேல நானே இங்கு படிச்சேண்டா நானே
அட இது போல இன்பம் இல்லே
அவ வீட்ட வந்ததும் வெளிய வந்ததும் தெரிஞ்சதும்
ஊரு உலகம் இருக்க இருக்க புரிஞ்சதும்
தெரிஞ்சத புரிஞ்சத எடுத்து சொன்னா அறிஞ்சுகொள்ளனும்

ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
உருட்டு தாளம் போடாதே
பாட்டன் சொன்னதே கேட்டுக்கிட்டு
பழைய பாட்டு பாடாதே
நீயும் நானும் ஒன்னாகனும்
சமநீதி நியாயம் உண்டாகனும்
சோறும் நீறும் எல்லாருக்கும்
வந்து சேர்ந்தா பூமி நல்லாயிருக்கும்
இங்கே தான் படிச்சேன் வாழ்க்கை பாடம்
ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
உருட்டு தாளம் போடாதே

முப்பாட்டன் வந்தாளே தாயாட்டம்
நாமெல்லாம் அவ பெத்த சேயாட்டம்
முப்பத்தில் இப்பத்தான் கொண்டாட்டம்
உண்டாச்சு ஊத்தத்தான் வெறும் கூட்டம்
காப்பாத்தும் ஆத்தா இரு கண்ணாலே பார்த்தா
அட எந்நாளும் துன்பம் இல்ல
கீழ் வர்க்கம் என்ன இதில் மேல் வர்க்கம் என்ன
அட எல்லோரும் ஒருதாய் பிள்ள
குழந்தை குட்டிக இருக்கவேணும் உறவுல
குடும்ப நலத்தை நினைக்கவேணும் மனசுல
தெரிஞ்சத புரிஞ்சத எடுத்து சொன்னா அறிஞ்சுக்கொள்ளனும்

ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
உருட்டு தாளம் போடாதே
பாட்டன் சொன்னதே கேட்டுக்கிட்டு
பழைய பாட்டு பாடாதே
நீயும் நானும் ஒன்னாகனும்
சமநீதி நியாயம் உண்டாகனும்
சோறும் நீறும் எல்லாருக்கும்
வந்து சேர்ந்தா பூமி நல்லாயிருக்கும்
இங்கே தான் படிச்சேன் வாழ்க்கை பாடம்
ஓட்ட சட்டிய வச்சுகிட்டு
உருட்டு தாளம் போடாதே

Followers

பகிர்க