Thursday, July 28, 2011

1200 இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா..



//உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா... பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி ... மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்... மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது .. நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...//

படம்: அவளா இவள்?
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சரோஜினி

Get this widget | Track details | eSnips Social DNA


ஒலிக்கோப்பு உதவி நன்றி:கோவை கோபாலகிருஷ்னன்

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...
இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா...
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி
மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்...

மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது
நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...
இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா...
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூமழை தூவிய பஞ்சனை மேவிய
பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்....

மாலை மயங்கிய வேளை தொடங்கிட
மந்திரம் யாவையும் சொல்ல வேண்டும்...

இன்னும் இன்னும் சொல்ல சொல்ல
என்னென்னவோ எண்ணம் கொண்டு
சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்...

அந்த சுகம் என்னவென்று போக போக கொண்டு வந்து
அள்ளி அள்ளித் தந்த பின்பு என்ன வேண்டும்...

நீ ஒரு கடலாட்டம்.. நான் ஒரு படகாட்டம்...
நீந்திடும் மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்...

நித்தமும் இது போலே முத்திரை பதித்தாலே
சித்திரை கொடியாளின் நித்திரை என்னாகும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...
இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா...
என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

Friday, July 22, 2011

சொர்க்க வாசல்



வற்றாயிருப்பு வீட்டு எதிரே பெருமாள் கோவில் சொர்க்கவாசல். கோவில் தெருவைப் பிளந்து கிழக்கு பார்த்து இருக்கும். கோவில் முன்பு நன்னீர் கிணறும் பின்பக்கம் ஒரு தண்ணீர்க்குழாயும் இருக்கும். நான்கு தெருப்பெண்களும் அவரவர் குடங்கள், வாளிகள் கொண்டு வந்து நீர் இறைப்பார்கள். பிடிப்பார்கள். காலையில் முதலாளாகப் போய் நீர் இறைத்தால் வறண்ட கயிறு உராய்ந்து உள்ளங்கை எரியும். சற்று கழித்துப் போனால் நீரில் நனைந்து மிருதுவாகி இறைப்பது சுலபமென்பதால் தாமதமாகத்தான் போவோம். கிணற்றுக்குச் சற்று நடக்கவேண்டும். குழாய்தான் அருகில். ஆனால் கிணற்றில் நீரிறைப்பதை வேடிக்கைபார்ப்பதற்காகப் போவதுண்டு. ஆள்நடமாட்டமில்லா மதிய வேளைகளில் எட்டிப்பார்த்தால் பாதாளத்தில் நெளியும் வானமும் சில்லவுட்டாக என் உருவமும் தெரியும். லேசாக பயமாகக்கூட இருக்கும். 

சொர்க்கவாசலுக்கு முன்பு ஐந்தடி அகலத்தில் ஐந்து கற்படிக்கட்டுகள் இருந்தன. ஒவ்வொரு படிக்கும் ஒரு பெயர் வைத்து விளையாடுவோம். Bank, Ocean, River, Water, Sea என்பதே அவற்றின் பெயர்கள். தரைக்குப் பெயர் Land. டand-ஐ ஒட்டி இருந்தது Sea. மேலே இருக்கும் படி Bank. தரையில் நின்றுகொண்டு பார்த்தால் Bank என் தோளுயரத்தில் இருந்தது.

வரிசையாக படிகளின் ஓரத்தில் நின்று கொள்ள விளையாடுபவன் முதலில் வந்து Land-இல்  நின்று கொள்ள எதிராள் சொல்லும் படியில் ஏற வேண்டும். வேறு எந்தப் படியிலும் உடல் படக்கூடாது என்பதே விளையாட்டு. பட்டால் அவுட். கீழே நின்றதும் முதலில் சுலபமாக Ocean என்பார்கள். ஒரே தாண்டில் அந்த மூன்றாவது படிக்குப் போய்விடலாம். பிறகு Water; அப்புறம் Bank என்று மாறி மாறி கொஞ்சநேரம் தாண்டியதும் மறுபடியும் Land-க்குப் போகச் சொல்வார்கள். அங்கிருந்து "Bank" என்பான். இதுதான் சவால். அங்கிருந்து Bank படியில் மற்ற படிகளில் உடல்படாமல் ஏறுவது என்பது அசாதாரணமான விஷயம். ஒருகாலில் நின்று கொண்டு இன்னொரு காலை நீட்டினால் Bank எட்டாது. அங்கு போவதற்கு என்னென்னமோ சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள்.

சற்று பின்வாங்கி கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாக நின்று ஒரு தாவு தாவி Bank-இல் ஏறிவிடுவான் ஜீவா. சற்று உயரமான பையன்கள் கைகளைத் தலையிலூன்றித் திரும்பி பாதங்கள் Bank-இல் பட Land-க்கும் Bank-க்கும் பாலம் போல சாய் கோணத்தில் நிற்பார்கள். உடனே "Land" என்று அறிவிப்பு ஒலிக்க, கால்களை நெம்பி எடுக்க முடியாமல் அவுட்டாகிவிடுவார்கள். என்னால் Land-லிருந்து Ocean-க்குத்தான் பெரும்பாலும் போக முடிந்தது. வற்றாயிருப்பில் இருந்த வரை என்னால் Bank-படியை எட்டவே முடியவில்லை.

ராமகிருஷ்ணா திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையாமல் Bank-இல் படுத்துப் பலமுறை தூங்கியிருக்கிறேன். தாத்தா டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு கணக்கையெல்லாம் செட்டியாரிடம் பைசல் பண்ணிவிட்டு வந்து தங்கபஸ்பம் ”போயிலை”யை கொஞ்சநேரம் குதப்பித் துப்பிவிட்டு Ocean-மீது படுத்துத் தூங்குவார். பகல்வெயில் சூடேறிய பாறைப் படிகளின் உஷ்ணம் இரவு முழுதும் முதுகில் இதமாகப் படிந்திருக்கும். அதிகாலை விடியுமுன் தெருப்பெண்மணிகள் வாளிகளுடன் வெளிப்பட்டு மண்தரையில் பளேரென்று நீரைத் தெளித்துக் கோலமிடுவார்கள். நீர் தெளிக்கப்படும் ஓசையில் லேசாக உறக்கம் கலையும். சிலசமயம் அத்தைமார் வாசலிலிருந்து தெளிக்கும் நீரின் சில துளிகள் முகத்தில் பட்டு எரிச்சலாக முணுமுணுத்துக்கொண்டு ஒருக்களித்து முதுகுகாட்டிப் படுப்பேன். பால்காரர் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் போது எழுந்து தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு தெற்குத்தெருதாண்டி சிவன்கோவிலுக்கு அப்பால் வயல்வெளிகளில் இருக்கும் பிரம்மாண்ட விவசாயக்கிணறுகளில் குளிக்கக் கும்பலாகக் கிளம்பிவிடுவோம். 

