1208 ஒரு பாடலை பல ராகத்தில்
//எந்தன் பாதையை இந்த தேவதை .. குரல் ஓசையை கேட்கின்றேன் .. உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் .. நான் வானில் பறக்கின்றேன் .. விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம் .. அது மோக காவியம்//
படம்: மல்லிகை மோகினி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்: விக்ரம் (பாம்பே??) லதா
இசை:ஜி.கே.வெங்கடேஷ்
இயக்குநர்: துரை
வருடம்:1979
|
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
எந்தன் பாதையை இந்த தேவதை
குரல் ஓசையை கேட்கின்றேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம்
நான் வானில் பறக்கின்றேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பனிமல்லிகை மணமோகினி உன்னை மறக்க முடியுமோ
ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ...
ஏழு உலகமும் சென்று தேடினும்
ஏழு உலகமும் சென்று தேடினும் இதைக் காண கூடுமோ
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
மழைக் காலங்கள் வரும் வேளையில் உனை மேகமாக்குவேன்
இளம் கோடையில் எந்தன் ஜாடையில் உனைத் தென்றலாக்குவேன்..
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
என் நெஞ்சமே ஓரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன்
இன்று ஏறி தாண்டினேன்
ஒரு பாடலை பல ராகத்தில்
உன்னைப் பார்த்துப் பாடினேன்

0 comments:
Post a Comment