1093 வானத்த பார்த்தேன் பூமியை பார்த்தேன்

//வாழ்க்கை எதுவென்று புரியவில்லை.. வாய் விட்டு அழவும் வசதியில்லை.. வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது.. விதியால் வந்ததா இல்லை.. சதியால் வந்ததே தொள்ளை//
இசை: சந்திரபோஸ்
படம்:மனிதன்
பாடல்:வானத்த பார்த்தேன் (சோகப்பாடல்)
பாடகர்கள்: டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்தத் தீயும் அணையாது
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
மாமான் அடிச்சாரோ மல்லிகைபூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு ஆச்சிரியங்கள்?? செய்து வைப்பேன்
நிலைமையை சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை கிடையாது
பூவை வைத்த பாவியே ஈரை வைக்கிறார்
நெருப்புக்கு உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பும் எரியாது
உண்மை ஒன்று பேசுமா ஊமை நானம்மா
மண நாள் பார்த்தவன் நானே
பிண நாள் பாப்பதும் நானே
மண நாள் பார்த்தவன் நானே
பிண நாள் பாப்பதும் நானே
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
ஏற்கனவே அவன் எரித்துவிட்டான்
எரித்தது மறுபடி எரித்து விட்டான்
தர்மம் காக்கும் தேவனோ
தூங்கிப் போய்விட்டான்
வாழ்க்கை எதுவென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும் வசதியில்லை
வெந்த புண்ணில் அல்லவோ வேலும் பாய்ந்தது
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொள்ளை
விதியால் வந்ததா இல்லை
சதியால் வந்ததே தொள்ளை
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா
தங்கை என்னும் தங்கம் இங்கே
தீயில் வேகும் இப்போது
கண்கள் சிந்தும் கண்ணீராலே
எந்தத் தீயும் அணையாது
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுசனை இன்னும் பார்க்கலையே
நான் பிறந்தது அழுதிடத்தானா
ஏய் விதியே சரிதானா