வேலைவெட்டியில்லாத அக்ரஹாரத்து இளைஞர்கள், நடுத்தரவயதுக்காரர்கள் சொர்க்கவாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து அரட்டையடிப்பார்கள். நாங்கள் பள்ளி முடிந்து வந்ததும் எங்கள் விளையாட்டைத் தொடர்வதற்காக இடத்தைக் காலிசெய்துவிடுவார்கள்.

வருடத்திற்கு ஒரு முறையோ என்னவோ மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கருடவாகனம், மயில்வாகனம் என்று வெளிவந்து பல்லக்கில் பெருமாளைத் தூக்கி வலம் வருவார்கள். எங்கள் வீட்டுமுன் கூட்டம் அம்மும். அந்தப் படிகள்தான் எங்கள் விளையாட்டு மைதானம். சொத்து. கோவிலின் பிரம்மாண்ட சுவரையொட்டி இட்லித்தட்டுபோன்று குழிகள் தோண்டி கோலிகள் எறிந்து விளையாடுவோம். “பேந்தா” என்றொரு கோலி விளையாட்டும் பிரபலம். தெருவில் கிட்டிப்புள் தூள் பறக்கும். சைக்கிள் டயர்களையும், ரிம்களையும் குச்சியொன்று வைத்துக்கொண்டு அசுரவேகத்தில் இப்புறமும் அப்புறமும் செலுத்தி ஓடுவார்கள் பையன்கள். எதிரெதிரே நின்றுகொண்டு அவரவர் “வாகனத்தை” வேகமாக உருட்டி மோதச் செய்வது பிரபலம். ஸ்கூட்டர் டயர் ஒன்றை வைத்திருந்த பையன் தான் சாம்பியன். ஸ்கூட்டர் டயருடன் மோதி சைக்கள் சக்கரங்கள் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கம்பியுடைந்து உருவமிழந்த சைக்கிள் டயர்களை ஏழைப் பையன்கள் ஓட்டிக்கொண்டு போவார்கள். எட்டு மாதிரி வளைந்து வளைந்து எலும்பில்லா விலங்கு போல ஓடும் அவை.

பம்பரங்களால் பம்பரங்களைக் குத்தி ”ஆக்கர்” வைப்போம். இதயம் மாதிரி வளைவு வளைவாக சந்தனக் கலர் கட்டையில் செய்து மேலே தலையில் வண்ணங்களெல்லாம் தீட்டி அலங்காரமாக வரும் பம்பரங்கள் பார்க்கக் கவர்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கெல்லாம் பிரமிடைத் திருப்பிப்போட்டது போல இருக்கும் அடர்பழுப்பு கட்டையில் செய்த வளைவுகளற்ற சாதாரண தோற்றத்திலிருக்கும் பம்பரங்கள்தான் பிடித்தமானவை. குறிபார்த்துச் சுண்டி பம்பரங்களைக் குத்திப் பெயர்க்க அவை சிறந்தவையாக இருந்தன. ஜீவா அப்படியே பம்பரத்தைத் தரையில் குத்தியெழுப்பி உள்ளங்கையில் ஏந்தி என் உள்ளங்கையில் இறக்க கிர்ரென்று குறுகுறுக்கும். அதை திண்ணைத் தரையில் விட்டால் சத்தமின்றி நீண்டநேரம் ரொங்கும்.

இருபத்திநாலு மணிநேரமும் படிகள் சொர்க்கவாசலிலேயே கிடந்தன. ஊர்விட்டு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்டன. அதற்கப்புறம் நடுநடுவே ஓரிரு தடவைகள் மட்டுமே போக வாய்ப்புக்கிடைத்துப் போனபோதும் படிகளைப் பார்க்கவில்லை. வீட்டையும் விற்றுவிட்டதால் சொர்க்கவாசல் பக்கம் எந்த வேலையும் இல்லை.

போனவருடம் என் அண்ணன் மதுரையிலிருந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு “பிறந்த ஊரைக்” காட்டுவதற்காக வற்றாயிருப்புக்குச் சென்று விட்டு வந்தான். “எப்படி இருக்கு வற்றாப்?” என்று கேட்டதற்கு, எட்டிப்பார்த்த பெருமாள்கோவில் முன்புறக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் இப்போது முழங்கால் உயரமே இருக்கிறதாம். ராட்டினமெல்லாம் காணாமல் போய் கிணற்றுக்குள் போர்வெல் போட்டு குழாயில் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்றான்.

“நம்ம வீட்டுக்குப் போனேன். இப்ப இருக்கற வீட்டுக்காரர் நல்லா மெயின்டெய்ன் பண்றார். எங்களை வரவேற்று அப்பா பத்தி விசாரிச்சார்”.

சொர்க்கவாசல் பற்றிப் பேச்சு வந்தது.

”இப்ப பாத்தா Bank-ம் Ocean-ம் மட்டும்தான் வெளியே தெரியறது. மத்ததெல்லாம் மண்ணுக்குள். ரோட்டைப் போட்டுப்போட்டு தெருவே மேடாகி வீடெல்லாம் கீழே போயிடுச்சு” என்றான்.

சோகமாக இருந்தது. 

***

Thursday, July 21, 2011

1199 படித்தேன் படித்தேன் கடிதம்



//படித்தேன் படித்தேன் கடிதம் .. அடடா வரிகள் அமுதம் .. கேட்பவர் அரங்கம் முழுதும்
உந்தன் பேனா முனையின் நடனம் .. பேனா முனையின் நடனம்//

இனிமையான பாடல் பேச்சுக்கள் கேட்காவிட்டால் என்னங்க? பாலுஜி சுசீலாம்மா இருவரின் குரல்களின் சங்கமத்தை உணருங்கள் அன்பர்களே.

