1129 காதல் இன்று தீயாய் பொழிகின்றதே

இனிமையான சோகப் பாடல் கேட்டு மகிழுங்கள்
படம்:காலாட்படை
பாடல்கள்: பத்மபூஷன் பாலுஜி
இசை பரத்வாஜ்
நடிப்பு ஜெய், விது
வருடம்: 2002
|
காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
கண்ணீரில் மூழ்கும் கனவெல்லாம் சாகும்
இளவயதில் சாபம் பாவம்
காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
காதல் எனும் யாத்திரையில்
பிரிவெனும் போதிமரம்
கண்ட பின்பு வந்ததடி ஞானம்
காசு பணம் பார்ப்பதில்லை
அன்பைக் கடன் கேட்பதில்லை
உண்மைக் காதல் சொல்லிதந்த வேதமே
காதல் எனும் நேசத்தினை
உண்ட பின்னும் சாகவில்லை
அன்புக்கு இன்று உன்னால் அவமானம்
உண்மை காதல் வாழவில்லை
தோல்விகளும் ஓய்வதில்லை
பெண்னால் தானே எங்கும் சோக கீதம்
அட உள்ளூக்கு பூவென்னும் நேசம்
இது பெண்ணாலே நான் கண்ட தோசம்
இனிதானே பாவம் காதல்
காதல் இன்று தீயாய் பொழிகின்றதேஏஏ
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
இனி ஒரு பிரிவில்லை என்று அங்கு சொன்னபடி
காணவில்லை சென்று விட்டால் பேதை
எந்தன் அன்பு மாறவில்லை
எல்லைகளை மீறவில்லை
தனிமைக்கு துணை இன்று போதை??
ஹ அன்பு தந்த வானம் எல்லை
இன்பங்களோ மீதம் இல்லை
காதல் வெற்றி கண்டவனோ மேதை
பெண்ணை இனி காண்பதில்லை
காதல் பிச்சை கேட்பதில்லை
என்பதுதான் இனி எந்தன் கீதை
இனி ஆணுக்கு ஏன் இந்த சோகம்
பெண் இதயங்கள் எப்போது மாறும்
பரிதாப காதல்.. ஹ்ஹஹ
காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
கண்ணீரில் மூழ்கும் கனவெல்லாம் சாகும்
இளவயதில் சாபம் காதல்
காதல் இன்று தீயாய் பொழிகின்றதே
சோகம் நெஞ்சில் ஆறாய் வழிகின்றதே
பாடல் ஒலிக்கோப்பு நன்றி திரைப்பாடல் தளம்













