அன்பர்களே..

சில ஆடியோ அப்லோட் பிரச்சனைகளால் ”பாடும் நிலா பாலு ” வாட்ஸப்  தளத்தில் பாடல்கள் மற்றும் வானொலித் தொகுப்புகள் வரும்.  இணையதள இசைப்பிரியர்கள் மற்றும் வானொலி தொகுப்பாளர்கள் அனைவரும்  இணைய விரும்பினால்  எனது முகநூலில் தங்களின் வாட்ஸப்   எண் வைத்திருப்பவர்கள் குறிப்பிடலாம். சிரமங்களூக்கு மன்னிக்கவும் .

-. இப்படிக்கு.

இந்த பாடல் முழுதும் கொஞ்சுகிறது  SPB குரல் (ENNA ORU KATHAL ANBU ASAI  - KURALIL ) WOOOOW.   (Last line la Hoy Hoy Hoy  hoy  வரிகளில் செல்லம் கொஞ்சுகிறது spb  குரல். கடவுளே இந்த இனிய தேவாமிருத குரலை எங்களுக்கு அருளியதற்கு நன்றிகள் கோடி ஏழேழு பிறவியிலும் இவரை இதே பாலு ஸார் ஆக தந்து விடு.

திருமதி.யோகாம்பாள் மேடம் நீங்கள் சொல்லியபடி பாலுஜியின் கடைசி வரிகளின் இனிமைதான் டச்சிங் டச்சிங்.  ஓர் இனிமையான பாடலையும் வரிகளையும் இணையதள நேயர்களுக்காக வழங்கியதற்கு மிக்க நன்றி.

தேன் குரல் தென்றல் பாலுஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்த வயதில்லை ஆகையால் அவரை வணங்குகிறோம்.

இப்படி நாங்களும் ரோடு சைட் ப்ளக்ஸ் பேனர் வைப்போம்ல.. ஹி..ஹி..ஹி.

உலகில் எல்லா எப்.எம் வானொலிகளும் பாலுஜியின் பாடல்களுடன் அவரின் அன்பை பாராட்டி பாடல்களை பட்டை கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில்  பா.நி. பா வலைப்பூவும்  தன்னுடைய  வாழ்த்துப் பூக்களை  அவரை நோக்கி தனது வலைப்பூவை விரிக்கின்றது.

அவரின் அன்பை என்றும் நாடும் பா.நி.பா இணையதள ரசிகர்கள்.
3

பாலுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாலுஜி உங்கள் குரல் என்றென்றுமே  தென்றல் நீ....தென்றல்..நீ !

(எல்லோருக்கும் உடலில் ரத்தமும் எலும்பும் சதையும் வைத்து படைத்த கடவுள்  நம்ம பாலு சாருக்கு மட்டும் இசையும் இனிமையும் ராகமும் தாளமும் (ba) பாவமும் சேர்த்து படைத்தான் போல இருக்கிறது.

இசைஞானி இசையில்  இனிமையான மெலோடி பாடல். பாலுஜி நடுவுல வந்தாலும்  அசத்தலான ஆலாபனையுடன் ஆரம்பிக்கும் வரிகள்  அடடா.. அடடா ....  என்னத்தச் சொல்ல  வார்த்தைகள்  இல்லவே இல்லை..  அந்த இனிமையை கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பல முறை கேட்ட பாடல் ஏன் பதியாமல் விட்டு போய்விட்டது என்று தெரியவில்லை. ஆஹா.. ஆஹா.. சரிதா கண்கள் போல்  கூர்மையான மற்றும் இனிமையான பாடல்.  பாடல் துவக்கத்திலேயே ஆலாபனையுடன் நம்மையும்  பரிசலில் கொண்டு செல்கிறார் பாலுஜியும்  சுசிலாம்மாவும்.  அந்த சுகத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.

பாடல் வரிகள் உதவி : நன்றி பாலுஜியின் அதிதீவிர ரசிகை திருமதி. யோகாம்பாள் வெங்கட்ராமன்.

அன்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்துள்ளேன். இந்த படத்தின் பெயர் மட்டும் தான் கேள்விபட்டுருந்தேன் படம் பார்த்த நினைவு இல்லை. இணையத்தில் இருக்கிறது  முழுப்படம் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். இணையத்தில் ஏற்கெனவே பதியப்பட்ட பாடல் தான்  பா.நி.பா தளத்தில்  பதியாமல் இருக்கலாமா?  இதோ உங்களூக்காக இங்கே ஒளிக்கோப்புடன் பாடல் கேட்க இனிமையாக உள்ளது. 

இந்த பாடலை மின்னஞ்சல் மூலம் நினைவு படுத்திய சென்னை தீவிர ரசிகை யோகாம்பாள் அவர்களூக்கு எனது நன்றி.

மலர்களிலே  உருவாகும் தேன் துளிகள் போல பாலுஜியின்  அற்புத முக பாவங்களுடன் அவரின் இனிமையான குரல் வானொலித்தொகுப்பை மீண்டும் மீண்டும் கேட்டு மகிழுங்கள்.  தித்திக்கும் தெவிட்டாத கானங்கள்.

பாலுஜியின் வானொலித்தொகுப்பு கூகுள் ட்ரைவிலே கேட்கலாம்.

நாளை  கிரிக்கெட் அரை இறுதி போட்டியில்  பாரத அணி  ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள்  பாலுஜியின் பாடல்களை விரும்பி கேட்பவர்கள் அதிகம் இருப்பார்கள்.  ஏன் பாலுஜியே எந்த வேளையும் வைத்துக்கொள்ளாமல்  போட்டியை விரும்பி பார்ப்பவர்.  இதோ அவரே தன் ரசிகர்களுடன் சேர்ந்து  பாடுகிறார்.
இசையே என் தாய்மொழி!
இசையே என் தாய்மொழி!
<strong>இசையே என் தாய்மொழி!</strong>
பாட்டுத் தலைவன் பாடினால் பாட்டுத்தான்!
Total Pageviews
Total Pageviews
1 3 8 4 5 2 7
Popular Posts
Popular Posts
முந்தைய பதிவுகள்
பிற வலைத்தளங்கள்
Loading