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

படம்:அக்னிசாட்சி
நடிகர்: சிவக்குமார், சரிதா
பாடகர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.பி.சுசீலா
இயக்குநர்: பாலசந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA


வணக்கம்
முதல் வரியை எழுதும் முன்
என் முகவரியை எழுத என்னினேன்
பிறகு தான் வாழ்த்துகின்ற இதயத்துக்கு
விசாலம் தான் முக்கியமே தவிர
விலாசம் முக்கியமல்ல என்று விட்டு விட்டேன்

முத்தங்கள் கைதட்டி கூப்பிடாமலயே
வண்டுகள் வருவது போல் உந்தன்
நடன அரங்கை நோக்கி நகர் தானாகவே
நகர்ந்து நகர்ந்து வருகிறது

காரணம் அபிநயம் என்று சொல்லு
நீங்கள் அதிசயம் என்று அர்த்தப்படுத்துகிறீர்கள்

காற்றுக்கூட கால் சலங்கை கட்டி விடக்கூடிய
கெட்டிக்காரர் நீங்கள்

காற்றுக்கூட கால் சலங்கை கட்டி விடக்கூடிய
கெட்டிக்காரர் நீங்கள் ஹஹஹஹ்ஹ

உங்களை சுற்றிய உருவத்தில் தலைமகள் தலைகனம் பதிக்கிறாள்??
ஓஹோ பொறுத்திருங்கள்
ஒரு பைத்தியம் என்று என்னை பரிகசிக்கிறீர்களோ
ஆம் பைத்தியம் தான் பைத்தியம் தான்
நான் ஒரு தமிழ் பைத்தியம்
புன்சிரிப்பு விட்டு விட்டு வருகிறது??
?? திருப்பி அனுப்பவும்

ம்ம் ஹஹஹாஆ
படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
கேட்பவர் அரங்கம் முழுதும்
உந்தன் பேனா முனையின் நடனம்
பேனா முனையின் நடனம்
படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பொற்சித்திரம்?? கண் முற்றிலும்
வரைந்தாக வேண்டும் நேரில்தான்
பொற்சித்திரம்?? கண் முற்றிலும்
வரைந்தாக வேண்டும் நேரில்தான்

1198 சத்தம் இல்லை - ஆடுபுலி



//ரௌத்திரம் பழகு .. ஆண்மைக்கு அழகு .. நிரந்தரமாகும் ஜெயம் உனக்கு .. நிரந்தரமாகும் ஜெயம் உனக்கு .. வெறுங்கை என்பது மூடதனம் .. விரல்கள் பத்தும் மூலதனம்//

ரொம்ப நாளாச்சுங்க பாலுஜியின் குரலில் அதிரடி பாடலை கேட்டு. அபாரம்.

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

படம்: ஆடுபுலி
நடிகர்கள்:ஆதி, பூர்னா,ரவிசந்திரன்
இசை:சுந்தர் சி பாபு
இயக்குநர்:விஜய் பிரகாஷ்
வருடம் : 2010

Get this widget | Track details | eSnips Social DNA


சத்தம் இல்லை ரத்தம் இல்லை
நித்தம் நித்தம் யுத்தம் தான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
உச்சக்கட்டம் இப்போ தான்

தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்
தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்
தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்
தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்

சத்தம் இல்லை ரத்தம் இல்லை
நித்தம் நித்தம் யுத்தம் தான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
உச்சக்கட்டம் இப்போ தான்

தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்
தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்
தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்
தூம் தக்க தூம் தக்க தூம் தக்க தான்

காதலை வெல்ல ஆயுதம் இல்லை
காதலை வென்ற கடவுள் இல்லை
காதலை வென்ற கடவுள் இல்லை

சத்தம் இல்லை ரத்தம் இல்லை
நித்தம் நித்தம் யுத்தம் தான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
உச்சக்கட்டம் இப்போ தான்

ரௌத்திரம் பழகு
ஆண்மைக்கு அழகு
நிரந்தரமாகும் ஜெயம் உனக்கு
நிரந்தரமாகும் ஜெயம் உனக்கு

வெறுங்கை என்பது மூடதனம்
விரல்கள் பத்தும் மூலதனம்
வெறுங்கை என்பது மூடதனம்
விரல்கள் பத்தும் மூலதனம்
வெறுங்கை என்பது மூடதனம்
விரல்கள் பத்தும் மூலதனம்
வெறுங்கை என்பது மூடதனம்
விரல்கள் பத்தும் மூலதனம்

சத்தம் இல்லை ரத்தம் இல்லை
நித்தம் நித்தம் யுத்தம் தான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
உச்சக்கட்டம் இப்போ தான்

Wednesday, July 20, 2011

1197 ஆனந்த வீணை நான் மீட்டும்





//புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம் .. பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம் .. அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம் //


படம்: மேளதாளங்கள்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகி
நடித்தவர்கள்:ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா

Get this widget | Track details | eSnips Social DNA


ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

நடை செல்ல செல்லச் செல்ல
இடை பட்ட பாடு
நடை செல்ல செல்லச் செல்ல
இடைபட்ட பாடு அடி எந்தன் கன்னே
கொஞ்சும் தமிழ் பாட்டு பாடு

மனம் எனும் ரதியென இருவர் உள்ளாக
மறைந்திருந்தே சிலர் கண்மலர் தூவ

சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோச பாட்டுக்கு தாளங்கள் போட

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

இலை மறைந்தே இருக்கும் கனிகளைப்போலே
ஆஆஆஆ
இலை மறைந்தே இருக்கும் கனிகளைப்போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் தாளமே ஹெஹெஹேஏஏஏ

தேன் சிந்தும் முல்லை செவ்வாயில் ஓரம்
விளையாடும் கலை மோகமே

அஹஹஹாஆஆஆஆ ஹஹாஆஆஆஆ
லலல்லாஆஆஆஆஆ லல்லாஆஆஆஆஆ

Tuesday, July 19, 2011

1196 ஏழைகள் தோழா வாவா



//உணவும் கல்வியும் காற்றைப் போல் உலகில் எல்லோருக்கும் வேண்டுமே .. என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சியாக வேண்டுமே .. வேர்வை சிந்த உழைக்கும் வர்க்கம் வின்னில் பறக்க வேண்டுமே .. விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே
வாழும் போதே வாழவைக்க வந்தவன் நீங்களே .. உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணில் நாங்களே .. மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தரவா .. புயலாய் நடப்பாய் முன்னால் புறப்பட்டு வருகிறோம் பின்னால்//



படம்:விருதகிரி
பாடகர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்:கேப்டன் விஜயகாந்த்
இசை:சுந்தர் சி.பாபு
வருடம்:2010
இயக்குநர்:விஜயகாந்த்

Get this widget | Track details | eSnips Social DNA


ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா
புத்தன் காந்தி ஏசு எல்லாம் இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க பொங்கிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா

தட்டிக்கேட்க ஆளில்லாமல் கொட்டம் போட்ட கூட்டமே
தங்கத்தலைவன் வந்துவிட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் ரத்த வாடை சுமக்குது இந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே
வானும் மண்ணும் நீரும் காற்றும் பொதுவில் உள்ள கோவிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு வன்முறையாடல் கைதியே
எல்லாம் மாறும் தருனம் உன்னால் தானே வரனும்
வழியை காட்டு முன்னால் வருகிறோம் உங்கள் பின்னால்

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

ஏழைகள் தோழா வா வா எங்களை காக்க வா வா
வீரு கொண்டு வீரு கொண்டு வெற்றி காண வா வா

உணவும் கல்வியும் காற்றைப் போல் உலகில் எல்லோருக்கும் வேண்டுமே
என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சியாக வேண்டுமே
வேர்வை சிந்த உழைக்கும் வர்க்கம் வின்னில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே
வாழும் போதே வாழவைக்க வந்தவன் நீங்களே
உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணில் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தரவா
புயலாய் நடப்பாய் முன்னால் புறப்பட்டு வருகிறோம் பின்னால்

எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா

எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா

புத்தன் காந்தி ஏசு எல்லாம் இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க பொங்கிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை
தமிழகத்தின் தாய்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை

எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா
எங்கள் தலைவா வாவா புரட்சி கலஞரே வா வா
ஏழையை காத்த எங்களை காக்க வெற்றி காண வா வா

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபலகிருஷ்னன்.

1195 காலையிலும் மாலையிலும்



//காவேரி கரைப்புரண்டு கல்லணையை தேடிவர .. கேளாத கவிதை கொண்டு கைவளையல் பாடிவர //

படம்:புதுசா படிக்கிறேன் பாட்டு
பாடகர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, சுனந்தா
இசை: தேவா
பாடலாசிரியர்:வாலி

Get this widget | Track details | eSnips Social DNA


காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

சின்னஞ்சிறு நிலா சேலைகட்டும் நிலா சித்திரை மாத நிலா

புத்தம் புது நிலா பொட்டு வைத்த நிலா புன்னகை மின்னும் நிலா

கட்டித்தழுவிடும் மானம் இனி விட்டுப்பிரியாது

விட்டு விலகிடும் நானம் வெட்கம் அறியாது

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

காவேரி கரைப்புரண்டு கல்லணையை தேடிவர
கேளாத கவிதை கொண்டு கைவளையல் பாடிவர

நில்லாது வயது வந்த முத்து குடம் ஆடிவர
நீராடை விரித்து வந்து முன்னழகை மூடிவர

நான் மயங்கி மயங்கி தவிக்க மந்திரம் போட்டதென்ன

சிறுக சிறுக அழைக்க என்னை சம்மதம் கேட்டதென்ன

கைகள் தடவி தடவி தினமும் தட்டாத தஞ்சாவூர் மத்தளமே

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது இந்த நிலா

காதோடு ரகசியமாய் சொல்லும் இந்த கோகிலமே

கண்ணோரம் நீ கிடந்தாய் என்னுடைய பூங்குழலே??

தேவாரம் திருப்புகழை பிறக்கும் உன் வாசலிலே ??
நான் பாட நெருங்கி வந்த ராஜ ராஜ கீர்த்தனமே

-- இணையும் இனி சம்மதம் தேவையில்லை

இசையும் மொழியும் தழுவ இங்கு எப்பவும் கேள்வியில்லை

உன்னை நினைத்து நினைத்து இனிக்க இனிக்க பாடும் ஆனந்த ராகங்கள்

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

சின்னஞ்சிறு நிலா சேலைகட்டும் நிலா சித்திரை மாத நிலா

புத்தம் புது நிலா பொட்டு வைத்த நிலா புன்னகை மின்னும் நிலா

கட்டித்தழுவிடும் மானம் இனி விட்டுப்பிரியாது

விட்டு விலகிடும் நானம் வெட்கம் அறியாது

ஓ காலையிலும் மாலையிலும் இது கல்லூரி வாசலில் வந்த நிலா

காதலிக்க கையணைக்க இது கண்ணால சொன்னது தந்த நிலா

Friday, July 15, 2011

1194 எனது விலாசம் மன்மதலோகம்



//ஜில் ஜில் நவாப் இங்கே .. ஜில் ஜில் பொன்னுக்கு ஜவாப் எங்கே .. ஜானது ஆனது ஜானது ஆனது .. ஆனது ஆனது நாவாப் ஜானோகே ஹய்யோ ஆனது ஆனது//

பாலுஜி இதுமட்டும் தான் இந்த பாடலில் பாடியுள்ளார் ஏதோ புரியமாதிரி இருக்குது என்னேன்னுதான் தெரியல? இது போன்ற ஸ்பீடு பாடல்களை யார் பாடினாலும் சுசீலாம்மா குரலே தனி அழகு தான் உச்சரிப்பு தான் படுசூப்பர். ஒரு முறை கேட்டாலே வரிகள் பச்சக்குன்னு மனதில் பதிந்துவிடுகிறது.

படம்: மேளதாளங்கள்
பாடகர்கள்:எஸ்.பி.பி. பி.சிசீலா
நடிகர்கள்: ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா,சுருளிராஜன்


Get this widget | Track details | eSnips Social DNA


எனது விலாசம் மன்மதலோகம்
எனது விலாசம் மன்மதலோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமை கொள்ளாதது

ஓஹசீனா ஏஹசீனா கிஸ்கேலியே ??

ஜில் ஜில் நவாப் இங்கே
ஜில் ஜில் பொன்னுக்கு ஜவாப் எங்கே
ஜானது ஆனது ஜானது ஆனது
ஜானது ஆனது ஆனது நாவாப் ஜானகே ஹய்யோ ஆனது

ஓஹசீனா ஏஹசீனா கிஸ்கேலியே ??

எனது தேகம் மல்லிகை புஷ்பம்
இன்பரசமே கொண்டாடுதே
இளமையிலே இது ஒரு தங்கபஸ்பம் ??
ஈடு இணையே இல்லாதது
சிம்மகுட்டி மாணிக்கட்டி
சிறந்த ஜோடி விலகாது
சிரிக்கும் போதே இழுக்கும் ஆள
விளக்கம் சொல்லி தீராது

எனது விலாசம் மன்மதலோகம்
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமை கொள்ளாதது
ஓஹசீனா ஏஹசீனா கிஸ்கேலியே ??

ஜில் ஜில் நவாப் இங்கே
ஜில் ஜில் பொன்னுக்கு ஜவாப் எங்கே
ஜானது ஆனது ஜானது ஆனது
ஜானது ஆனது ஆனது நாவாப் ஜானகே ஆனது ஹய்யோ ஆனது

ஓஹசீனா ஏஹசீனா கிஸ்கேலியே ??

தேடுது தேடுது அங்கும் இங்கும்
தெரியலையே இந்த கண்ணுக்கு
தேவலோகத்தில் மறைந்திருந்தாலும்
தெரிஞ்சு போகுமே பெண்ணுக்கு

எனது விலாசம் மன்மதலோகம்
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமை கொள்ளாதது

ஓஹசீனா ஏஹசீனா கிஸ்கேலியே ??

ஜில் ஜில் நவாப் இங்கே
ஜில் ஜில் பொன்னுக்கு ஜவாப் எங்கே
ஜானது ஆனது ஜானது ஆனது
ஆனது ஆனது நாவாப் ஜானோகே ஹய்யோ ஆனது ஆனது

Thursday, July 14, 2011

1193 காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி




// சட்டம் போட்டு தடுத்தாலும் .. திட்டம் போட்டு மறைத்தாலும் ..
ஊரு கூடி எதிர்த்தாலும் .. உடம்பு இரண்டா பிரிஞ்சாலும்
உதடுவேனா மாறி பேசும் .. உள்ளம் மட்டும் மாறாது .. காதல் உள்ளம் மட்டும் மாறாது//

சினிமாவில் பிரபலமான நடிகர்கள் இரண்டு வேடங்களில் நடித்து நம்மை கவர்ந்தவர்கள் உண்டு. அது போல இரண்டு வெவ்வேறு சுதியில் சேர்ந்தால் போல் பல பாடல்களை பாலுஜி பாடியிருந்தாலும் இந்த பாடலில் இறுதியில் வரும் மேலே உள்ள பாடல் வரிகள் என்னமாக உருகி பாடியிருக்கிறார் பாலுஜி. மேலும், டி.ஆர்.படங்களில் வசனங்கள் அவர் பேசினாலே சிலர் சிரிப்பார்கள் அபபடி சர்வசாதரனமாக எளியவனுக்கும் புரியும் படி பேசியிருப்பார் இந்த பாடலில் சரணங்களில் அப்படி தான் வரிகளை எழுதியிருக்கிறார் பாட்லாசிரியர் அந்த வசன உச்சரிப்புகளையும் வெகுவாக பதமாக பாடி நம் மனதை கவிழ்த்துவிட்டார் பாலுஜி.
எப்படின்னு கேட்டுதான் பாருங்களேன்.

படம்: காதல் அழிவதில்லை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:சிம்பு,ஷார்மி
இசை: விஜய் டி.ராஜேந்தர்

Get this widget | Track details | eSnips Social DNA


காதல் அழிவதில்லை
கடல் அலைபோல் ஓய்வதில்லை
வா என்றால் வருதில்லை
காதல் போ என்றால் போவதில்லை
நெனச்சா நெனெச்சது தான்
யாரும் அழிச்சாலும் அழியாது

காதல் காதல் அது அழிவதில்லை
அலைகள் அலைகள் அது ஓய்வதில்லை
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால் மறக்க முடியாது
நெருப்பு வெச்சு சுட்டாக்கூட காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கு அது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே.. காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே .... தாங்கலியே

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

பெத்தவங்க ஒத்துக்கொண்டா நீயும் நானும் காதலிச்சோம்
மத்தவங்க ஒப்புதல் தந்தா நீயும் நானும் சந்திச்சோம்
கண்ணும் கண்ணும் பார்த்துக்கொள்ள காதலும் தான் மறந்தது
நெஞ்சும் நெஞ்சும் நினைந்து கொள்ள நேசமும் தான் வளர்ந்தது
அந்தஸ்தையும் பணத்தையும் மட்டும் பெற்றோர் சிலர் மதிப்பாங்க
அன்பு வெச்ச புள்ளைங்க மனசை பிரிச்சு வைக்க பார்ப்பாங்க
பத்திரிக்கை அட்ச்சாலும் பத்து கைகள் தடுத்தாலும்
நிர்ப்பந்தமே செஞ்சாலும் நிச்சயமே முடிந்தாலும்
அணை போட்ட வெள்ளம் நிக்குமே
தடைப்போட்டா உள்ளம் நிக்குமா
தடைப்போட்டா காதல் உள்ளம் நிக்குமா

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி

ஜாதிமத மொழியை எல்லாம் கலந்தது தான் காதலடி
சொந்தபந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நிற்பதே காதலடி
பெண்கள் சமயத்தில் பெத்தவங்க ஆட்டி வைக்கும் பொம்மையடி
காதல் என்னை வெறுப்பதால் சொல்வதில் இல்லை உண்மையடி
எதிர்ப்புகள் வந்தால் கூட எதிர் நீச்சல் அடிக்கனும்டி
தேசமே கடத்தினாலும் துனிந்த காதல் ஜெயிக்குமடி
சட்டம் போட்டு தடுத்தாலும்
திட்டம் போட்டு மறைத்தாலும்
ஊரு கூடி எதிர்த்தாலும்
உடம்பு இரண்டா பிரிஞ்சாலும்
உதடுவேனா மாறி பேசும்
உள்ளம் மட்டும் மாறாது
காதல் உள்ளம் மட்டும் மாறாது

காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
காதல் தீபாவளி நெஞ்சில் தந்தாள் வலி
ஒரு முறை நெனச்சிவிட்டால் மறக்க முடியாது
நெருப்பு வெச்சு சுட்டாக்கூட காதல் நெஞ்சு வேகாது
உயிரே உனக்கு அது தெரியாதா
காதல் அழிவதில்லை புரியாதா
சொல்லடி சொல்லடி என் காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே
சொல்லடி சொல்லடி என் காதலியே.. காதலியே
நீ சொன்னது சொன்னது தான் தாங்கலியே .... தாங்கலியே

Tuesday, July 12, 2011

1192 ராஜா வந்தார் ராணி வந்தாள்



//கட்டான முத்தான கண்ணாளனை .. கண்டாலே யாவர்க்கும் ஆசை வரும் .. மொட்டாகிப் பூவான கண்ணாட்டியின் .. முந்தானை கண்டாலே காதல் வரும் .. தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா .. தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா .. கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி//

இந்த பாடலும் கேட்டு பலவருடங்கள் ஆகின்றன இதோ உங்கள் செவிக்கு ராஜா வந்தார்.

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

பாடல்: ராஜா வந்தார் ராணி வந்தாள்
திரைப்படம்: ராஜாவுக்கேத்த ராணி
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர்

Get this widget | Track details | eSnips Social DNA


ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே
விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே

ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே

கட்டான முத்தான கண்ணாளனை
கண்டாலே யாவர்க்கும் ஆசை வரும்
மொட்டாகிப் பூவான கண்ணாட்டியின்
முந்தானை கண்டாலே காதல் வரும்
தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா
தொடங்கி வச்சா தங்கம்மா தொடர்ந்து வச்சான் சின்னய்யா
கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி

அடடடா விளங்குதடி தில்லாலே விளக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே
ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே

அப்போது நடந்ததெல்லாம் விட்டுத்தள்ளடி
இப்போது மார்பில் எனை கட்டிக்கொள்ளடி
எப்போதும் இப்படியே ஒட்டி இருப்போம்
இன்று வந்த நம்பிக்கையை கட்டி வளர்ப்போம்
துடிக்கிறான்டி சின்னய்யா முடிக்கிறாடி தங்கம்மா
துடிக்கிறான்டி சின்னய்யா முடிக்கிறாடி தங்கம்மா
கண்ணம்மா சின்னம்மா கேட்டுக்க சேதி

விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே
விளங்குதடி தில்லாலே விலக்கம் சொன்னா நல்லால்லே
ராஜா வந்தார் ராணி வந்தாள் ராஜாங்கம் இல்லாமலே
அவர் ஆசை கொண்டார் நேசம் கொண்டார் ஊரார்க்கு சொல்லாமலே

Thursday, July 07, 2011

1191 பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா



ரொம்ப வருடங்கள் கழித்து ரசித்து கேட்ட பாடல் உங்களுக்கும்.

படம்: அம்மன் கோவில் வாசலிலே
நடிகர்: ராமராஜன்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா
இசை: தேவா

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

Get this widget | Track details | eSnips Social DNA



பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா

மன்னன் அதை தினம் கொஞ்சும் நிலா

இந்த கண்ணான காதலை
கல்யாண நாயகன் பாடும் பாடும் பாடும் கலை நிலா

பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

அழகான தேகம் முழுதாக பார்க்க
கனிபோல கனிந்தது நிலா??

மனதாலே சூடும் அறியாத நெஞ்சில்
தடைப்போடும் இன்ப நிலா

சங்கீதம் பாடும்

செவ்வானில் மோதும்

ஓயாமல் நீயும் பறிமாறும் வீரம்

நன்றாக பசியாறும் அலைப்பாயும் ஆசை நிலா?

பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

கண் போட்டு ஆடும் விளையாட்டு என்ன
புரியாத பெண்மை நிலா

இரவான பின்பு என்னைத் தேடி மெல்ல
வரவேண்டும் வென்மை நிலா

சிங்கார லீலை

கொண்டாடும் வேளை

நீதானே எந்தன் இடம் சூடும் வேளை??

ஒரு போதும் கேட்காத மனம் கேட்கும் தனிமை நிலா

பொன் ஊஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண் நிலா

சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வென்னிலா

மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா

மன்னன் அதை தினம் கொஞ்சும் நிலா

இந்த கண்ணான காதலை
கல்யாண நாயகன் பாடும் கலை நிலா

Wednesday, July 06, 2011

1190 ஆகாய வீதியில் பறந்து போனாய்



//நாம் பிரிந்த காலங்கள் திரும்பி வருமோ .. அழியா நினைவு என்னைக் கொன்று தீர்க்கும்
கண்ணோடு சேர்ந்த இமைகளை .. கண்மூடி திறந்தபின் காணவில்லை .. விண்ணோடு பறந்த நண்பனே .. காற்றோடு கலந்து நீ போனாயே .. வேதனையா சோதனையா .. நீ இல்லாமல் வாழ்வில் நிம்மதி ஏது..//

இனிமையான மனதை பிழியும் ஒரு சோகப்பாடல் நீங்களூம் கேட்டு மகிழுங்கள் என்று சொல்வதா சோகமாகுங்கள் என்பதா தெரியவில்லை எதுவாக இருந்தாலும் சரியே..

படம்: மனதில் ஒர் மார்கழி
நடிகர்கள்:சந்தோஷ்,சர்மிளா
இசை:அனுராஜ்
தயாரிப்பு: அபிதா ப்ரொடக்ஸன்
இயக்குநர்:சதீஸ் தரியன்
வருடம்:2010

Get this widget | Track details | eSnips Social DNA


மலர் ஒன்று உதிர்ந்தது
விளக்கு ஒன்று அணைந்தது
பகலும் இருளானது
வாழ்க்கையே பொய்யானதே
மரணமே மெய்யானதே
மரணமே மெய்யானதே

ஆகாய வீதியில் பறந்து போனாய்
திரும்பி வருவாயோ வருவாயோ
புன்னகை எல்லாம் உதிர்ந்து போச்சு கனவேயாச்சு
சொந்தங்கள் விலகி போன நேரம்
தோள் கொடுத்தாயே நீ
நட்புக்கு மரணம் இல்லையென்றால்
பொய்யாகிப் போனதேனோ
நீயும் நானும் உலகத்தில்
வாழ்க்கை பயணம் தடுமாறும்

ஆகாய வீதியில் பறந்து போனாய்
திரும்பி வருவாயோ வருவாயோ
புன்னகை எல்லாம் உதிர்ந்து போச்சு கனவேயாச்சு

ஒரு கோப்பை தேநீரில்
உருவாகும் ஸ்நேகம்
உறவேதும் இல்லாமல்
உருகும் பந்தம்
ஆயிரம் வேஷங்கள்
என் மேடையில் நாம் ஆடினோம்
தோளோடு சேர்ந்த ஸ்நேகமே
தீயோடு கருகிப நீ போனாயே
தோழனுக்கா உயிர் தந்தாய்
நட்பின் இலக்கணம் உன் பெயர் சொல்லும்

ஆகாய வீதியில் பறந்து போனாய்
திரும்பி வருவாயோ வருவாயோ
புன்னகை எல்லாம் உதிர்ந்து போச்சு கனவேயாச்சு

நாம் பிரிந்த காலங்கள் திரும்பி வருமோ
அழியா நினைவு என்னைக் கொன்று தீர்க்கும்
கண்ணோடு சேர்ந்த இமைகளை
கண்மூடி திறந்தபின் காணவில்லை
விண்ணோடு பறந்த நண்பனே
காற்றோடு கலந்து நீ போனாயே
வேதனையா சோதனையா
நீ இல்லாமல் வாழ்வில் நிம்மதி ஏது

ஆகாய வீதியில் பறந்து போனாய்
திரும்பி வருவாயோ வருவாயோ
புன்னகை எல்லாம் உதிர்ந்து போச்சு கனவேயாச்சு
சொந்தங்கள் விலகி போன நேரம்
தோள் கொடுத்தாயே நீ
நட்புக்கு மரணம் இல்லையென்றால்
பொய்யாகிப் போனதேனோ
நீயும் நானும் உலகத்தில்
வாழ்க்கை பயணம் தடுமாறும்

ஆகாய வீதியில் பறந்து போனாய்
திரும்பி வருவாயோ வருவாயோ
புன்னகை எல்லாம் உதிர்ந்து போச்சு கனவேயாச்சு

Tuesday, July 05, 2011

1189 பூப்பறிக்கும் நேரத்துல புயலடிச்சு




//அலைகள் ஓய்ந்த பின் கால் நீரில் குளிக்கவே .. எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே .. கங்கையில் வெள்ள்ம் பொங்கினால் .. கரைகள் போடனும் ஆஆஆஆ .. கரைகள் போட தவறினால் கலங்கி வாழனும் .. //

ரொம்பநாள் ஆச்சுங்க இந்த பாடல் கேட்டு மனசை என்னெனமோ பன்னுது..

படம்: கரையை தொடாத அலைகள்
நடிகர்கள்:அருன் விஜய்,கவுண்டமனி,இளவரசி, கங்கா

Get this widget | Track details | eSnips Social DNA


பூப்பறிக்கும் நேரத்துல புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்து போவதை பார்த்துகடா
பூவோ பூவு பூவோ பூவு

பூப்பறிக்கும் நேரத்துல புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்து போவதை பார்த்துகடா
பூவோ பூவு பூவோ பூவு
பூவோ பூவு பூவோ பூவு

நதிகள் காய்ந்த பின் படகு ஓட்ட முடியுமா
கோட்டை சாய்ந்த பின் ஹஹ கொடியேற்றம் நடக்குமா
ஆஆஆஆநதிகள் காய்ந்த பின் படகு ஓட்ட முடியுமா
கோட்டை சாய்ந்த பின் கொடியேற்றம் நடக்குமா
ஐப்பசி ஆணி மாதத்தில் தென்றலும் வீசுமா ஆஆஆ
சாட்சிக்கு சென்ற பூங்கிளீ கூட்டுக்கு திருமா ஆஆஆ??
காலம் எவர்க்கும் இங்கே காத்திருக்க கூடுமா
பூவோ பூவு பூவோ பூவு
பூவோ பூவு பூவோ பூவு
.
பூப்பறிக்கும் நேரத்துல புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்து போவதை பார்த்துகடா
பூவோ பூவு பூவோ பூவு

அலைகள் ஓய்ந்த பின் கால் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே
அலைகள் ஓய்ந்த பின் கால் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே
கங்கையில் வெள்ள்ம் பொங்கினால்
கரைகள் போடனும் ஆஆஆஆ
கரைகள் போட தவறினால் கலங்கி வாழனும்

காலம் எவர்க்கும் இங்கே காத்திருக்க கூடுமா
பூவோ பூவு பூவோ பூவு
பூவோ பூவு பூவோ பூவு

ஒலிக்கோப்பு உதவி நன்றி:அறிவிப்பாளினி ஸ்ரீவித்யா வரதராஜன், கோவை

1188 அம்மாடி பொன்னு என்னம்மா கண்ணு



//பொன் வண்டு போல் பெண் வண்டுகள் .. எங்கெங்கோ செல்கின்றன ஆஆஆஆ .. சென்றால் என்ன ஆண் வண்டுகள் .. பின்னாடி வருகின்றன //

படம்:ராஜாவுகேத்த ராணி
பாடகர்: டாக்டர் எஸ்.பி.பி வாணி ஜெயராம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: விஜயபாஸ்கர்

Get this widget | Track details | eSnips Social DNA


அம்மாடி பொன்னு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம் அஹஹா
அம்மாடி பொன்னு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

அப்பாவி பொன்னு தப்பாக பார்த்தாள்
அப்பாவி பொன்னு தப்பாக பார்த்தாள்
எப்போதும் அது தானே அதிசயம்

அம்மாடி பொன்னு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

பொன் வண்டு போல் பெண் வண்டுகள்
எங்கெங்கோ செல்கின்றன ஆஆஆஆ

சென்றால் என்ன ஆண் வண்டுகள்
பின்னாடி வருகின்றன

தலைமை மீதே மீனாளாம் ??
தடத்தை விட்டே போனாளாம்??
தலைமை மீதே மீனாளாம் ??
தடத்தை விட்டே போனாளாம்??

வயசு போன மனுசன் கிட்டே
மனசை விட்டாளாம்

அம்மாடி பொன்னு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

அங்கே நின்று கண்கள் இரண்டு
ஆரத்தி எடுப்பதென்ன

அழகென்பது பெண்ணே நீயும்
அபிஷேகம் செய்வதென்ன ஆஆஆஆ

அறிவை சொல்லும் ராஜாவாம்
அழகை கண்டாள் கூஜாவாம்
அறிவை சொல்லும் ராஜாவாம்
அழகை கண்டாள் கூஜாவாம்

படிபடிப்பாய் இப்போது படித்து விட்டாராம்

தளதளக்குது தக்காளி பளபளக்குது பப்பாளி
தனிமையிலே சென்றாளே உலகம் கெட்டதடி

அம்மாடி பொன்னு என்னம்மா கண்ணு
உடம்பெங்கும் ஏனிந்த ரகசியம்

அப்பாவி பொன்னு தப்பாக பார்த்தாள்
எப்போதும் அது தானே அதிசயம்

லலலாலஆஆ.. லல லாலஆஆஆ

Sunday, July 03, 2011

1187 அச்சம் என்னை நெருங்காதே




//உனக்குள் ரகசியம் இருக்கு.. தேள்களின் கொடுக்கு நான் அதை அறுப்பேனடா..
உனக்கா என்னிடம் வழக்கு .. போலி உன் கணக்கு இன்றுடன் முடிப்பேனடா//

நீண்ட நாள் கழித்து ஒரு உற்சாகமான ஸ்வரசியமான பாடல் கேட்டேன் உங்கள் செவிகளுக்கும் உற்சாகமாக கேட்டு மகிழுங்கள்.

ஒலிக்கோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்

படம்: துணிவே துணை
பாடியவரக்ள்: டி,எம்.எஸ், எஸ்.பி.பி
நடிகர்: ஜெய்சங்கர்

Get this widget | Track details | eSnips Social DNA



ஹெய் லிட்டில் கய்
வாட் டு யூ மீட்
ஹ ஹஹஹாஆஆஆ

ஹலோ பிக் பாய்
ஹவ் ஆர் யூ டுடேயே ஆஆ

அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வாண்ட் மீட் டூ யுர் சேலஞ்
சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூர் சேலஞ்

சேலஞ்
ஐ வில் ஆல்சோ சேலஞ்
சேலஞ்
ஐ வில் ஆல்சோ சேலஞ்

யூ ஆர் ஜஸ்ட் அப் கம் டூ மை சிடிப் ஷ்ர்ட்ஸ் பார் மை ஷேடு??
யூர் ஆர் ஐ திஸ் வாண்டட் ??
டேக் இட் கிராண்டட்

அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யூர் சேலஞ்

சித்தம் என்றும் கலங்காது
ரத்தம் காண தயங்காது
ஐ வில் சி யூ சேலஞ்

பிடித்தால் ஒரு பிடி இருப்பாய்
என்னிடம் உனக்கா இத்தனை இருமாப்பாடா

ஐ டோண்ட் சி தட்
ஐ டிர்ங் பார் இன் த ஸ்க்ரீன்
யூர் சேலஞ் இஸ் வெரி ரிஸ்கி
நினைத்தால் நீரிலும் நடப்பேன்
சேற்றிலும் மிதப்பேன் என்னிடம் முடியாதடா

ஆடுகள் வேங்கை அல்ல
நானல்கள் மூங்கில்கள் அல்ல
ஆடுகள் வேங்கை அல்ல
நானல்கள் மூங்கில்கள் அல்ல
கள்வர்கள் போலிஸ் அல்ல
சாட்சி வைப்பேன்
புயலை வைப்பேன் ??
திங்க வைப்பேன்
பேச வைப்பேன்

அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வாண்ட் மீட் டூ யு எ சேலஞ்
சித்தம் என்றும் கலங்காது
ரத்தம் காண தயங்காது
ஐ வில் சி யூ சேலஞ்

உனக்குள் ரகசியம் இருக்கு
தேள்களின் கொடுக்கு நான் அதை அறுப்பேனடா

உனக்கா என்னிடம் வழக்கு
போலி உன் கணக்கு இன்றுடன் முடிப்பேனடா

சக்கரம் எந்தன் கையில்

ஹ வண்டியே எந்தன் கையில்

சக்கரம் எந்தன் கையில்

வண்டியே எந்தன் கையில்

பாதையே எந்தன் கையில்
ஹ ஆண்மை உண்டு
சேலை அல்ல
வீரன் தானா
கோழை அல்ல

அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வாண்ட் மீட் டூ யு எ சேலஞ்

சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூர் சேலஞ்

முடிந்தால் கப்பலை நடத்து
தரையினில் நிறுத்து நான் அதை பிடிப்பேனடா

ஹ ஸ்டாப் த நான்சென்ஸ்
யூர் ஏஜ் ஆப் த மை எக்ஸ்பிரியன்ஸ்
இஸ் த ஏஜ் அப் த யூர் பாதர் ஆஆஆஆ

நான் சிரித்தால் அலைகளூம் நடுங்கும்??
புலிகளூம் பதுங்கும் நீ ஒரு எலிதானடா

அந்த நாள் இல்லை தம்பி
அகிலமே என்னை நமபி
அந்த நாள் இல்லை தம்பி
அகிலமே என்னை நமபி
எண்ணனும் ஜெயிலில் கம்பி
கத்தி இங்கே
புத்தி இங்கே
சக்தி இங்கே
தேச பக்தி இங்கே

அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வாண்ட் மீட் டூ யு எ சேலஞ்

சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூர் சேலஞ்

Friday, July 01, 2011

1186 மயிலே மயிலே உன் தோகை




//தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க .. நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க .. கனி வாய் பல நாள் நினைவே .. வரவா தரவா பெறவா...நான் தொடவா//

பாலுஜி, ஜென்சி குரலில் அமர்க்களமான ஒரு மெலொடி பாட்டு எத்தனை தடவை கேட்டாலும் புத்துணர்ச்சியை தரும் பாடல் இந்த படத்தில் பாலுஜிக்கு ஒரே பாடல் தான் அதுவும் அசத்தல். கேட்டு மகிழுங்கள்.

திரைப்படம்: கடவுள் அமைத்த மேடை
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, ஜென்சி
நடிகர்கள்: சிவக்குமார், சுமித்ரா
இசை: இளையராஜா
வருடம்: 1979
இயக்குனர்: S.P. முத்துராமன்

Get this widget | Track details | eSnips Social DNA


மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க...நாள் முழுக்க தேன் அளக்க
கனி வாய் பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா...நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க
பூங்குழல் தேனருவி...தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்...நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...மயிலே மயிலே

Followers

பகிர்க